மேலும் அறிய

Vijayakanth: மறைந்த விஜயகாந்த் உருவத்தை பழத்திலும், சோற்றிலும் வரைந்து அஞ்சலி செலுத்திய கோவை ரசிகர்கள்

விஜயகாந்த் இழப்பு திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலமானார். அவரின் இழப்பு திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த விஜயகாந்தின் உடல், நேற்று காலை முதல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதேநேரம், அது நகரின் முக்கிய இணைப்பு பகுதி என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில், இன்று காலை 6 மணியளவில் விஜயகாந்தின் உடன் தீவுத் திடல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 1 மணி வரை பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஊர்வலாமாக கொண்டு வரப்பட்டு மாலை 4.45 மணிக்கு தேமுதிக அலுவலகத்திலேயே விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதனிடையே விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா துறையினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


Vijayakanth: மறைந்த விஜயகாந்த் உருவத்தை பழத்திலும், சோற்றிலும் வரைந்து அஞ்சலி செலுத்திய கோவை ரசிகர்கள்

இந்த நிலையில் கோவையை சேர்ந்த காய்கனிசிற்ப கலைஞர் ஒருவர் விஜயகாந்த் உருவத்தை தர்பூசணி பழத்தில் அச்சு அசலாக செதுக்கி அஞ்சலி செலுத்தியுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை பூர்வீகமாக கொண்ட சந்தோஷ் என்பவர், கோவை பகுதியில் தங்கியிருந்து காய்கறி அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். காய் கனிகளில் சிற்பங்கள் செதுக்குவதையும் அவர் பொழுது போக்காக கொண்டுள்ளார். மறைந்த விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தர்பூசணி பழத்தில் அவரது உருவத்தை செதுக்கி சந்தோஷ் அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து சந்தோஷ் கூறுகையில், “சிறந்த மனிதர்களில் விஜயகாந்த் ஒருவர். அரசியலில் அவரது துணிவான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, 5.5 கிலோ தர்பூசணி பழத்தில், 3.5 மணி நேரம் அவரது உருவத்தை செதுக்கி அஞ்சலி செலுத்தியுள்ளேன்" என்றார்.

இதேபோல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சோற்றில் அவரது உருவ படத்தை வரைந்து யு.எம்.டி. ராஜா என்பவர் அஞ்சலி செலுத்தியுள்ளார். பசியாறும் சோற்றில் விஜய்காந்தின் ஓவியத்தை மஞ்சள் தூள் கலர் கொண்டு வரைந்துள்ளார். இது குறித்து யு.எம்.டி. ராஜா கூறுகையில், “ஏழைகள் யார் வந்தாலும் பசியாற உணவளித்து முகம் மகிழும் வள்ளலாக வாழ்ந்து வந்தவர் விஜயகாந்த். இதன் காரணமாகவே அவருக்கு உண்ணும் உணவில் மஞ்சல் கலந்து அவருடைய திரு உருவத்தை ஓவியமாக வரைந்தேன். இந்த ஓவியம் நாண்கு மணிநேரம் சமயம் எடுத்து வரைந்து அஞ்சலி செலுத்தினேன்” எனத் தெரிவித்தார்.


Vijayakanth: மறைந்த விஜயகாந்த் உருவத்தை பழத்திலும், சோற்றிலும் வரைந்து அஞ்சலி செலுத்திய கோவை ரசிகர்கள்

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் யு.எம்.டி. ராஜா. தங்க நகை வடிவமைப்பாளராக பணி புரிந்து வருகிறார். இதனிடையே ஓவியங்கள் மற்றும் தங்கத்தில் சிலைகள் வடிவமைப்பதில் பல்வேறு புதுமைகளை புகுத்தி பல்வேறு கலை படைப்புகளை உருவாக்குவதை வழக்கமாக செய்து வருகிறார். அதேபோல இவர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தங்கத்தில் சிற்பங்கள் செய்வது, ஓவியங்கள் வரைவது போன்ற வித்தியாசமான முயற்சிகளை செய்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget