மேலும் அறிய

Vijayakanth: மறைந்த விஜயகாந்த் உருவத்தை பழத்திலும், சோற்றிலும் வரைந்து அஞ்சலி செலுத்திய கோவை ரசிகர்கள்

விஜயகாந்த் இழப்பு திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலமானார். அவரின் இழப்பு திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த விஜயகாந்தின் உடல், நேற்று காலை முதல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதேநேரம், அது நகரின் முக்கிய இணைப்பு பகுதி என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில், இன்று காலை 6 மணியளவில் விஜயகாந்தின் உடன் தீவுத் திடல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 1 மணி வரை பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஊர்வலாமாக கொண்டு வரப்பட்டு மாலை 4.45 மணிக்கு தேமுதிக அலுவலகத்திலேயே விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதனிடையே விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா துறையினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


Vijayakanth: மறைந்த விஜயகாந்த் உருவத்தை பழத்திலும், சோற்றிலும் வரைந்து அஞ்சலி செலுத்திய கோவை ரசிகர்கள்

இந்த நிலையில் கோவையை சேர்ந்த காய்கனிசிற்ப கலைஞர் ஒருவர் விஜயகாந்த் உருவத்தை தர்பூசணி பழத்தில் அச்சு அசலாக செதுக்கி அஞ்சலி செலுத்தியுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை பூர்வீகமாக கொண்ட சந்தோஷ் என்பவர், கோவை பகுதியில் தங்கியிருந்து காய்கறி அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். காய் கனிகளில் சிற்பங்கள் செதுக்குவதையும் அவர் பொழுது போக்காக கொண்டுள்ளார். மறைந்த விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தர்பூசணி பழத்தில் அவரது உருவத்தை செதுக்கி சந்தோஷ் அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து சந்தோஷ் கூறுகையில், “சிறந்த மனிதர்களில் விஜயகாந்த் ஒருவர். அரசியலில் அவரது துணிவான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, 5.5 கிலோ தர்பூசணி பழத்தில், 3.5 மணி நேரம் அவரது உருவத்தை செதுக்கி அஞ்சலி செலுத்தியுள்ளேன்" என்றார்.

இதேபோல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சோற்றில் அவரது உருவ படத்தை வரைந்து யு.எம்.டி. ராஜா என்பவர் அஞ்சலி செலுத்தியுள்ளார். பசியாறும் சோற்றில் விஜய்காந்தின் ஓவியத்தை மஞ்சள் தூள் கலர் கொண்டு வரைந்துள்ளார். இது குறித்து யு.எம்.டி. ராஜா கூறுகையில், “ஏழைகள் யார் வந்தாலும் பசியாற உணவளித்து முகம் மகிழும் வள்ளலாக வாழ்ந்து வந்தவர் விஜயகாந்த். இதன் காரணமாகவே அவருக்கு உண்ணும் உணவில் மஞ்சல் கலந்து அவருடைய திரு உருவத்தை ஓவியமாக வரைந்தேன். இந்த ஓவியம் நாண்கு மணிநேரம் சமயம் எடுத்து வரைந்து அஞ்சலி செலுத்தினேன்” எனத் தெரிவித்தார்.


Vijayakanth: மறைந்த விஜயகாந்த் உருவத்தை பழத்திலும், சோற்றிலும் வரைந்து அஞ்சலி செலுத்திய கோவை ரசிகர்கள்

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் யு.எம்.டி. ராஜா. தங்க நகை வடிவமைப்பாளராக பணி புரிந்து வருகிறார். இதனிடையே ஓவியங்கள் மற்றும் தங்கத்தில் சிலைகள் வடிவமைப்பதில் பல்வேறு புதுமைகளை புகுத்தி பல்வேறு கலை படைப்புகளை உருவாக்குவதை வழக்கமாக செய்து வருகிறார். அதேபோல இவர் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தங்கத்தில் சிற்பங்கள் செய்வது, ஓவியங்கள் வரைவது போன்ற வித்தியாசமான முயற்சிகளை செய்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget