’ராகுல்காந்தியின் நடைபயணம் எந்த பயனையும் தராது’ - வானதி சீனிவாசன்
”காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல். ராகுல் காந்தி நடந்தாலும் சரி, ஓடிப் போனாலும் சரி, மாரத்தான் செய்தாலும் சரி அது எந்த பயனையும் தராது.”

காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல் எனவும், ராகுல் காந்தி நடந்தாலும், ஓடிப் போனாலும், மாரத்தான் செய்தாலும் எந்த பயனையும் தராது எனவும் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் கோவை மக்கள் சேவை மையம் சார்பாக கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய கைத்தறி நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, இந்த அணி வகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கைத்தறி ஆடைகளை அணிந்து மேடையில் கல்லூரி மாணவிகள் அணி வகுத்து நடந்து வந்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மற்றும் நடிகையும், பாஜக நிர்வாகியுமான காயத்திரி ரகுராம் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.
கோவை மக்கள் சேவை மையமும் Dream Zone நிறுவனமும் இணைந்து
5 வது ஆண்டாக நடத்தும் #தேசியகைத்தறிதினம் ‘கைத்தறி ஆடை அணிவகுப்பு’ நிறைவுவிழா.
போட்டியில் பங்கேற்ற 40 கல்லூரிகள், 1605 மாணவர்கள் , உதவிய ஆசிரியர்கள் & தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றி .
@narendramodi pic.twitter.com/z4BBOycJCk
">
இதனைத் தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “இறந்து போன காங்கிரஸ் கட்சிக்கு, ராகுல் காந்தியின் நடைபயணத்தின் மூலம் உயிரூட்ட முடியுமா என்று முயற்சி செய்து பார்க்கிறார்கள். ஆனால் சமீப காலமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தேசிய சிந்தனையால் ஈர்க்கப்பட்டு, மோடியின் செயல்பாடுகளால் அவர்கள் பாஜகவிற்க்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். கட்சியை மீட்க, ராகுல் காந்தியின் இந்த பலபரீட்சையில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல். ராகுல் காந்தி நடந்தாலும் சரி, ஓடிப் போனாலும் சரி, மாரத்தான் செய்தாலும் சரி அது எந்த பயனையும் தராது. கண் கெட்டபிறகு சூர்யநமஸ்காரம் செய்வது போல, ராகுல் காந்தியின் இந்த நடைபயணம் அவரது உடல் நலத்திற்க்கு நல்லதாக இருக்கலாம். இதனால் நாட்டிற்க்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு பயனும் இல்லை.
திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும், பொது மேடையிலே அவர்களின் தலைவர்களை வைத்துக் கொண்டு அநாகரிகமாக பேசும் கலச்சாரத்தை கொண்டு வந்ததே அவர்கள் தான். மாடல் மாடல் என்று சொல்கிறார்கள். அது தான் இந்த புதுமாடல். கோவை மாநகராட்சியின் 70 வார்டில் இருவர் ஒரே நேரத்தில் அமரும் வகையில் கட்டபட்டுள்ள கழிப்பறை கூட திராவிட மாடல் என்று மக்கள் பேசட்டும். இந்த கழிப்பறை சம்பந்தமாக மாநகராட்சி ஆணையரிடம் விளக்கம் கேட்க தான் போகிறோம். இதையெல்லாம் பார்க்கும் போது இந்த அரசாங்கம், மக்களைப் பற்றி கவலைப்படாமல், தங்களது காண்ராக்டர்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது” என அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
ட்ரெண்டிங் செய்திகள்






















