மேலும் அறிய

ஆப்ரேஷன் பாகுபலி: வனத்துறை வியூகங்கள் தோல்வி ; ரேடியோ காலர் பொருத்தும் பணி தற்காலிகமாக ஒத்திவைப்பு!

இதே சூழல் இருந்தால் பாகுபலி யானையை பிடிக்க முடியாது என்பதால், 10 நாட்களுக்கு யானையை கண்காணிக்க மட்டுமே முடிவு செய்துள்ளோம் என்கிறது வனத்துறை.

பாகுபலி காட்டு யானைக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணிகள் பத்து நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் தெரிவித்தார்.
 
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் பாகுபலி என அழைக்கப்படும் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் முடிவு செய்தனர். 'ஆப்ரேஷன் பாகுபலி' என்ற பெயரில் கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, ரேடியோ காலர் பொருத்த திட்டமிட்டனர். வனத்தில்  சுற்றி திரியும் பாகுபலி காட்டு யானையை பிடிக்க இரண்டாவது நாளாக வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். இன்று காலையில் யானையை நோக்கி துப்பாக்கி மூலம் சுடப்பட்ட மயக்க ஊசி தவறியது.

ஆப்ரேஷன் பாகுபலி: வனத்துறை வியூகங்கள் தோல்வி ; ரேடியோ காலர் பொருத்தும் பணி தற்காலிகமாக ஒத்திவைப்பு!
 
இதனையடுத்து காலை முதல் யானையை பின் தொடர்ந்த வனத்துறையினர் பிற்பகலில், பழங்களை வைத்து யானையை சமதள பரப்பிற்கு கொண்டு முயற்சி மேற்கொண்டனர். சமதள பரப்பிற்கு வந்த காட்டு யானையை வனத்துறையினர் பின் தொடர்ந்த நிலையில் அவர்களிடம் சிக்காமல் யானை மலைப்பகுதிக்குள் சென்றது. 5 மருத்துவ குழுவினர் வெவ்வேறு கோணங்களில் யானை மீது மயக்க ஊசி செலுத்த முயன்றனர். ஆனால் அனைவருக்கும் போக்குக் காட்டிய பாகுபலி யானை அடர் வனப்பகுதிக்குள் சென்றது. இரண்டாவது நாளாக வனத் துறையினர் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது.

ஆப்ரேஷன் பாகுபலி: வனத்துறை வியூகங்கள் தோல்வி ; ரேடியோ காலர் பொருத்தும் பணி தற்காலிகமாக ஒத்திவைப்பு!
 
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "அறிவியல் பூர்வமாக யானையின் நடமாட்டத்தை தெரிந்து கொள்ள ரேடியோ காலர் பொருத்தப்படுகின்றது. 25 நாட்களாக பின் தொடர்ந்து கண்காணித்து பின்னரே, ரேடியோ காலர் பொருத்த திட்டமிடப்பட்டது. நேற்றும் இன்றும் பல கிலோ மீட்டர் தூரம்  பின் தொடர்ந்த நிலையில் யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. மனிதர்களின் நடமாட்டம் தெரிந்து இருப்பதால் அது வனப்பகுதிக்குள் சென்று விட்டது. யானையை பிடிக்க பலவேறு முயற்சிகள் செய்தாலும், குறுக்கும் நெடுக்குமாக சென்றது. வன ஊழியர்களும் இந்த பணியில் திறம்பட ஈடுபட்டார்கள். இதே சூழல் இருந்தால் பாகுபலி யானையை பிடிக்க முடியாது என்பதால் 10 நாட்களுக்கு யானையை கண்காணிக்க மட்டுமே முடிவு செய்துள்ளோம். 10 நாட்கள் கழித்து பாகுபலி யானை இயல்பு நிலைக்கு வரும் போது, அதற்கு மயக்க ஊசி செலுத்தி ரேடியோ காலர் பொருத்தப்படும். அதுவரை தொடர்ந்து பாகுபலி யானையை கண்காணிப்பது என முடிவு செய்துள்ளோம். இந்த 10 நாட்களுக்கும் 3 கும்கி யானைகளும் மேட்டுப்பாளையத்திலேயே இருக்கும். பாகுபலி யானை இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் அதை பிடித்து ரேடியோ காலர் பொருத்தப்படும்" என அவர் தெரிவித்தார்
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget