மேலும் அறிய

ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு நீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கான டெண்டர் ரத்து

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து, ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு 930 கோடி ரூபாய் செலவில் 130 கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் எடுத்து செல்ல தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.

ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அரசு மறு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளதால், அதற்கான டெண்டர் ரத்து செய்யப்படுகிறது என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து, ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு 930 கோடி ரூபாய் செலவில் 130 கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் எடுத்து செல்ல தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. இத்திட்டம் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 506 கிராமங்களுக்கும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 22 கிராமங்களுக்கும் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு பொள்ளாச்சி பகுதியில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த திட்டத்தை கைவிட வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். 

பி.ஏ.பி என அழைக்கப்படும் பரம்பிக்குளம், ஆழியாறு பாசன திட்டத்தில் ஆழியாறு, பாலாறு படுகைகள் மூலம் 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதை தவிர ஆழியாறு, பாலாறு ஆறுகள் மூலம் பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.  பி.ஏ.பி. திட்டத்தில் கேரளாவிற்கு ஆண்டுதோறும் 19.55 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படுகிறது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 30.50 டி.எம்.சி. தண்ணீருக்கு பதிலாக சராசரியாக 22 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் கிடைத்து வருகிறது. இதில் சுமார் 3 டி.எம்.சி. குடிநீருக்கு எடுக்கப்படுகிறது. மீதமுள்ள 19 டி.எம்.சி. தண்ணீரை வைத்துக் கொண்டு 4.25 லட்சம் ஏக்கர் பாசனம் செய்யப்படுகிறது. பி.ஏ.பி. திட்டத்தில் நீர் பற்றாக்குறை உள்ள நிலையில் ஒட்டன்சத்திரம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லக் கூடாது என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனிடையே ஆழியார் அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்வதை கண்டித்து, பொள்ளாச்சி பகுதி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில், ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் விவசாயம் பாதிக்கப்படும். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.


ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு நீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கான டெண்டர் ரத்து

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லக்கூடாது எனவும், ஆழியார் அணை நீரை கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட்டு மாற்றுத் திட்டத்தை அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர். மேலும் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் எனவும், விவசாயிகளின் நலன் கருதி இத்திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அரசு மறு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளதால், அதற்கான டெண்டர் ரத்து செய்யப்படுகிறது என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் முருகேசன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொள்ளாச்சி பகுதி விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
Embed widget