மேலும் அறிய

நெற்றியில் ’மாரிதாஸ் வாழ்க’, கையில் ‘திமுக ஒழிக’ என்ற வாசகத்துடன் சுற்றிய இளைஞர்- கூட்டிச்சென்று போலீஸ் விசாரணை

’ஃபாரின் மதநெறி திமுக சிற்றரசு ஒழிக’, ‘எல்லா புகழும் நம் நாட்டு சாமிக்கே. பாரின் மத God no ues’  என்றும் எழுதி வந்தார். 'Use' என்பதை ‘Ues' என தவறாக எழுதியிருந்தார்.

மாரிதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெற்றியில் ’மாரிதாஸ் வாழ்க’ என்றும், கைகளில் ’திமுக ஒழிக’ என்றும் எழுதியபடி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜக ஆதரவாளரும், யூடியூபருமான மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தி.மு.க ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் சைபர்கிரைம் காவல் துறையினரிடம்  புகார் அளித்தார். இதனையடுத்து புகாரின் அடிப்படையில் மதுரை புதூர் சூர்யாநகர் பகுதியை சேர்ந்த யூடியுப்பரும் பாஜக ஆதரவாளருமான மாரிதாஸை மாநிலத்தின் பொது அமைதியை சீர்குலைத்தல் , தமிழக அரசு மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து தனியார் தொலைக்காட்சி குறித்து போலி இமெயில் மூலம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.


நெற்றியில் ’மாரிதாஸ் வாழ்க’, கையில் ‘திமுக ஒழிக’ என்ற வாசகத்துடன் சுற்றிய இளைஞர்- கூட்டிச்சென்று போலீஸ் விசாரணை

மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரூர் பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் அவரது நெற்றியில் ’மாரிதாஸ் வாழ்க’ என்றும் கைகளில் ’ஃபாரின் மதநெறி திமுக சிற்றரசு ஒழிக’, ‘எல்லா புகழும் நம் நாட்டு சாமிக்கே. பாரின் மத God no ues’  என்றும் எழுதி வந்தார். 'Use' என்பதை ‘Ues' என தவறாக எழுதியிருந்தார்.


நெற்றியில் ’மாரிதாஸ் வாழ்க’, கையில் ‘திமுக ஒழிக’ என்ற வாசகத்துடன் சுற்றிய இளைஞர்- கூட்டிச்சென்று போலீஸ் விசாரணை

கந்தசாமியிடம் செய்தியாளர்கள் விசாரித்த போது ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்கவோ, ஆர்ப்பாட்டம் செய்யவோ வரவில்லை எனவும், முறையான பதிலளிக்காமல் மலுப்பலான பதில்களை தெரிவித்தார். மாரிதாசை எதற்காக கைது செய்தனர் எனக் கேட்டதற்கு, “அந்தளவிற்கு எனக்கு டிடெயில்ஸ் தெரியாது. ஏனா நான் உணர்வில் தான் இருக்கிறேன். நான் எந்த கட்சியிலும் இல்லை. எந்த இயக்கத்திலும் இல்லை. இந்த நாட்டில் இந்து என்ற உணர்வில் தான் இருக்கிறேன்” என்றார். மாரிதாஸ் யார் எனத் தெரியுமா செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஓ தெரியுமே. நியாயமாக பேசுபவர்” என பதிலளித்தார்.   

இதையடுத்து பந்தயசாலை காவல் துறையினர் கந்தசாமியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனி ஒருவனாக மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாசகங்களை எழுதி வந்த நபரால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விளம்பரத்திற்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget