மேலும் அறிய

’கோவையில் கொரோனா மூன்றாவது அலையால் அதிகளவு பாதிப்பு இருக்க வாய்ப்புண்டு’ – எச்சரிக்கும் கண்காணிப்பு அலுவலர்

மூன்றாவது அலை ஓரே மாதத்தில் கூட வரலாம் என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசு மருத்துவமனை, இ.எஸ்ஐ மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. - சித்திக்

கோவையில் கொரோனா மூன்றாவது அலையால் அதிகளவு பாதிப்பு இருக்க  வாய்ப்புண்டு எனவும், இதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சித்திக் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து  மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், வணிக வரித்துறை ஆணையருமான  சித்திக் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் கோவை மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில்  பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சித்திக், “கோவை மாவட்டத்தில் சராசரியாக 200 புதிய நபர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோவையில் மக்களுக்கு கொரொனா எதிர்ப்பு சக்தி 43 சதவீதமாக இருக்கின்றது. சென்னையில் கோவிட் எதிர்ப்பு சக்தி  78 சதவீதமாக இருக்கின்றது. எதிர்ப்பு சக்தி 43 சதவீதமாக இருப்பதால், கோவையில கொரோனா மூன்றாவது அலையால் அதிகளவு பாதிப்பு இருக்க  வாய்ப்புண்டு. இதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் கூட மூன்றாவது அலை வர வாய்ப்புண்டு.

முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். தற்போது முழு ஊரடங்கு இல்லாமல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது. இதை தொடர்ந்தால் முழு ஊரடங்கை தள்ளிவைக்கவும்,  தவிர்க்கவும் வாய்ப்புண்டு. கோவையில் தற்போது எதிர்ப்பு சக்தி  43 சதவீதமாக இருக்கும் நிலையில் இதை அதிகரிக்க தடுப்பூசி மட்டுமே வழி. கோவைக்கு தடுப்பூசிகள் அதிகம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 3 வது அலை ஓரே மாதத்தில் கூட வரலாம் என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசு மருத்துவமனை, இ.எஸ்ஐ மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் எல்லா மாவட்டங்களிலும் பாதிப்பு வர வாய்ப்பு குறைவு. அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் தேவையான ஆக்ஸிஜன் படுக்கை, வென்டிலேட்டர்கள் இருகின்றது. ஒரு வாரத்தில் படுக்கைகளை உயர்த்தி கொள்ள முடியும். ஆக்ஸிஜன் டேங்க் ஓன்று சென்னையில் இருந்து கோவை மருத்துவமனைக்கு மாற்றப்படுகின்றது.

கோவையில் முன் தயாரிப்புகள்   இருப்பதால், நிறைய உயிர் சேதம் இல்லாமல் 3 வது அலையை  நம்மால் எதிர் கொள்ள முடியும் எனவும், அடுத்த 2 மாதங்களுக்கு மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த முறை குழந்தைகளுக்கு பாதிப்பு வந்தால் அதை எதிர் கொள்ள தயாராக இருக்கின்றோம். அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு 124 ஆக்ஸிஜன் படுக்கைகளும், 82 ஐ.சி.யு படுக்கைகளும் தயாராக இருக்கின்றது. இ.எஸ்.ஐ மருதரதுவமனையில் 40 ஆக்ஸிஜன் படுக்கைகளும், 30 ஐ.சி.யு படுக்கைகளும் குழந்தைகளுக்கு தயாராக இருக்கின்றது. மூன்றாவது அலையை எதிர்கொள்ள தேவையான மருத்துவர்களும் கோவையில்  இருக்கின்றனர்” என அவர் தெரிவித்தார். பேட்டியின் போது மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
Embed widget