மேலும் அறிய

சத்குரு கோவைக்கு கிடைத்த ஆசிர்வாதம்! கர்மா புத்தக அறிமுக விழாவில் அன்னபூர்ணா ஶ்ரீனிவாசன் புகழாரம்!

ஈஷா லைஃப் சார்பாக சத்குருவின் புதிய தமிழ் புத்தகமான 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' கோவையில் (ஆக 18) அறிமுகம் செய்யப்பட்டது.

சத்குரு கோவைக்கு கிடைத்த ஆசீர்வாதம்!

கர்மா புத்தக அறிமுக விழாவில் அன்னபூர்ணா ஶ்ரீனிவாசன் புகழாரம்!

ஈஷா லைஃப் சார்பாக சத்குருவின் புதிய தமிழ் புத்தகமான 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' கோவையில்  (ஆக 18) அறிமுகம் செய்யப்பட்டது. இவ்விழாவில் பேசிய அன்னபூர்ணா ஸ்ரீனிவாசன் அவர்கள், சத்குரு உலகம் முழுவதும் சுற்றினாலும் அவர் இருப்பது கோயம்புத்தூர், இதை விட கோவை மக்களுக்கு வேறென்ன ஆசீர்வாதம் இருக்க முடியும் எனக் கூறினார். 

கோவை பீளமேட்டில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் அசெம்பிளி ஹாலில் நடைபெற்ற விழாவில் புத்தகத்தின் அறிமுகப் பிரதியை ஶ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் திரு. டி. ஶ்ரீனிவாசன் அவர்கள் வெளியிட அதனை சப்னா புக் ஹவுஸின் தலைமை நிர்வாகி திரு. வி. கார்த்திகேயன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.  பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் திரு. எஸ்.வி. பாலசுப்ரமணியம் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். 

அவரைத் தொடர்ந்து அன்னபூர்ணா ஶ்ரீனிவாசன் அவர்கள் பேசுகையில் "இந்த புத்தகத்தை தொடர் வாசிப்பின் மூலம் ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள முடியும். என் தந்தையும் சத்குருவும் நல்ல நண்பர்கள். சத்குரு ஆரம்ப காலங்களில் என் தந்தையை அவ்வப்போது நேரடியாக சந்தித்து பேசுவார். அப்படி ஒரு முறை அவர் பேசிவிட்டு சென்ற பின் என் தந்தை என்னிடம் சொன்னார் 'இன்று கோவையை தேடி வந்திருக்கும் இவரைத் தேடி, ஒரு நாள் கோவையே செல்லும்” என்றார். என்னுடைய இளம் வயதில் என் தந்தை சொன்னது இன்றும் நினைவில் ஆழமாக உள்ளது. 

அவர் கூறியதைப் போன்று அந்த பரிணாம வளர்ச்சியை நான் பார்த்து வருகிறேன். இன்று உலக வரைபடத்தில் ஈஷா இருக்கிறது. அங்கு வந்து செல்லாத தலைவர்களே கிடையாது. மேலும் ஆதியோகியை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகிறார்கள். வெளியூரில் இருந்து வருகிறவர்கள் ஈஷா பார்க்க வேண்டும் என்று வருகிறார்கள்.

குறிப்பாக எங்களுடைய ஹோட்டலில் பெரும்பாலும் வந்து தங்கி செல்பவர்கள் ஈஷாவிற்கு வருகிறவர்களாக இருக்கின்றனர். மேலும் விமானத்தில் நீங்கள் வெளிநாட்டினர் யாரையாவது பார்த்தால் அவர்கள் ஈஷாவிற்கு வருகிறவர்களாக தான் இருப்பார்கள். இது எல்லாம் நமக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. சில நேரங்களில் அருகில் இருப்பதால் அதன் அருமை தெரியாமல் போகும். 

சத்குரு உலகம் முழுவதும் சுற்றினாலும் அவர் இருப்பது கோயம்புத்தூர், இதை விட கோவை மக்களுக்கு வேறென்ன ஆசீர்வாதம் இருக்க முடியும். கோவையில் சத்குரு அவர்கள் அடிக்கடி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அவரைப் போன்ற குரு எங்களுக்கு தேவை" என நெகிழ்ச்சியுடன் கூறினார். 

மேலும் வழக்கறிஞர் சுமதி மற்றும் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் கர்மா தமிழ் புத்தகம் குறித்து சிறப்புரை வழங்கினர். சுவாரஸ்யமான கருத்துக்களோடு புத்தகம் குறித்து இவர்கள் ஆற்றிய சிறப்புரையை விழாவில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான ஈஷா தன்னார்வலர்களும், பொது மக்களும் மிகவும் ரசித்து கேட்டனர். 

"கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' புத்தகம் முதலில் 2021-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. ஆங்கிலப் புத்தகம் வெளியானது முதல் தற்போது வரை பல லட்சக்கணக்கான பிரதிகளுக்கு மேல் விற்று சாதனை படைத்து வருகிறது.

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் புத்தக வாசிப்பாளர்களால் ஆங்கில புத்தகத்திற்கு சர்வதேச அளவில் 4.7  ரேட்டிங்கும் (மதிப்பீடு), 15,000-க்கும் அதிகமான மதிப்புரைகளும் வழங்கப்பட்டு உள்ளது. இப்புத்தகம் 'NewYork Best Seller" லிஸ்ட்டில் இடம்பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 25-க்கும் அதிகமான உலக மொழிகளில் இந்த புத்தகத்தின் மொழிபெயர்ப்பு உரிமம் கையெழுத்தாகி உள்ளது.

உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற இப்புத்தகம் தற்போது தமிழில் அறிமுகம் செய்யப்படுவது வாசகர்கள், தமிழ் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பலத்த வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget