மேலும் அறிய

தருமபுரியில் உள்ள தீர்த்தமலையை சுற்றுலாதலமாக அறிவிக்க பொதுமக்கள் கோரிக்கை

தமிழ் பண்பாட்டின்  அடையாளமாக விளங்கி வரும் அரூர் அடுத்த தீர்த்தமலையை சுற்றுலா தலமாக்க, நிதி நிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தை பொறுத்த மட்டில் பலராலும் அறியப்பட்ட சுற்றுலா தலமாக ஒகேனக்கல் உள்ளது. ஆனால் மாவட்டத்தில் பெரும்பாலான வரலாற்றுச் சின்னமாய் விளங்கும் புகழ்பெற்ற புண்ணிய தலமாய் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் விளங்குகிறது. தமிழ் பண்பாட்டு சின்னமாகவும், புனிதமும், இயற்கை அழகும் நிறையப் பெற்ற இத்தலம் தீர்த்தமலை, அருணகிரிநாதரால் பாடப்பெற்ற தலமாகும். சுமார் 1500 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது தீர்த்தகிரீஸ்வரர் கோயில்.
 
சிவனை மதிக்காமல் பார்வதியின்  தகப்பனார்,  தக்சன் நடத்திய யாகத்திற்கு விஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட அனைத்து தேவர்களையும் அழைத்துள்ளார். ஆனால் சிவனை மட்டும் அழைக்கவில்லை. அப்போது தன்னை மதிக்காமல் தட்சன் நடத்தும் யாகத்திற்கு அனைத்து தேவர்களும் சென்றதால், கோபமடைந்த சிவன் அவர்கள் கண்களுக்கு புலப்படாமல் இருக்கவே இந்த மலையில் வந்து தவம் மேற்கொண்டதாக இக்கோயிலின் ஸ்தல வரலாறு கூறுகிறது.
தீர்த்தமலை  ஒரு திசையில் இருந்து பார்க்கும்போது ஜடாமுடிகளுடன் கூடிய சிவபெருமானின் சிரம் போலவும், வடதிசையில் மூன்று சடைகளும், தென்திசையில் 4 சடைகளும் தோன்றும். அதன் நடுவே நிறைமதி வடிவாகி, கோமகன் போல் வலது புறத்தில் லிங்க வடிவமாக விளங்கித் தோன்றும். இத்தகைய சிறப்பு வாய்ந்த தீர்த்தமலையில் ராம தீர்த்தம், கௌரி தீர்த்தம், குமார தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம், அக்னி தீர்த்தம் என 5 தீர்த்தங்கள் உள்ளது. 
 
தருமபுரியில் உள்ள தீர்த்தமலையை சுற்றுலாதலமாக அறிவிக்க பொதுமக்கள் கோரிக்கை
இதில் ராமன் வனவாசத்தில் இருந்த போது சீதை சிறை பிடிக்கப்பட்டாள். அப்போது அவரை மீட்கும் போரில், ராமனால் ராவணன் கொல்லப்படுகிறான். அப்போது ராமனுக்கு  தோஷம் பற்றிக் கொள்கிறது. அந்த தோஷம் நீங்க வேண்டுமானால் தீர்த்தமலையில் உள்ள சிவனை வணங்க வேண்டும் என்று முனிவர்கள் கூறவே, ராமன் இங்கு வருகிறான். அங்கு அவர்கள் நீராடி தவம் புரிய தண்ணீர் இல்லை. அப்போது  உடனே கங்கையிலிருந்து தண்ணீர் கொண்டு வர அனுமனை அனுப்பினார். ஆனால் அனுமன் வர தாமதமானதால், சீதாதேவி பஞ்சாட்சர மந்திரத்தை வேண்டினார். அந்த நேரத்தில் மலையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும்  நீர் வர தொடங்கி கலசங்களை நிரப்பியது. அந்த நீரைக் கொண்டு, ராமன், சிவனை அபிஷேகம் செய்தார்.  அவ்வாறு ராமனுக்காக  உருவாக்கப்பட்ட தீர்த்தம் தான் ராம தீர்த்தம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் இந்த சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்கள் பாவம், சனி தோஷம் நீங்க வேண்டி, இந்த தீர்த்தத்தில் புனித நீராடிவிட்டு செல்கின்றனர்.
 
இப்படியான இடத்தில்  புனித நீராடிவிட்டு, சாமி தரிசனம் செய்ய விஷேச நாட்களை தவிர, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த திருத்தலத்தை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. எனவே வருகிற நிதிநிலை அறிக்கையில், தீர்த்தமலையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் தருமபுரி மாவட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
coimbatore power cut: கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget