மேலும் அறிய

தருமபுரியில் உள்ள தீர்த்தமலையை சுற்றுலாதலமாக அறிவிக்க பொதுமக்கள் கோரிக்கை

தமிழ் பண்பாட்டின்  அடையாளமாக விளங்கி வரும் அரூர் அடுத்த தீர்த்தமலையை சுற்றுலா தலமாக்க, நிதி நிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தை பொறுத்த மட்டில் பலராலும் அறியப்பட்ட சுற்றுலா தலமாக ஒகேனக்கல் உள்ளது. ஆனால் மாவட்டத்தில் பெரும்பாலான வரலாற்றுச் சின்னமாய் விளங்கும் புகழ்பெற்ற புண்ணிய தலமாய் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் விளங்குகிறது. தமிழ் பண்பாட்டு சின்னமாகவும், புனிதமும், இயற்கை அழகும் நிறையப் பெற்ற இத்தலம் தீர்த்தமலை, அருணகிரிநாதரால் பாடப்பெற்ற தலமாகும். சுமார் 1500 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது தீர்த்தகிரீஸ்வரர் கோயில்.
 
சிவனை மதிக்காமல் பார்வதியின்  தகப்பனார்,  தக்சன் நடத்திய யாகத்திற்கு விஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட அனைத்து தேவர்களையும் அழைத்துள்ளார். ஆனால் சிவனை மட்டும் அழைக்கவில்லை. அப்போது தன்னை மதிக்காமல் தட்சன் நடத்தும் யாகத்திற்கு அனைத்து தேவர்களும் சென்றதால், கோபமடைந்த சிவன் அவர்கள் கண்களுக்கு புலப்படாமல் இருக்கவே இந்த மலையில் வந்து தவம் மேற்கொண்டதாக இக்கோயிலின் ஸ்தல வரலாறு கூறுகிறது.
தீர்த்தமலை  ஒரு திசையில் இருந்து பார்க்கும்போது ஜடாமுடிகளுடன் கூடிய சிவபெருமானின் சிரம் போலவும், வடதிசையில் மூன்று சடைகளும், தென்திசையில் 4 சடைகளும் தோன்றும். அதன் நடுவே நிறைமதி வடிவாகி, கோமகன் போல் வலது புறத்தில் லிங்க வடிவமாக விளங்கித் தோன்றும். இத்தகைய சிறப்பு வாய்ந்த தீர்த்தமலையில் ராம தீர்த்தம், கௌரி தீர்த்தம், குமார தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம், அக்னி தீர்த்தம் என 5 தீர்த்தங்கள் உள்ளது. 
 
தருமபுரியில் உள்ள தீர்த்தமலையை சுற்றுலாதலமாக அறிவிக்க பொதுமக்கள் கோரிக்கை
இதில் ராமன் வனவாசத்தில் இருந்த போது சீதை சிறை பிடிக்கப்பட்டாள். அப்போது அவரை மீட்கும் போரில், ராமனால் ராவணன் கொல்லப்படுகிறான். அப்போது ராமனுக்கு  தோஷம் பற்றிக் கொள்கிறது. அந்த தோஷம் நீங்க வேண்டுமானால் தீர்த்தமலையில் உள்ள சிவனை வணங்க வேண்டும் என்று முனிவர்கள் கூறவே, ராமன் இங்கு வருகிறான். அங்கு அவர்கள் நீராடி தவம் புரிய தண்ணீர் இல்லை. அப்போது  உடனே கங்கையிலிருந்து தண்ணீர் கொண்டு வர அனுமனை அனுப்பினார். ஆனால் அனுமன் வர தாமதமானதால், சீதாதேவி பஞ்சாட்சர மந்திரத்தை வேண்டினார். அந்த நேரத்தில் மலையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும்  நீர் வர தொடங்கி கலசங்களை நிரப்பியது. அந்த நீரைக் கொண்டு, ராமன், சிவனை அபிஷேகம் செய்தார்.  அவ்வாறு ராமனுக்காக  உருவாக்கப்பட்ட தீர்த்தம் தான் ராம தீர்த்தம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் இந்த சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்கள் பாவம், சனி தோஷம் நீங்க வேண்டி, இந்த தீர்த்தத்தில் புனித நீராடிவிட்டு செல்கின்றனர்.
 
இப்படியான இடத்தில்  புனித நீராடிவிட்டு, சாமி தரிசனம் செய்ய விஷேச நாட்களை தவிர, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த திருத்தலத்தை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. எனவே வருகிற நிதிநிலை அறிக்கையில், தீர்த்தமலையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் தருமபுரி மாவட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
தொடரும் கட்டப்பஞ்சாயத்துகள் ; ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம் - தாக்குதலுக்கு ஆளான அவலம்...!  
மயிலாடுதுறை அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டை சுற்றி வேலி அமைத்த அவலம்.
ஒரே ஒரு போன் கால், அரசு மருத்துவமனைக்கு விரைந்த ஆட்சியர்; இதுதான் விஷயம்..!
வலியால் துடித்த கர்ப்பிணி, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்து ஆட்சியர் எடுத்த நடவடிக்கை.
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
Embed widget