மேலும் அறிய

கோவையில் பரபரப்பு... லாரி அடுத்தடுத்து வாகனங்கள், வீட்டின் மீது மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

கோவையில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி அடுத்தடுத்து வாகனங்கள் மற்றும் சாலையோர வீட்டின் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் நோக்கி சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, சேலம் - கொச்சின் புறவழிச்சாலை வழியாக சென்றது. அந்த லாரி கோவை மாவட்டம் மதுக்கரை சுங்கச்சாவடி அருகே இன்று அதிகாலையில் வந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அப்போது எதிரே வந்த மற்றொரு லாரி மற்றும் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துள்ளானது. மேலும் அதிக பாரத்துடன் இருந்ததால் அடுத்ததடுத்து  இரும்பு அறிவிப்பு பலகைகள் மற்றும் சாலை ஓரத்தில் வீட்டுடன் இருந்த கடை மீது மோதி நின்றது. 

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த பாலத்துறை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (35) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் பாஸ்கரன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த மதுக்கரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காலை நேரத்தில் வீட்டின் வெளியே யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவையில் பரபரப்பு... லாரி அடுத்தடுத்து வாகனங்கள், வீட்டின் மீது மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

இதேபோல கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் வரும் பேருந்துகள் சேலம் - கொச்சின்  தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது தொடர்ந்து செல்வதால் கருமத்தம்பட்டி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு செல்லக்கூடிய பயணிகள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததை அடுத்து  சூலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தத்துக்கு வராமல் பாலத்தின் மீது சென்ற  பேருந்துகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில் நேற்று ஏராளமான கல்லூரி மாணவிகள்  கருமத்தம்பட்டி செல்வதற்காக கோவையில் இருந்து திருப்பூர் செல்லும் தனியார் பேருந்துகளில் ஏறி உள்ளனர். அதற்கு பேருந்து நடத்துனர்கள் கருமத்தம்பட்டிக்குள் செல்லாது எனக்கூறி உள்ளனர். 

இது குறித்து அப்பெண்கள் அவரது உறவினர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பெண்களின் உறவினர்கள் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கருமத்தம்பட்டி பகுதிக்கு வராமல் பாலத்தின் மீது சென்ற இரண்டு தனியார் பேருந்துகளை தேசிய நெடுஞ்சாலையில்  சிறை பிடித்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பேருந்துகளை  மீண்டும் கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தம் வழியாக செல்ல வலியுறுத்தி நடத்துனர்கள், ஓட்டுனர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தம் வழியாக பேருந்துகள் சென்றது.  

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”தொடர்ச்சியாக கருமத்தம்பட்டி பகுதிக்குள் திருப்பூர், ஈரோடு மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் ஏதும் வராததால் கருமத்தம்பட்டி சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்லக்கூடிய பயணிகள், கல்லூரி மாணவ மாணவிகள், வேலைக்கு செல்வோர் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணித்து கருமத்தம்பட்டிக்குள் பேருந்து வந்து செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விடுவதால் விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளது” எனத் தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget