மேலும் அறிய

கோவையில் பரபரப்பு... லாரி அடுத்தடுத்து வாகனங்கள், வீட்டின் மீது மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

கோவையில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி அடுத்தடுத்து வாகனங்கள் மற்றும் சாலையோர வீட்டின் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் நோக்கி சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, சேலம் - கொச்சின் புறவழிச்சாலை வழியாக சென்றது. அந்த லாரி கோவை மாவட்டம் மதுக்கரை சுங்கச்சாவடி அருகே இன்று அதிகாலையில் வந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அப்போது எதிரே வந்த மற்றொரு லாரி மற்றும் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துள்ளானது. மேலும் அதிக பாரத்துடன் இருந்ததால் அடுத்ததடுத்து  இரும்பு அறிவிப்பு பலகைகள் மற்றும் சாலை ஓரத்தில் வீட்டுடன் இருந்த கடை மீது மோதி நின்றது. 

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த பாலத்துறை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (35) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் பாஸ்கரன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த மதுக்கரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காலை நேரத்தில் வீட்டின் வெளியே யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவையில் பரபரப்பு... லாரி அடுத்தடுத்து வாகனங்கள், வீட்டின் மீது மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

இதேபோல கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் வரும் பேருந்துகள் சேலம் - கொச்சின்  தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது தொடர்ந்து செல்வதால் கருமத்தம்பட்டி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு செல்லக்கூடிய பயணிகள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததை அடுத்து  சூலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தத்துக்கு வராமல் பாலத்தின் மீது சென்ற  பேருந்துகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில் நேற்று ஏராளமான கல்லூரி மாணவிகள்  கருமத்தம்பட்டி செல்வதற்காக கோவையில் இருந்து திருப்பூர் செல்லும் தனியார் பேருந்துகளில் ஏறி உள்ளனர். அதற்கு பேருந்து நடத்துனர்கள் கருமத்தம்பட்டிக்குள் செல்லாது எனக்கூறி உள்ளனர். 

இது குறித்து அப்பெண்கள் அவரது உறவினர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பெண்களின் உறவினர்கள் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கருமத்தம்பட்டி பகுதிக்கு வராமல் பாலத்தின் மீது சென்ற இரண்டு தனியார் பேருந்துகளை தேசிய நெடுஞ்சாலையில்  சிறை பிடித்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பேருந்துகளை  மீண்டும் கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தம் வழியாக செல்ல வலியுறுத்தி நடத்துனர்கள், ஓட்டுனர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தம் வழியாக பேருந்துகள் சென்றது.  

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”தொடர்ச்சியாக கருமத்தம்பட்டி பகுதிக்குள் திருப்பூர், ஈரோடு மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் ஏதும் வராததால் கருமத்தம்பட்டி சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்லக்கூடிய பயணிகள், கல்லூரி மாணவ மாணவிகள், வேலைக்கு செல்வோர் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணித்து கருமத்தம்பட்டிக்குள் பேருந்து வந்து செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விடுவதால் விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளது” எனத் தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget