மேலும் அறிய

Local Body Election | உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கைது

"தேர்தலை முறையாக நடத்தும் பொறுப்புள்ள மாநில தேர்தல் ஆணையமே முறைகேட்டிற்கு துணை நிற்கிறது. பறக்கும்படை அப்பாவி மக்களின் வாகனங்களை சோதனை போட்டுவிட்டு, ஓட்டுக்கு பணம் கொடுக்கும் போது பறந்து போய்விட்டது"

வருகின்ற 19ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் சமூக வலைதளங்களிலும், வீடு வீடாக சென்றும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும், ஓட்டுக்கு பணம், பொருள் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் அவ்வமைப்பினர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Local Body Election | உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கைது

இது குறித்து அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறும் போது, ”நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் தற்போது ஓட்டுக்கு பணம், பொருள் கொடுப்பது வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல் என்பதால் இதனை தடுக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொள்ள கூட அனுமதி தரவில்லை. நீதிமன்றம் சென்று அதற்கான உத்தரவை பெற்று வந்ததற்கு பின்பும் அனுமதி கடிதம் கொடுக்க காலதாமதம் செய்து வருகின்றனர். காலநீட்டிப்பு செய்து கொடுத்தால் அதற்குள் தேர்தல் பிரச்சார நேரம் முடிந்துவிடும் என்பதால் இவர்களால் பிரச்சாரம் செய்யவே வாய்ப்பில்லை என நினைக்கின்றனர்.

ஜனநாயக நாட்டில் ஜனநாயகம் பறிபோவதைப் பற்றி பேசக்கூட இயலாத நிலை உள்ளது என்பது மிகவும் வேதனையானதாகும். ஆங்கிலேயர் ஆட்சியில் கூட இப்படி ஒரு நிலை இருந்ததில்லை. தேர்தலை முறையாக நடத்தும் பொறுப்புள்ள மாநில தேர்தல் ஆணையமே முறைகேட்டிற்கு துணை நிற்கிறது. அவர்களால் அமைக்கப்பட்ட பறக்கும்படை அப்பாவி மக்களின் வாகனங்களை சோதனை போட்டுவிட்டு தற்போது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் போது பறந்து போய்விட்டது. ஓட்டுக்கு பணம்,பொருள் கொடுப்பது தீவிரமாக,முழுமையாக,வெளிப்படையாக நடைபெற்று வருவதால் இந்த தேர்தல் ஒரு சதவீதம் கூட நியாயமான தேர்தல் அல்ல.  ஏலம் விடுவதைவிட மிக மோசமான தேர்தலாகத் தான் இந்த தேர்தல் உள்ளது. அதனால் இந்த உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும். ஓட்டுக்கு பணம், பொருள் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தேர்தல் தொடர்பான முறைகேடுகளை விசாரிக்க அரசு தலையீடு இல்லாத நீதிபதி தலைமையில்  தனி ஆணையம் அமைக்கப்பட வேண்டும்” என அவர் தெரிவித்தார்.


Local Body Election | உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கைது

இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை காவல் துறை கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில், ‘ஓட்டுக்கு பணம் தர மாட்டேன்’ பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கலந்து கொண்ட உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் நடத்தியது குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சித் தேர்தலை இரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புLoan Agent Harassment | ’’ரோட்டுல தள்ளி அடிச்சாங்க குழந்தை ABORTION ஆகிடுச்சு’’ கலங்கி நிற்கும் தாய் | VPMNamakkal Collector : ’’பாதையை அடைச்சா அவ்ளோதான்’’அதிகாரிகளை அலறவிட்ட கலெக்டர்..காலில் விழுந்த மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.