மேலும் அறிய

Local Body Election | உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கைது

"தேர்தலை முறையாக நடத்தும் பொறுப்புள்ள மாநில தேர்தல் ஆணையமே முறைகேட்டிற்கு துணை நிற்கிறது. பறக்கும்படை அப்பாவி மக்களின் வாகனங்களை சோதனை போட்டுவிட்டு, ஓட்டுக்கு பணம் கொடுக்கும் போது பறந்து போய்விட்டது"

வருகின்ற 19ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் சமூக வலைதளங்களிலும், வீடு வீடாக சென்றும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும், ஓட்டுக்கு பணம், பொருள் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் அவ்வமைப்பினர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Local Body Election | உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கைது

இது குறித்து அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறும் போது, ”நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் தற்போது ஓட்டுக்கு பணம், பொருள் கொடுப்பது வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல் என்பதால் இதனை தடுக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொள்ள கூட அனுமதி தரவில்லை. நீதிமன்றம் சென்று அதற்கான உத்தரவை பெற்று வந்ததற்கு பின்பும் அனுமதி கடிதம் கொடுக்க காலதாமதம் செய்து வருகின்றனர். காலநீட்டிப்பு செய்து கொடுத்தால் அதற்குள் தேர்தல் பிரச்சார நேரம் முடிந்துவிடும் என்பதால் இவர்களால் பிரச்சாரம் செய்யவே வாய்ப்பில்லை என நினைக்கின்றனர்.

ஜனநாயக நாட்டில் ஜனநாயகம் பறிபோவதைப் பற்றி பேசக்கூட இயலாத நிலை உள்ளது என்பது மிகவும் வேதனையானதாகும். ஆங்கிலேயர் ஆட்சியில் கூட இப்படி ஒரு நிலை இருந்ததில்லை. தேர்தலை முறையாக நடத்தும் பொறுப்புள்ள மாநில தேர்தல் ஆணையமே முறைகேட்டிற்கு துணை நிற்கிறது. அவர்களால் அமைக்கப்பட்ட பறக்கும்படை அப்பாவி மக்களின் வாகனங்களை சோதனை போட்டுவிட்டு தற்போது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் போது பறந்து போய்விட்டது. ஓட்டுக்கு பணம்,பொருள் கொடுப்பது தீவிரமாக,முழுமையாக,வெளிப்படையாக நடைபெற்று வருவதால் இந்த தேர்தல் ஒரு சதவீதம் கூட நியாயமான தேர்தல் அல்ல.  ஏலம் விடுவதைவிட மிக மோசமான தேர்தலாகத் தான் இந்த தேர்தல் உள்ளது. அதனால் இந்த உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும். ஓட்டுக்கு பணம், பொருள் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தேர்தல் தொடர்பான முறைகேடுகளை விசாரிக்க அரசு தலையீடு இல்லாத நீதிபதி தலைமையில்  தனி ஆணையம் அமைக்கப்பட வேண்டும்” என அவர் தெரிவித்தார்.


Local Body Election | உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கைது

இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை காவல் துறை கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில், ‘ஓட்டுக்கு பணம் தர மாட்டேன்’ பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கலந்து கொண்ட உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் நடத்தியது குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சித் தேர்தலை இரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
Embed widget