மேலும் அறிய

சவுக்கு சங்கர் கையில் இரண்டு இடங்களில் முறிவு - வழக்கறிஞர் பரபரப்பு புகார்

சவுக்கு சங்கர் கையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் கையில் 2 இடங்களில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக வழக்கறிஞர் பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.

கோவை நீதிமன்ற வளாகத்தில் யூ டியூபர் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தோம். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் கையில் 2 இடங்களில் முறிவு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. சவுக்கு சங்கருக்கு மாவு கட்டு போட்டுள்ளனர். சிகிச்சைக்கு பின்பு தான் மன அழுத்ததில் இருந்து வெளியே வந்துள்ளதாக சவுக்கு சங்கர் தெரிவித்தார். இப்போது சிறையில் தாக்கப்பட்டது உறுதியாகி உள்ளது. கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் காவலில் எடுப்பதாக மனு அளித்த இருந்த நிலையில், அதை பின் வாங்கி உள்ளனர்.

திங்கள்கிழமை கட்டு மாற்ற மீண்டும் அரசு மருத்துவமனைக்கு சவுக்கு சங்கர் அழைத்து வர வேண்டும். அதே போன்று கஷ்டடி மனு தொடர்பாக திங்கள்கிழமை சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளனர். 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டதாக சிறையில் உள்ள சவுக்கு சங்கரிடம்  ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சவுக்கு சங்கருக்கு போராடி சிகிச்சை பெற்று உள்ளோம். வலது கையில் தான் சிறைக்கு சென்ற பின்பு தான் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தேனியில் அதிகாலை 1.30 மணிக்கு சவுக்கு சங்கரை கைது செய்துள்ளனர். ஆனால், காலை 8 மணிக்கு மேல் தான் கஞ்சா வைத்திருந்தாக வழக்கு பதியப்பட்டுள்ளது. ரொம்ப மெனக்கிட்டு கஞ்சா வழக்கு போலீசார் போட்டுள்ளனர். ஆனால் கஞ்சா வழக்கு பொய் வழக்கு என நிருப்பிக முடியும் என சவுக்கு சங்கர் கூறியுள்ளார். அதற்கான ஆதாரங்களை அவர் வைத்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

சவுக்கு சங்கர் மீதான வழக்குகள்

பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா கொடுத்த புகாரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது தேனி மாவட்ட காவல் துறையினர் கஞ்சா வழக்கு பதிவு செய்த நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கரை தேனி காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல திருச்சி மாநகர காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில் அங்கு வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அந்த வழக்கிலும்  கோவை சிறையில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் மற்றும் தமிழர் முன்னேற்ற படையைச் சேர்ந்த வீரலட்சுமி ஆகியோர் சென்னை காவல் துறையினரிடம் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படயில் வழக்குப்பதிவு செய்த சென்னை காவல் துறையினர், கோவை மத்திய சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை கைது செய்தனர். இதற்கான உத்தரவினை சென்னை காவல் துறையினர் சவுக்கு சங்கரிடம் வழங்கினர். இதுவரை ஐந்து வழக்குகளில் யூ டியுபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், அடுத்தடுத்து அந்த வழக்குகளிலும் அவரை கைது செய்ய காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Coimbatore power cut: கோவையில் நாளை (09-06-2026) எந்தெந்த பகுதிகளில் மின் தடை? - லிஸ்டை வெளியிட்ட மின்வாரியம்
கோவையில் நாளை (09-06-2026) எந்தெந்த பகுதிகளில் மின் தடை? - லிஸ்டை வெளியிட்ட மின்வாரியம்
கோவை நீதிமன்ற வளாகத்தில் பிணமாக கிடந்த வட மாநில வாலிபர்!.. கொலை செய்யப்பட்டது அம்பலம்.
கோவை நீதிமன்ற வளாகத்தில் பிணமாக கிடந்த வட மாநில வாலிபர்!.. கொலை செய்யப்பட்டது அம்பலம்.
கோவையில் போலீசார் அதிரடி நடவடிக்கை ; பீகாரில் இருந்து கடத்திய 45 கிலோ கஞ்சா பறிமுதல் . மூன்று பேர் கைது!
கோவையில் போலீசார் அதிரடி நடவடிக்கை ; பீகாரில் இருந்து கடத்திய 45 கிலோ கஞ்சா பறிமுதல் . மூன்று பேர் கைது!
வயநாடு பேரிடர் பாடம்: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன- செங்கோட்டையன்.
வயநாடு பேரிடர் பாடம்: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன- செங்கோட்டையன்.

வீடியோ

Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
C. Vijayabasker : 'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
DMK: கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
'இண்டியா கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்’ நடக்கப்போவது என்ன?
Embed widget