மேலும் அறிய

கொங்குநாடு: ‛யூனியன் பிரதேசம் வேண்டாம்... மாநிலம் தான் வேண்டும் ‛-கொ.மு.க., பெஸ்ட் ராமசாமி!

தமிழ்நாட்டின் 66 சதவிகித வருமானம் கொங்கு நாட்டின் 11 மாவட்டங்களில் இருந்து அரசுக்கு செல்கிறது. அந்த வருவாயை பெற்றுக் கொண்டு கொங்கு பகுதிகளுக்கு அரசு எதுவும் செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு.

அனைத்து சமூகத்தினரையும் ஒன்று சேர்த்து கொங்கு நாடு தனி மாநிலம் உருவாக்க போராட உள்ளதாக கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமி தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களை கொங்குநாடு என்ற பெயரில் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து கொங்குநாடு பிரிவினைக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொங்குநாடு தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கொங்குநாடு: ‛யூனியன் பிரதேசம் வேண்டாம்... மாநிலம் தான் வேண்டும் ‛-கொ.மு.க., பெஸ்ட் ராமசாமி!

இது தொடர்பாக கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ”காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்து தமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அண்மையில் கூட சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. அவை அப்பகுதிகளின் வளர்ச்சிக்காக பிரிக்கப்பட்டுள்ளன.  கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்கள் கொங்கு மண்டலத்தில் உள்ளன. தமிழ்நாட்டின் 66 சதவிகித வருமானம் கொங்கு நாட்டின் 11 மாவட்டங்களில் இருந்து அரசுக்கு செல்கிறது. அந்த வருவாயை பெற்றுக் கொண்டு கொங்கு பகுதிகளுக்கு அரசு எதுவும் செய்யப்படவில்லை. கொங்குப் பகுதி வறட்சி பகுதி. அரசு விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. வளர்ந்து வரும் கொங்குப் பகுதியில் தொழில்கள் மேம்பட உரிய வசதிகள் செய்யவில்லை. கொங்குப் பகுதியில் உள்ள மாவட்டங்களில் போதிய சாலை வசதிகள் இல்லை. கொங்கு பகுதி மக்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவது இல்லை. கொங்கு மண்டலம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. கொங்கு மண்டலம் வளர்ச்சி அடைய வேண்டும். கொங்கு நாடு முன்னேற வேண்டும். என்பதே எங்களது நோக்கம். எனவே கொங்குநாடு தனி மாநிலமாக உருவாக்க வேண்டும். கொங்குநாடு தனி யூனியன் பிரதேசம் கேட்கவில்லை. கொங்குநாட்டிற்கு தனி மாநில அந்தஸ்து தான் வேண்டும்.

கொங்கு நாடு தனி மாநில கோரிக்கை தொடர்பாக மத்திய அரசுக்கு மனு அனுப்ப உள்ளோம். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்ததில் தங்களுக்கு உடன்பாடு இல்லை. பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு தான் சரியாக இருக்கும். கொங்கு நாடு தனி மாநிலம் என்பது கவுண்டர் சமூகத்திற்கு மட்டுமானது என சிலர் நினைக்கின்றனர். ஆனால் கொங்கு நாடு என்பது கொங்கு மண்டலத்தில் வாழும் அனைத்து சமூகத்துக்குமானது. அனைத்து சமூகத்தையும் ஒன்று சேர்த்து கொங்கு நாடு தனி மாநிலம் உருவாக்க போராட உள்ளோம்” என அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?
Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?
Breaking News LIVE: உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை வரவேற்கிறேன் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை வரவேற்கிறேன் - முதலமைச்சர் ஸ்டாலின்
EXCLUSIVE: ”நடுரோட்ல நிக்கற மாதிரி இருக்கு”- நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மாறிய வினாத்தாள்- தூத்துக்குடியில் சர்ச்சை
”நடுரோட்ல நிக்கற மாதிரி இருக்கு”: நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மாறிய வினாத்தாள்- தூத்துக்குடியில் சர்ச்சை
"பிரதமர் மோடி கொடுத்த தைரியம்" மனம் திறந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar Chennai Travel  : மீண்டும் வேனில் பயணமா? கதறும் சவுக்கு சங்கர்! கோவை To சென்னை!Rahul Travel Govt Bus : ஸ்டாலின் ஸ்டைலில் ராகுல்! ஒன்றுகூடிய பெண்கள்! அரசு பேருந்தில் பயணம்!TN 10th Result 2024  : 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு.. எந்த மாவட்டம் முதலிடம்? முழு விவரம்Rahul Gandhi Slams Modi  :”மோடி-ன் பொய் வாக்குறுதி இளைஞர்களே நம்பாதீர்கள்” ராகுல்  பகீர் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?
Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?
Breaking News LIVE: உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை வரவேற்கிறேன் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை வரவேற்கிறேன் - முதலமைச்சர் ஸ்டாலின்
EXCLUSIVE: ”நடுரோட்ல நிக்கற மாதிரி இருக்கு”- நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மாறிய வினாத்தாள்- தூத்துக்குடியில் சர்ச்சை
”நடுரோட்ல நிக்கற மாதிரி இருக்கு”: நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மாறிய வினாத்தாள்- தூத்துக்குடியில் சர்ச்சை
"பிரதமர் மோடி கொடுத்த தைரியம்" மனம் திறந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!
Gold Price Rise: மீண்டும்.. மீண்டுமா? ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை!
Gold Price Rise: மீண்டும்.. மீண்டுமா? ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை!
பாலியல் வீடியோ விவகாரம்.. பிரஜ்வல் ரேவண்ணா பற்றி கேள்வி.. புரியாமல் நின்ற நமீதா.. வீடியோ
பாலியல் வீடியோ விவகாரம்.. பிரஜ்வல் ரேவண்ணா பற்றி கேள்வி.. புரியாமல் நின்ற நமீதா.. வீடியோ
Arvind Kejriwal Timeline: அமலாக்கத்துறை உடனான அரவிந்த் கெஜ்ரிவாலின் சட்டப் போராட்டம்.. கடந்து வந்த பாதை!
அமலாக்கத்துறை உடனான அரவிந்த் கெஜ்ரிவாலின் சட்டப் போராட்டம்.. கடந்து வந்த பாதை!
Arvind Kejriwal Bail: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்! தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி!
Arvind Kejriwal Bail: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்! தேர்தல் பரப்புரையில் ஈடுபட அனுமதி!
Embed widget