மேலும் அறிய

கோவையில் தூய்மை பணியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

தூய்மை பணியாளர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

கோவை மாவட்டத்தில் அரசு அறிவித்த கூலியை வழங்க வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக திரும்ப பெறப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். தொடர் போராட்டங்கள் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கூலி நிர்ணயம் செய்யப்பட்டது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 648 ரூபாயும், நகராட்சி பகுதிகளில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 606 ரூபாயும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 529 ரூபாயும் என நிர்ணயம் செய்யப்பட்டது.

கூலி நிர்ணயம் செய்யப்பட்டாலும் அதைவிட குறைவான கூலியே ஒப்பந்தத்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அரசு நிர்ணயித்த கூலி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்து தூய்மை பணியாளர் தொழிற்சங்கத்தினர் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில், நேற்று கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒப்பந்த தூய்மை பணியாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர். இதனையடுத்து கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 648 ரூபாய் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 412 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகின்றது எனவும், நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 606 ரூபாய் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் 475 ரூபாய் மட்டுமே வழங்கபடுகின்றது எனவும், பேரூராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 529 ரூபாய் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் 475 ரூபாய் மட்டுமே வழங்கபடுகின்றது எனவும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர். அரசு நிர்ணயம் செய்த கூலியை வழங்க வேண்டும் எனவும், மேலும்தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க கூடாது எனவும் கூறிய தூய்மை பணியாளர்கள், எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடருமென தெரிவித்தனர். தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக கோவை மாநகரில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடந்தனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு பணிக்கு திரும்பினர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.!  56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! 56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Embed widget