மேலும் அறிய

கேரள பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு ; கொரோனா பரவல் தடுப்புக்காக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு!

72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட, கொரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி இரண்டு தவணை செலுத்திக் கொண்ட சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்குள் வர அனுமதி அளிக்கப்படும்

கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய கடைகள் தவிர்த்த மற்ற அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து வரும் பயணிகளால் கொரோனா தொற்று பரவல் ஏற்படுகிறது என்பதால், கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள 13 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


கேரள பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு ; கொரோனா பரவல் தடுப்புக்காக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு!

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் கேரளாவில் இருந்து வருபவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட, கொரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி இரண்டு தவணை செலுத்திக் கொண்ட சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்குள் வர அனுமதி அளிக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். அச்சான்றிதழ் இல்லாதவர்களுக்கு சோதனைச் சாவடியிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் மாநில எல்லைகளில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


கேரள பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு ; கொரோனா பரவல் தடுப்புக்காக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு!

கேரள மாநிலத்தின் முக்கிய நுழைவாயிலான கோவை மாவட்டம் வாளையார் பகுதியில் சுகாதாரத் துறையினர் மற்றும் காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து வரும் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பயணிகளிடம் சான்றிதழ்கள் சோதனை செய்த பின்னரே, தமிழ்நாட்டிற்குள் வர அனுமதிக்கின்றனர். கொரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது தடுப்பூசி சான்றிதழ் இன்றி வருவோரை மீண்டும் கேரளாவிற்கே திருப்பி அனுப்பி வருகின்றனர். அவசர தேவை என்றால் மட்டும், சோதனைச் சாவடியில் கொரோனா பரிசோதனை செய்த பின் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது தடுப்பூசி சான்றிதழ் இல்லாமல் வாளையாறு வந்த 50 வாகனங்கள் கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதுவரை கேரளாவில் இருந்து கோவை வந்த 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


கேரள பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு ; கொரோனா பரவல் தடுப்புக்காக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு!

இதேபோல கோவை இரயில் நிலையத்திலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளிடமும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி சான்றிதழ் உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தப்படுகிறது. இல்லையெனில் இரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
OnePlus 15R Leaked Details: மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
Embed widget