மேலும் அறிய

மேற்கு மாவட்டங்களில் கவனிக்க வேண்டிய முக்கியச் செய்திகள்.!

தொடர் மழை, பள்ளிகளுக்கு விடுமுறை, பரபரக்கும் கோடநாடு வழக்கு உள்ளிட்ட முக்கியச் செய்திகள் இதோ...

வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும், பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார். மாவட்டம் முழுவதும் 21 குறைந்த பதட்டம் மிகுந்த இடங்களாக கண்டறியப்பட்டு, சிறப்புக் குழுக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவை வாலாங்குளம் நிரம்பி வெளியேறும் உபரி நீர் சாக்கடை கால்வாய் வழியாக சாலையில் ஆறு போல ஓடி வருகிறது. ராமநாதபுரம், ஒலம்பஸ், உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் சாக்கடை நீரோடு கலந்து ஓடி வருகிறது. இன்றும் நிற்காமல் வெள்ள நீர் செல்கிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை கலைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தனபால், ரமேஷ் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீலகிரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவரை கனகராஜ் வீட்டில் இருந்து 3 செல்போன்கள் மற்றும் 6 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக நீலகிரி மாவட்ட காவல் துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி தொற்ற்று பாதிப்புகள் நூறுக்கும் குறைவாக பதிவாகி வந்த நிலையில், நேற்று சற்று அதிகரித்து மீண்டும் நூறை கடந்துள்ளது.

கோவை பி.ஆர்.எஸ். காவலர் குடியிருப்பில் அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து 32 சவரண் தங்கநகை, 90 ஆயிரம் பணம், மடிக்கணினி உள்ளிட்டவை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பந்தயசாலை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வானிலை ஆய்வுமையத்தால் புயல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாலும், சேலம் மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை யொட்டியும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று சேலம் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

சேலத்தில் கடந்த வாரம் குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் அவ்வழியே போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், ஒரு வாரத்திற்கு பின்னர் சாலை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து துவங்கியது.

தொடர் மழை காரணமாக தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வாணியாறு உபரிநீர் திறப்பால், 3 ஏரிகள் நிரம்பியது. இதனால் அப்பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர் வரத்து சரிந்து வருகிறது. நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களாக நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget