மேலும் அறிய

Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?

Cuddalore Train Accident Train Name: கடலூரில் பள்ளி வேன் மீது மோதிய பயணிகள் ரயில் விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்ற பாசஞ்சர் ரயில் ஆகும்.

Cuddalore Train Accident Train Name:  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள செம்மங்குப்பம் அருகே பயணிகள் ரயில் மீது பள்ளி வேன் மோதிய விபத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கோர விபத்தில் மாணவி ஒருவர் உள்பட பள்ளி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

விழுப்புரம் - மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில்:

இந்த சம்பவத்திற்கு காரணமான ரயில் விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்ற பாசஞ்சர் ரயில் ஆகும். இந்த ரயில் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு கடலூர் ஆலப்பாக்கம் தாண்டி கடலூர் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, செம்மங்குப்பம் அருகே இந்த விபத்து அரங்கேறியுள்ளது. இந்த ரயில் மோதிய வேகத்தில் பள்ளி வேன் 50 அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தில் பள்ளி வேனில் பயணித்த மாணவர் நிமலேஷ் சம்பவ இடத்திலே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளி மாணவர்களின் புத்தகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பது பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?

இந்த விபத்தால் ரயில் நிறுத்தப்பட்டது. மேலும், ரயில் கம்பிகளும் அறுந்து விழுந்தது. இதனால், அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்களும் பாதிவழியிலே நிறுத்தப்பட்டது. அந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. ரயில்வே துறை சார்பில் இன்டர்லாக்கிங் சிஸ்டம் பணியாற்றவில்லை என்றும், பள்ளி வேன் ஓட்டுனர் கட்டாயப்படுத்தியதாலே கேட்கீப்பர் திறந்ததாக ரயில்வே நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விபத்தில் உயிர் பிழைத்த மாணவன் விஸ்வேஷ் ரயில்வே கேட் திறந்தே இருந்தது என்றும், கேட்கீப்பர் பங்கஜ் சர்மா உள்ளே உட்கார்ந்து இருந்தார் என்றும் பேட்டி அளித்துள்ளார்.

போலீசார் விசாரணை:

மேலும், விபத்திற்கு காரணமான ஓட்டுனர் சங்கரும் ரயில்வே கேட் திறந்து இருந்ததாகவும், ரயில் சென்றுவிட்டதாக கருதியே வேனை ஓட்டியதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே போலீசாரும், தமிழக போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மக்கள் சோகம்:

அலட்சியமாக செயல்பட்ட பங்கஜ்குமார் ரயில்வே துறையால் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனால், கடலூர் மாவட்டம் முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது.


Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?

விபத்தில் உயிர்பிழைத்த மாணவன் விஸ்வேஷிற்கு தரமான சிகிச்சை வழங்க மருத்துவர்களிடம் அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சோக நிகழ்வுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்த மாணவர்களுக்கு அப்பகுதி மக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் மட்டுமின்றி அந்த மாணவர்களின் நண்பர்களும் தங்களது பெற்றோர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Embed widget