மேலும் அறிய

பள்ளிக்கூடமாக மாறிய சமுதாயக்கூடம் ; ஆசிரியர்களாக மாறிய பட்டதாரிகள்..!

ஊரடங்கில் அதிகமான பெண் குழந்தை திருமணங்கள் நடைபெற்றன. அதேபோல பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்தன. பள்ளிகள் இருக்கும் போது இது போன்ற நிலை இல்லை.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளும், கல்வித் தொலைக்காட்சியில் வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. அதேசமயம் இந்த வசதிகள் கிடைக்காத மலைப்பகுதிகளிலும், அடர்ந்த வனங்களிலும் வசிக்கும் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது. பல இடங்களில் மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறி வருவது நடந்து வருகிறது. அதே போல குழந்தை திருமணங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவும், மாணவர்களின் கல்வி தொடர வேண்டுமென்பதற்காகவும் ஆங்காங்கே பட்டதாரிகள் ஆசிரியர்களாக மாறி பாடம் எடுத்து வருகின்றனர்.


பள்ளிக்கூடமாக மாறிய சமுதாயக்கூடம் ; ஆசிரியர்களாக மாறிய பட்டதாரிகள்..!

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது, செம்மனரை பழங்குடியின கிராமம். இக்கிராமத்தில் இருளர், குரும்பர் ஆகிய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். 120 வீடுகள் உள்ள இக்கிராமத்தில் சுமார் 100 குழந்தைகள் உள்ளனர். இக்குழந்தைகள் அருகேயுள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த திருமூர்த்தி, சுதா, பார்வதி, மகேந்திரன் ஆகியோர் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சமுதாய கூடம் வகுப்பறையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு சுமார் 60 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர்.


பள்ளிக்கூடமாக மாறிய சமுதாயக்கூடம் ; ஆசிரியர்களாக மாறிய பட்டதாரிகள்..!

இதுகுறித்து எம்.பில் பட்டதாரியான திருமூர்த்தி கூறுகையில், “கொரோனா தொற்று மற்றும் ஊரடரங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கில் அதிகமான பெண் குழந்தை திருமணங்கள் நடைபெற்றன. அதேபோல பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்தன. பள்ளிகள் இருக்கும் போது இது போன்ற நிலை இல்லை. ஊரடங்கில் குழந்தைகள் கிராமத்தில் முடங்கியுள்ள நிலையில், இவை அதிகரித்துள்ளன. எனவே இந்நிலையை மாற்ற வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தைகளை வரவழைத்தோம். சமுதாயக் கூடத்தை வகுப்பறையாக மாற்றி, பாடம் நடத்தி வருகிறோம்.


பள்ளிக்கூடமாக மாறிய சமுதாயக்கூடம் ; ஆசிரியர்களாக மாறிய பட்டதாரிகள்..!

ஒன்றாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்துகிறோம். பள்ளிக்கூடம் போலவே காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வீட்டில் இருந்து மாணவர்களை உணவு எடுத்து வருகின்றனர். பழங்குடி குழந்தைகள் சொந்த மொழியில் பேசுகின்றனர். அவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பேசுவதில் சிரமங்கள் உள்ளது. அதனால் பழங்குடியினரின் சொந்த மொழியில் பேச வைத்து, அதன் மூலம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளை கற்றுத் தருகிறோம். அன்னா, ஆவண்ணா கூட தெரியாத குழந்தைகள் கல்வி ரீதியாக நல்ல நிலைக்கு வருகின்றனர். விளையாட்டு மற்றும் ஓவியங்களுக்கு முக்கியத்துவம் அளித்து கற்றுத் தருகிறோம். குழந்தைகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகின்றனர். அருமையாக படித்து வருகின்றனர்.


பள்ளிக்கூடமாக மாறிய சமுதாயக்கூடம் ; ஆசிரியர்களாக மாறிய பட்டதாரிகள்..!

செம்மனரை பகுதியில் நண்பர்களுடன் இணைந்து ஒரு மளிகைக் கடை நடத்தி வருகிறோம். சேவை நோக்கத்தில் நடத்தப்படும் அக்கடை மூலம் குறைந்த விலையில், தானிய வகை, கீரை உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறோம். இதனால் அப்பகுதி மக்களின் ஆரோக்கியம் அதிகரித்துள்ளது” என அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget