மேலும் அறிய

பள்ளிக்கூடமாக மாறிய சமுதாயக்கூடம் ; ஆசிரியர்களாக மாறிய பட்டதாரிகள்..!

ஊரடங்கில் அதிகமான பெண் குழந்தை திருமணங்கள் நடைபெற்றன. அதேபோல பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்தன. பள்ளிகள் இருக்கும் போது இது போன்ற நிலை இல்லை.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளும், கல்வித் தொலைக்காட்சியில் வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. அதேசமயம் இந்த வசதிகள் கிடைக்காத மலைப்பகுதிகளிலும், அடர்ந்த வனங்களிலும் வசிக்கும் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது. பல இடங்களில் மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறி வருவது நடந்து வருகிறது. அதே போல குழந்தை திருமணங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவும், மாணவர்களின் கல்வி தொடர வேண்டுமென்பதற்காகவும் ஆங்காங்கே பட்டதாரிகள் ஆசிரியர்களாக மாறி பாடம் எடுத்து வருகின்றனர்.


பள்ளிக்கூடமாக மாறிய சமுதாயக்கூடம் ; ஆசிரியர்களாக மாறிய பட்டதாரிகள்..!

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது, செம்மனரை பழங்குடியின கிராமம். இக்கிராமத்தில் இருளர், குரும்பர் ஆகிய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். 120 வீடுகள் உள்ள இக்கிராமத்தில் சுமார் 100 குழந்தைகள் உள்ளனர். இக்குழந்தைகள் அருகேயுள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த திருமூர்த்தி, சுதா, பார்வதி, மகேந்திரன் ஆகியோர் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சமுதாய கூடம் வகுப்பறையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு சுமார் 60 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர்.


பள்ளிக்கூடமாக மாறிய சமுதாயக்கூடம் ; ஆசிரியர்களாக மாறிய பட்டதாரிகள்..!

இதுகுறித்து எம்.பில் பட்டதாரியான திருமூர்த்தி கூறுகையில், “கொரோனா தொற்று மற்றும் ஊரடரங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கில் அதிகமான பெண் குழந்தை திருமணங்கள் நடைபெற்றன. அதேபோல பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்தன. பள்ளிகள் இருக்கும் போது இது போன்ற நிலை இல்லை. ஊரடங்கில் குழந்தைகள் கிராமத்தில் முடங்கியுள்ள நிலையில், இவை அதிகரித்துள்ளன. எனவே இந்நிலையை மாற்ற வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தைகளை வரவழைத்தோம். சமுதாயக் கூடத்தை வகுப்பறையாக மாற்றி, பாடம் நடத்தி வருகிறோம்.


பள்ளிக்கூடமாக மாறிய சமுதாயக்கூடம் ; ஆசிரியர்களாக மாறிய பட்டதாரிகள்..!

ஒன்றாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்துகிறோம். பள்ளிக்கூடம் போலவே காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வீட்டில் இருந்து மாணவர்களை உணவு எடுத்து வருகின்றனர். பழங்குடி குழந்தைகள் சொந்த மொழியில் பேசுகின்றனர். அவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பேசுவதில் சிரமங்கள் உள்ளது. அதனால் பழங்குடியினரின் சொந்த மொழியில் பேச வைத்து, அதன் மூலம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளை கற்றுத் தருகிறோம். அன்னா, ஆவண்ணா கூட தெரியாத குழந்தைகள் கல்வி ரீதியாக நல்ல நிலைக்கு வருகின்றனர். விளையாட்டு மற்றும் ஓவியங்களுக்கு முக்கியத்துவம் அளித்து கற்றுத் தருகிறோம். குழந்தைகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகின்றனர். அருமையாக படித்து வருகின்றனர்.


பள்ளிக்கூடமாக மாறிய சமுதாயக்கூடம் ; ஆசிரியர்களாக மாறிய பட்டதாரிகள்..!

செம்மனரை பகுதியில் நண்பர்களுடன் இணைந்து ஒரு மளிகைக் கடை நடத்தி வருகிறோம். சேவை நோக்கத்தில் நடத்தப்படும் அக்கடை மூலம் குறைந்த விலையில், தானிய வகை, கீரை உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறோம். இதனால் அப்பகுதி மக்களின் ஆரோக்கியம் அதிகரித்துள்ளது” என அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (ஜூலை 18) எத்தனை இடங்களில் பவர் கட் இருக்கு? பட்டியல் வந்தாச்சு
கோவையில் நாளை (ஜூலை 18) எத்தனை இடங்களில் பவர் கட் இருக்கு? பட்டியல் வந்தாச்சு
கோவையில் நாளை மின்தடை: உங்க பகுதி இதில் உள்ளதா?
கோவையில் நாளை மின்தடை: உங்க பகுதி இதில் உள்ளதா?
கோவையில் நாளை (16-07-2026) எந்தெந்த இடங்களில் பவர் கட்? - எத்தனை மணி நேரம் இருக்காது?
கோவையில் நாளை (16-07-2026) எந்தெந்த இடங்களில் பவர் கட்? - எத்தனை மணி நேரம் இருக்காது?
Coimbatore power cut: நாளை (ஜூலை 15) கோவையில் முழு நேர மின்தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க
நாளை (ஜூலை 15) கோவையில் முழு நேர மின்தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
Rohit Sharma: ”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
Embed widget