மேலும் அறிய

Crime : ஒரு லட்சம் பணம் கொடுத்தால் 2 லட்சம் பணம் - வெள்ளைக் காகிதங்களைத் தந்து மோசடி

ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் இரண்டு லட்சம் தருவதாக வெள்ளை காகிதங்களை கொடுத்து மோசடி செய்யப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் இரண்டு லட்சம் தருவதாக வெள்ளை காகிதங்களை கொடுத்து மோசடி  செய்யப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருவேங்கடசாமி. இவர் மோட்டார் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் வேலை பார்க்கும் கம்பெனிக்கு கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மோட்டார் சரி செய்ய வந்துள்ளார். அப்போது கேரளாவை சேர்ந்த மணிகண்டன் எனது முதலாளி கார்த்தி என்பவர் கருப்பு பணம் நிறையாக வைத்துள்ளார். ஆகையால் நீங்கள் ஒரு லட்சம் கொடுத்தால் இரண்டு லட்சம் தருவதாக கூறியுள்ளார். இந்த சமயத்தில் திருவேங்கட சாமிக்கு பணம் இல்லையே எனக் கூறி வந்துள்ளார்

இதனை அடுத்து மணிகண்டன் மெக்கானிக் திருவேங்கட சாமிக்கு தினமும் கால் பண்ணி பணம் ரெடி ஆகி விட்டதா வாங்கிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்களுக்கு பணம் கிடைக்காது சீக்கிரம் வாருங்கள் என்று கூறியுள்ளார். இதனை நம்பி திருவேங்கட சாமிக்கு தெரிந்த பைனான்சியர் கணேஷ் என்பவரிடம் நடந்த விஷயத்தை கூறியுள்ளார். இதனை எடுத்து கணேஷ் நான் ஒரு லட்சம் உங்களிடம் தருகிறேன் நீங்கள் பணத்தை வாங்கி வாருங்கள் நீங்கள் 50,000 எடுத்து விட்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் எனக்கு கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு கால் செய்து பணம் ரெடியாக உள்ளது எங்கு வந்து வாங்கிக் கொள்ளலாம் என்று மெக்கானிக் திருவேங்கடசாமி கேட்டுள்ளார்.

இதனை அடுத்து ஆனைமலை அருகே உள்ள அம்பராம்பாளையத்திற்கு வாருங்கள் உங்களுக்கு பணம் கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். பணம் கிடைக்கும் ஆசையில் திருவேங்கடசாமி அம்பராம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்துள்ளார். அங்கு காத்திருந்த கேரள மாநிலம் கோழிக்கோடு சேர்ந்த கார்த்தி மற்றும் மணிகண்டன் ஆகியோர் ஒரு லட்சத்தை வாங்கி விட்டு இதில் நான்கு 500 ரூபாய் கட்டுகளில் இரண்டு லட்சம் இருக்கிறது வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் கேரளா நோக்கி சென்று விட்டனர். அவர்கள் சென்றவுடன் பணம் கிடைத்த ஆசையில் பணத்தின் கட்டுகளை எண்ணிப் பார்க்க பிரித்துப் பார்த்துள்ளார். 

அப்போது முன்பக்கம் 500 ரூபாய் நோட்டுகள் போல இருந்த காகிதத்தின், பின்பக்கம் வெள்ளை காகிதமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஆனைமலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் சரவணம்பட்டியை சேர்ந்த மெக்கானிக் திருவேங்கட சாமியை ஆனைமலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளை பேப்பர்களை கொடுத்து ஏமாற்றிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

ஏற்படுத்தி உள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget