மேலும் அறிய

’புலி ஆட்கொல்லியாக மாறுவது இயல்பான நடைமுறை தான்’ – #saveT23 குறித்து சூழலியல் செயற்பாட்டாளர் ராமமூர்த்தி கருத்து..!

’’புலிகளுக்கு வயதாவதும் இறப்பதும் ஏன் எதேச்சையாக ஆட்திண்ணிகளாவதும் ஒரு இயல்பான நடைமுறைதான். இதனை நாம் அதீத உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு அறிவியல் பூர்வமாக நோக்குவதே நல்லது’’

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வருகிறது. ’ஆப்ரேசன் டி 23’ என்ற பெயரில் புலியை பிடிக்கும் பணிகளில் வனத்துறையினர் பத்து நாட்களாக போராடி வருகின்றனர். இதனிடையே டி 23 புலியை சுட்டுக் கொல்ல எதிர்ப்பு தெரிவித்து, நடிகர் கமல்ஹாசன், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிசாசன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் #saveT23 என்ற ஹேஷ்டேக்கை ட்ரண்டாக்கி வருகிறது.

இது குறித்து சூழலியல் செயற்பாட்டாளர் ராமமூர்த்தி தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில், ”டி 23 புலி, கிட்டத்தட்ட பதிமூன்று வயதான புலி. அதிலும் குறிப்பாக மிகுந்த காயம் ஏற்பட்டு, இயற்கையான முறையில் தனது உணவை தாமே தேடிக்கொள்ள இயலாத நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள். இந்த நிலையில்தான் ஒரு புலியானது காட்டுயிர்களை வேட்டையாட முடியாத நிலையில், எளிதாக கிடைக்க கூடிய வளர்ப்பு விலங்குகளை தேடி மனிதக் குடியிருப்புகளை நோக்கி வரும்.

இந்தச் சூழ்நிலையில் எதேச்சையாக மனிதர்களை வேட்டையாடும் நிலை ஏற்படும். மற்ற அனைத்து விலங்குகளையும் வேட்டையாடுவதையும் விட மனிதர்களை வேட்டையாடுவதென்பது எளிதிலும் எளிது. மனிதனை தின்னத் துவங்கிவிட்டால் அந்த வேட்டை செயல் முறையை அதற்கு பின்னர் அந்தப் புலி நிறுத்தவே நிறுத்தாது என்பதே உண்மை.


’புலி ஆட்கொல்லியாக மாறுவது இயல்பான நடைமுறை தான்’ – #saveT23 குறித்து சூழலியல் செயற்பாட்டாளர் ராமமூர்த்தி கருத்து..!

இந்த நிலையில் இதைப் பிடித்து வேறுகாடுகளுக்கு மாற்றினாலும் இந்தப் புலி இயற்கையான முறையில் வேட்டையாட முடியாத நிலையில் இருப்பதால் மீண்டும் மனித குடியிருப்புகளை நோக்கியே நகரும். மீண்டும் மீண்டும் புதுப் புது பிரச்சினைகள்தான் உருவாகத்தான் வாய்ப்புள்ளது. ஒன்றை நினைவு கொள்ளுங்கள் பாதுகாப்பான சூழலில் வாழ்ந்துகொண்டு நாம் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், மனிதர்களது ஒத்துழைப்பின்றி எந்த காட்டுயிகளையும் இன்றைய காலச் சூழ்நிலையில் காப்பது என்பது மிக மிக சிரமமான காரியம்.

பொதுவாக காடுகளில் இயற்கைச் சூழலில் புலிகளின் சராசரி ஆயுள்காலம் என்பது, பதினான்கு வயது அதற்கு மேல் அந்தப் புலிக்கு இயற்கையாகவே உடல் ரீதியாக பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் நம்ம T23க்கு வயது பதிமூன்று அதுவும் மிகுந்த உடல்நலக் குறைவோடும் உள்ளது என்பதையும் மீண்டும் நினைவு கொள்வோம். இந்த நிலையில் இது ஆரோக்கியமாக இருந்தாலே ஆறு மாதமோ ஒரு வருடமோ தான் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் இது மிக காயத்தோடு இருப்பதாக சொல்கிறார்கள். புலிகளுக்கு வயதாவதும் இறப்பதும் ஏன் எதேச்சையாக ஆட்திண்ணிகளாவதும் ஒரு இயல்பான நடைமுறைதான். இதனை தடுக்க ஒரு பொறுப்பான அரசும் வனத்துறையும் மனிதர்களது நலன் குறித்து சட்டப்படி இயங்குவதை நாம் அதீத உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு அறிவியல் பூர்வமாக நோக்குவதே நல்லது.


’புலி ஆட்கொல்லியாக மாறுவது இயல்பான நடைமுறை தான்’ – #saveT23 குறித்து சூழலியல் செயற்பாட்டாளர் ராமமூர்த்தி கருத்து..!

மற்றபடி இந்தப் புலிகுறித்து பார்க்கும் போது இன்றைய மனிதர்கள் இதனைக் கொல்லக்கூடாது என்பதனை வலியுறுத்தி #saveT23 என்கிற ஹேஷ்டேக்கை ட்ரண்டாக்கி கொண்டிருப்பது என்பது மனிதர்களின் பொது புத்தியிலுள்ள கொடிய மிருக பட்டியலில் இருந்து புலி மெல்ல மெல்ல விலகி வருவது குறித்து மகிழ முடியாமலிருக்க முடியவில்லை. ஒரு உண்மை என்னவெனில், கடந்த இருநூறு இருநூற்றி ஐம்பது ஆண்டுகளில் நமது மலைக்காடுகளின் தன்மை வெகுவாக மாறியதோடு இனி மாற்றவே முடியாத சூழ்நிலையில் மாறிவிட்டதென்பதுதான் மிக கசப்பான நிலை. குடியேறி மனிதர்களால் கொஞ்சம் கொஞ்சமாக நிறைந்துவிட்டது காடு. இந்த புலி விசயத்திற்காக அவர்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற வேண்டும் என்கிற கருத்து இந்த இணைய வெளியில் பரவிக் கிடப்பதையும் அறிவோம். அது சாத்தியமான ஒன்றா என்கிற எதார்த்த நிலையினை அந்தப் பகுதியினை அறிந்தவர்களுக்கு தெரியும். எல்லாமே கைமீறிப் போய்விட்ட நிலையிலேயே இருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Coimbatore power cut: கோவையில் நாளை (23-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (23-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (22-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (22-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut (21-07-2026): கோவையில் நாளை 7 மணி நேரம் மின்சாரம் இருக்காது! எங்கெல்லாம் தெரியுமா?
கோவையில் நாளை 7 மணி நேரம் மின்சாரம் இருக்காது! எங்கெல்லாம் தெரியுமா?
coimbatore power cut (20-07-2026): கோவையில் நாளை எத்தனை இடங்களில் மின் தடை ? - மின்சாரம் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை எத்தனை இடங்களில் மின் தடை ? - மின்சாரம் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள் - காரணம் என்ன ?
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள்..!
US Iran War: என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?
என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?
Best Sunroof Cars under 10 Lakh: பட்ஜெட் ரொம்ப கம்மியா சன்ரூஃப் கார் வேணுமா.? ரூ.10 லட்சத்துக்குள்ள கிடைக்குற கார்கள் லிஸ்ட் இதோ..
பட்ஜெட் ரொம்ப கம்மியா சன்ரூஃப் கார் வேணுமா.? ரூ.10 லட்சத்துக்குள்ள கிடைக்குற கார்கள் லிஸ்ட் இதோ..
ராகுல் காந்தி நேற்று கைது... இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னணி
ராகுல் காந்தி நேற்று கைது.. இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னணி
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
Embed widget