மேலும் அறிய

தனியார் மருத்துவமனையில் திருட முயன்றவரை அடித்து கொலை செய்த விவகாரம் - 8 பேர் அதிரடி கைது

மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் ராஜாவை பிடித்து விசாரித்தாகவும், அப்போது அவரை காவலாளிகள் உள்ளிட்டோர் கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் மணி என்கிற ராஜா. இவரது மனைவி சுகன்யா. இவருக்கு பள்ளி செல்கின்ற வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் கோவை - அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச். என்ற தனியார் மருத்துவமனைக்கு சென்ற ராஜா, அங்கிருந்த இரும்பு கம்பிகளை திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து அந்த மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் ராஜாவை பிடித்து விசாரித்தாகவும், அப்போது அவரை காவலாளிகள் உள்ளிட்டோர் கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ராஜா மயக்கமடைந்ததாக கூறப்படும் நிலையில், அவரை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் ராஜா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த பீளமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல் போராட்டம்

இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் ராஜாவின் உடல் உடற்கூராய்விற்காக கொண்டு செல்லப்பட்டது. உடற்கூராய்வு முடிந்த பிறகு உடலை வாங்க மறுப்பு தெரிவித்த உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் ராஜா உயிரிழந்தது குறித்தான தகவல்கள் முழுமையாக இல்லை எனவும், அவரை தாக்கிய நபர்களின் பெயர்களும் இடம்பெறவில்லை எனவும், உடலில் உள்ள காயங்கள் பற்றியும் எந்த தகவல்களும் இல்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், பின்னர் கொலை உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு எட்டு பேரை கைது செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் ராஜாவின் உடலை உறவினர்கள் பெற்று சென்றனர். இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தின் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

எட்டு பேர் கைது

இந்த கொலை வழக்கு தொடர்பாக கொலை வெறி தாக்குதல், காயங்கள் ஏற்படுத்தும் அளவிற்கு தாக்குதல், உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவ்விவகாரம் தொடர்பாக மருத்துவமனை தரப்பை சேர்ந்த 15 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்திய நிலையில், மருத்துவமனை துணை தலைவர் நாராயணன், தகவல் பிரிவு மேலாளர் ரமேஷ், செயலாக்க துறை அதிகாரி சரவணகுமார், பிஆர்ஓ சசிக்குமார், பிளம்பர் சுரேஷ், சரவணகுமார்,  செக்யூரிட்டி மணிகண்டன், ஸ்டோர் மேனேஜர் சதீஷ்குமார் ஆகிய எட்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal
விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு! அதிமுக போராட்டம் அறிவிப்பு - சிவி சண்முகம் எச்சரிக்கை
திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு! அதிமுக போராட்டம் அறிவிப்பு - சிவி சண்முகம் எச்சரிக்கை
Maruti Ignis கார் வாங்கலாமா? வேண்டாமா? விலை, மைலேஜ், தரம் இதுதான்!
Maruti Ignis கார் வாங்கலாமா? வேண்டாமா? விலை, மைலேஜ், தரம் இதுதான்!
கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம்.
கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம்.
EPS ADMK: யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
Embed widget