மேலும் அறிய

மேட்டுப்பாளையத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது; எடப்பாடி பழனிசாமி கண்டனம்

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களை சந்திப்பதற்காக சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் மாமன்ற கூட்டம் கடந்த 31ம் தேதி தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமையில் நடைபெற்றது. அப்போது குப்பைகள் அகற்றுவது தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் மற்றும் திமுக உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. அப்போது 17வது வார்டு திமுக உறுப்பினர் ரவிக்குமார் என்பவர், நாற்காலி ஒன்றை அதிமுக உறுப்பினர்கள் மீது வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

அதேசமயம் நாற்காலி தூக்கி வீசிய ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அதிமுக உறுப்பினர்கள் கடந்த 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுன்சிலர்களை சந்திப்பதற்காக கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் மற்றும் மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினருடன் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

 

திமுக - அதிமுக மோதல்
திமுக - அதிமுக மோதல்

அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினர், அதிமுகவினரை உள்ளே விட அனுமதி மறுத்தனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல் துறையினரின் தடுப்பையும் மீறி உள்ளே செல்ல முயன்ற எம்.எல்.ஏக்கள் உட்பட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். இதை தொடர்ந்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 9 அதிமுக கவுன்சிலர்களையும் காவல் துறையினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்து அழைத்து சென்றனர்.

இந்தச் சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திமுக நகர மன்றத் தலைவரின் கணவர் அஷ்ரப் அலி ஏற்பாட்டில் திமுக நகர மன்ற வார்டு உறுப்பினர்கள், கழக வார்டு உறுப்பினர்கள் மீது நாற்காலியை எடுத்துப் போட்டு தாக்கி, தகாத வார்த்தைகளால் பேசியும், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். திமுக நகர மன்ற உறுப்பினர்கள் ரவி மற்றும் ஸ்ரீராம் ஆகிய இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையரிடமும், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தாக்குதல் நடத்திய திமுக நகர மன்ற வார்டு உறுப்பினர்கள் மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

நகர மன்ற அவசரக் கூட்டத்தின் தொடக்கத்தில் எந்தவிதமான தீர்மானங்களும் கழக உறுப்பினர்களுக்கு வழங்கப்படாத சூழ்நிலையில், திடீரென்று திமுக நகர மன்றத் தலைவர் ‘தீர்மானங்கள் ஆல் பாஸ்' என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். இவற்றைக் கண்டித்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய வார்டு உறுப்பினர்களை பார்வையிடச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் A.K. செல்வராஜ். P.R.G. அருண்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்துள்ளது. தாக்குதல் நடத்திய திமுக நகர மன்ற உறுப்பினர்களைக் கைது செய்யாமல், அதிமுகவினரை கைது செய்த, விடியா திமுகவின் ஏவல் துறைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக நகர மன்ற உறுப்பினர்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை எனில், மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடியா திமுக அரசை எச்சரிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi in France: பிரான்ஸில் கடும் குளிரில் வரவேற்ற இந்தியர்கள்..மேக்ரானுடன் விருந்து... அசத்தும் மோடி...
பிரான்ஸில் கடும் குளிரில் வரவேற்ற இந்தியர்கள்..மேக்ரானுடன் விருந்து... அசத்தும் மோடி...
Gold Rate: அவ்ளோதான்... இனி கனவில் தான் தங்கம் வாங்கனும்.. புதிய உச்சம் தொட்ட விலை...
அவ்ளோதான்... இனி கனவில் தான் தங்கம் வாங்கனும்.. புதிய உச்சம் தொட்ட விலை...
பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி! நடுரோட்டில் இறக்கிவிட்டனரா அரசுப் பேருந்து ஓட்டுனர், நடத்துநர்?
பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி! நடுரோட்டில் இறக்கிவிட்டனரா அரசுப் பேருந்து ஓட்டுனர், நடத்துநர்?
Thaipusam 2025: இன்று பத்திரம் பதியப் போறீங்களா? நல்ல நேரம் இதுதான்!
Thaipusam 2025: இன்று பத்திரம் பதியப் போறீங்களா? நல்ல நேரம் இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP executive cheating: இளம்பெண்களுக்கு மிரட்டல்! சிக்கிய ஆபாச வீடியோக்கள்! பாஜக நிர்வாகி கைதுTirupattur: நள்ளிரவில் வீடு புகுந்த கும்பல்.. பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ! கள்ளக்காதலன் பகீர்!VJ Siddhu Vlogs: ”அடி.. உதை.. ஆவேசம்” சர்ச்சையில் சிக்கிய VJ சித்து! வெளியான அதிர்ச்சி வீடியோ!செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi in France: பிரான்ஸில் கடும் குளிரில் வரவேற்ற இந்தியர்கள்..மேக்ரானுடன் விருந்து... அசத்தும் மோடி...
பிரான்ஸில் கடும் குளிரில் வரவேற்ற இந்தியர்கள்..மேக்ரானுடன் விருந்து... அசத்தும் மோடி...
Gold Rate: அவ்ளோதான்... இனி கனவில் தான் தங்கம் வாங்கனும்.. புதிய உச்சம் தொட்ட விலை...
அவ்ளோதான்... இனி கனவில் தான் தங்கம் வாங்கனும்.. புதிய உச்சம் தொட்ட விலை...
பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி! நடுரோட்டில் இறக்கிவிட்டனரா அரசுப் பேருந்து ஓட்டுனர், நடத்துநர்?
பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி! நடுரோட்டில் இறக்கிவிட்டனரா அரசுப் பேருந்து ஓட்டுனர், நடத்துநர்?
Thaipusam 2025: இன்று பத்திரம் பதியப் போறீங்களா? நல்ல நேரம் இதுதான்!
Thaipusam 2025: இன்று பத்திரம் பதியப் போறீங்களா? நல்ல நேரம் இதுதான்!
Thaipusam 2025: கந்தனுக்கு அரோகரா! தைப்பூசம் இன்று கோலாகல கொண்டாட்டம்! லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Thaipusam 2025: கந்தனுக்கு அரோகரா! தைப்பூசம் இன்று கோலாகல கொண்டாட்டம்! லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Tamilnadu Rounudp: களைகட்டிய தைப்பூச கொண்டாட்டம்! விஜய்க்கு ஆலோசகராகிறாரா பிரசாந்த் கிஷோர் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Rounudp: களைகட்டிய தைப்பூச கொண்டாட்டம்! விஜய்க்கு ஆலோசகராகிறாரா பிரசாந்த் கிஷோர் - தமிழகத்தில் இதுவரை
Jasprit Bumrah: ஜஸ்ப்ரித் பும்ரா..  சாம்பியன்ஸ் டிராபியில் களமிறங்குவாரா? மாட்டாரா? பிசிசிஐ இன்று இறுதி முடிவு
Jasprit Bumrah: ஜஸ்ப்ரித் பும்ரா.. சாம்பியன்ஸ் டிராபியில் களமிறங்குவாரா? மாட்டாரா? பிசிசிஐ இன்று இறுதி முடிவு
IND Vs ENG 3rd ODI: ஹாட்ரிக் வெற்றியா? ஆறுதல் வெற்றியா? இந்தியா Vs இங்கிலாந்து, 3வது ODI, அகமதாபாத் மைதானம் எப்படி?
IND Vs ENG 3rd ODI: ஹாட்ரிக் வெற்றியா? ஆறுதல் வெற்றியா? இந்தியா Vs இங்கிலாந்து, 3வது ODI, அகமதாபாத் மைதானம் எப்படி?
Embed widget