மேலும் அறிய

Crime: கோவையை சேர்ந்த ரவுடிக் கும்பல் பெங்களூருவில் கைது ; போலீசார் மிரட்டுவதாக வீடியோ வெளியிட்ட ரவுடிகள்!

பெங்களூருவில் நேற்று சுமார் 4 கி.மீ. தூரம் மக்கள் நடமாட்டமிக்க பகுதிகளில் தனிப்படை காவல் துறையினர் 4 ரவுடிகளை விரட்டி சென்று பிடித்துள்ளனர்.

கோவை நீதிமன்றம் அருகே கடந்த பிப்ரவரி 13 ம் தேதி பட்டப்பகலில் கோகுல் என்பவரை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற மனோஜ் என்பவருக்கு தலை மற்றும் கையில் கத்தி குத்து விழுந்தது. ரத்தினபுரி, கண்ணப்பநகர் பகுதிகளில் ரவுடிகளின் பலத்தை காட்டும் வகையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, கடந்த 2021ம் ஆண்டு குரங்கு ஸ்ரீராம் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது. இந்த கொடூர கொலை சம்பவத்தை தொடர்ந்து, காவல் துறையினர் ரவுடிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

குறிப்பாக கோகுல் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் இன்ஸ்டாகிராம் வாயிலாக அவர்கள் பகையை வளர்க்கும் விதமாகவும், ஒரு தரப்பினரை இன்னொரு தரப்பினர் மிரட்டும் வகையிலும் பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்தது. Praga Brothers மற்றும் Rathinapuri Bloods ஆகிய பெயரில் இரண்டு குழுக்கள் இன்ஸ்டாகிராம் மூலம் பகையை வளர்த்து வந்தது தெரிய வந்தது. இதனிடையே பல்வேறு ரவுடிகளின் இன்ஸ்டாகிராம் பக்கங்களை காவல்துறையினர் நோட்டமிட்டு Anti Rowdy Drive என்ற பெயரில் 80க்கும் மேற்பட்ட ரவுடிகளை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சமீபத்தில் Praga Brothers என்ற குழுவைச் சேர்ந்த கௌதம் என்பவர் தன்னை காவல் துறையினர் என்கவுண்டர் செய்யும் அச்சம் உள்ளதாக கூறி, இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டார். பின்னர் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்த கெளதம், கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கெளதமின் கூட்டாளிகள் சிலரை பிடிக்க தனிப்படை பெங்களூரு விரைந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று சுமார் 4 கி.மீ. தூரம் மக்கள் நடமாட்டமிக்க பகுதிகளில் தனிப்படை காவல் துறையினர் 4 ரவுடிகளை விரட்டி சென்று பிடித்துள்ளனர். இதனிடையே அமர் என்ற ரவுடியை காவல் துறை தூரத்திய போது, அவர் ஓடி சென்று ஒரு பகுதியில் நின்று, ”என் கை கால்கள் நன்றாக உள்ளது. என்னை விரட்டுகிறார்கள். என்னை என்ன செய்ய போகிறார்கள்” எனத் தெரியவில்லை என்று வீடியோ வெளியிட்டு உள்ளார். மேலும் தனிப்படை ஆய்வாளர் ராஜ்குமார் தேடப்படும் குற்றவாளி சுஜி மோகன் என்பவரிடம் பேசியதாக, ஒரு ஆடியோவையும் thellavari என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர். அதில் "நீ ஓடு உன்னை நான் பிடித்து கொள்கிறேன், பிடித்த இடத்திலேயே உன்னை முடித்து விடுவேன். காலில் சுட்டு பிடிக்கிறேன். என் பேச்சை நானே கேக்க மாட்டேன்”  என காவல் ஆய்வாளர் ராஜ்குமார் பேசுவது போல உள்ளது. இந்நிலையில் பெங்களூரூவில் சுஜி மோகன், பிரசாந்த், அமர், புள்ளி பிரவீண் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களை கோவை கொண்டு வந்து விசாரிக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
Embed widget