மேலும் அறிய

Ukkadam Bus Stand: மின்னல் வேகத்தில் உக்கடம் பேருந்து நிலைய பணிகள்! நனவாகும் கோவை மக்களின் கனவு.. திறப்பு விழா எப்போது?

Ukkadam Bus Stand: உக்கடம் பேருந்து முனையத் திட்டத்தை நிறைவு செய்ய கோயம்புத்தூர் மாநகராட்சி (CCMC) பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

கோவை மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட உக்கடம் பேருந்து முனையத் திட்டத்தை நிறைவு செய்ய கோயம்புத்தூர் மாநகராட்சி (CCMC) பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்த பணிகளை  பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், கோவை மாநகராட்சி நிர்வாகம் தற்போது மேற்கூரை மற்றும் இதர பணிகளுக்காக, முன்கூட்டியே வடிவமைக்கப்பட்ட ஸ்டீல் கட்டமைப்புகளை தளத்தில் நிறுவும் பணிகளைத் தொடங்கியுள்ளது.

திட்டப் பின்னணி:

இந்த திட்டம் முதன்முதலில் மார்ச் 13, 2024 அன்று பொள்ளாச்சிக்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மதிப்பீடு முதலில் 20 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட இத்திட்டத்தின் செலவு, விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பிற்குப் பிறகு ரூ. 21.55 கோடியாக மாற்றப்பட்டது. பல்வேறு வடிவமைப்பு மாற்றங்கள், ஒப்புதல்கள் மற்றும் நிதி ஒதுக்கீட்டிற்குப் பிறகு, ஆகஸ்ட் 24, 2025 அன்று கட்டுமானப் பணிகள் தொடங்கின.

நவீன உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள்:

உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால கட்டுமானத்திற்காக பழைய பேருந்து நிலையத்தின் பெரும் பகுதி இடிக்கப்பட்டதால், நவீன வசதிகளுடன் கூடிய விரிவான அமைப்புகளுடன் இரண்டு தனித்தனி முனையங்கள் அமைக்கப்படுகின்றன.

முனையம் I: உக்கடம் காவல் நிலையத்திற்கு எதிரே (முன்னாள் மீன் சந்தை பகுதியில்) அமைய உள்ளது. இங்கிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

முனையம் II: தற்போதைய பேருந்து நிலையம் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு அருகிலேயே அமைய உள்ளது. இங்கிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

சிறப்பம்சங்கள்:

  • மொத்தம் 58 பேருந்து நிறுத்தங்கள் (Bus bays) மற்றும் ஒரே நேரத்தில் 80 பேருந்துகளை கையாளும் திறன்.
  • பயணிகளுக்கான இருக்கை வசதிகள் (60 பேர் அமரக்கூடியது), மூன்று கழிப்பறைகள், இரண்டு பாலூட்டும் தாய்மார்கள் அறைகள்.
  • வணிக வளாகங்கள், இலவச வைஃபை (Wi-Fi), மொபைல் சார்ஜிங் புள்ளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள்.
  • பாதுகாப்பிற்காக 30 சிசிடிவி (CCTV) கேமராக்கள் மற்றும் அவசர கால கண்காணிப்பு மையம்.
  • வளாகத்தின் அழகை மேம்படுத்த அலங்காரச் செடிகளுடன் கூடிய பசுமைப் புல்வெளி (Landscaping).

தற்போதைய நிலை:

தற்போது இங்கிருந்து பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி மற்றும் கேரளாவின் சில பகுதிகளுக்கும், நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சராசரியாக நாளொன்றுக்கு 80 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் கூறுகையில், "சுமார் 45% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. வேறு இடத்தில் முன்கூட்டியே தயார் செய்யப்பட்ட எஃகு கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் பணிகளை விரைவுபடுத்தியுள்ளோம். பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், பிப்ரவரி-மார்ச் மாதத்திற்குள் இரண்டு முனையங்களையும் முடிக்க இலக்கு வைத்துள்ளோம்," எனத் தெரிவித்தார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kovai Child Murder Case: கோவை 10 வயது சிறுமி கொலை வழக்கு… இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சி அதிரடி
Kovai Child Murder Case: கோவை 10 வயது சிறுமி கொலை வழக்கு… இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சி அதிரடி
குப்பையில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலி… நேர்மையால் ஹீரோ ஆன கோவை தூய்மைப் பணியாளர்
குப்பையில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலி… நேர்மையால் ஹீரோ ஆன கோவை தூய்மைப் பணியாளர்
”அரசு விடுதிகளில் இப்படித்தான் உணவு கிடைக்கும்” – அதிகாரி பதிலால் கோவையில் மாணவிகள் வேதனை...
”அரசு விடுதிகளில் இப்படித்தான் உணவு கிடைக்கும்” – அதிகாரி பதிலால் கோவையில் மாணவிகள் வேதனை...
CBI அதிகாரி என நடித்த மர்ம நபர்… கோவையில் முதியவரிடம் ₹20 லட்சம் பறிப்பு...
CBI அதிகாரி என நடித்த மர்ம நபர்… கோவையில் முதியவரிடம் ₹20 லட்சம் பறிப்பு...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Modi Meeting: ‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
Vijay Modi Meeting: டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
EPS Vs CV Shanmugam: தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?
தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?
வெளியேறப்போவது யார்? இன்னும் சற்று நேரத்தில் எலிமினேட்டர்! குஜராத்துடன் மல்லுகட்டப்போவது சன்ரைசர்ஸா? ராஜஸ்தானா?
வெளியேறப்போவது யார்? இன்னும் சற்று நேரத்தில் எலிமினேட்டர்! குஜராத்துடன் மல்லுகட்டப்போவது சன்ரைசர்ஸா? ராஜஸ்தானா?
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
தவெக ஆட்சியில் அண்ணாசாலை - சைதாப்பேட்டை மேம்பால பணிகளில் தொய்வா? உண்மை என்ன?
தவெக ஆட்சியில் அண்ணாசாலை - சைதாப்பேட்டை மேம்பால பணிகளில் தொய்வா? உண்மை என்ன?
SP Velumani: “நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
“நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
Embed widget