மேலும் அறிய

தொடர் கனமழையால் நிரம்பிய பில்லூர், ஆழியார் அணைகள்; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நடப்பாண்டில் மூன்றாவது முறையாக பில்லூர் அணை நிரம்பியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் நீர் கோவை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நடப்பாண்டில் மூன்றாவது முறையாக பில்லூர் அணை நிரம்பியுள்ளது. ஏற்கனவே நடப்பாண்ட்டில் இரண்டு முறை முழு கொள்ளளவை பில்லூர் அணை எட்டிய நிலையில், மூன்றாவது முறையாக அணை மீண்டும் நிரம்பியுள்ளது. மீண்டும் தென்மேற்கு பருவ மழை காரணமாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா மற்றும் கேரளாவின் அட்டப்பாடி, மன்னார்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நேற்று இரவு முதல் பில்லூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, இன்று காலை நிலவரப்படி சுமார் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து இருந்தது.

இதன் காரணமாக நேற்று வரை 85 அடியாக இருந்து வந்த பில்லூர் அணை, இன்று காலை 93 அடியாக உயர்ந்தது. அதனை தொடர்ந்து மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக தற்போது 20 ஆயிரம் கன அடிதண்ணீர் வினாடிக்கு வந்து கொண்டிருப்பதால் அணை 100 அடியில் 97 அடி வரை நிரம்பியது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி பில்லூர் அணையில் இருந்து அணைக்கு வரும் நீர் வரத்தான 20 ஆயிரம் கன அடி தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றல் தண்ணீர் அதிக அளவில் வருவதால் ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.


தொடர் கனமழையால் நிரம்பிய பில்லூர், ஆழியார் அணைகள்; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நிரம்பிய ஆழியார் அணை

இதேபோல கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில் முழு கொள்ளளவு எட்டியது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள வால்பாறை, சின்னக்கல்லார், பெரிய கல்லார் சோலையார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆழியார் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்திருந்தனர். இந்நிலையில் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஆழியார் அணை 120 அடி கொள்ளளவை முழுமையாக எட்டியது. இதையடுத்து அணையின் ஒன்பது மதகுகளில் இருந்து 1133 கன அடி தண்ணீர் வெளியேற்றும் செய்யப்பட்டது. வெளியேற்றப்படும் தண்ணீர் ஆழியார் ஆற்றில் கரைபுரண்டு ஓடி வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக பாலாற்றில் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அங்கலகுறிச்சி அருகே மலையடிவாரத்தில் ஆற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்லும் பாலத்தின் மீது தண்ணீர் செல்கிறது. இன்று ஆடி வெள்ளி என்பதால் பக்தர்கள் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலுக்கு அதிகளவு வழிபாடு செய்ய வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
போக்குவரத்து கழகத்தில்  வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
போக்குவரத்து கழகத்தில் வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
Annamalai: ‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
போக்குவரத்து கழகத்தில்  வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
போக்குவரத்து கழகத்தில் வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
Annamalai: ‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
அண்ணா பல்கலை.க்கே இதுதான் கதியா?- தற்காலிக பேராசிரியர்களுக்கு உடனே பணி நீட்டிப்பு  வழங்க கோரிக்கை!
அண்ணா பல்கலை.க்கே இதுதான் கதியா?- தற்காலிக பேராசிரியர்களுக்கு உடனே பணி நீட்டிப்பு வழங்க கோரிக்கை!
MK Stalin: இது சரியல்ல.. மரியாதையா பேசுங்க.. காமராஜர் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
MK Stalin: இது சரியல்ல.. மரியாதையா பேசுங்க.. காமராஜர் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
Airtel Offer: ஏர்டெல் யூசரா நீங்க? 1 ஆண்டு இதை இலவசமா பயன்படுத்தலாம்- அள்ளித்தந்த ஆஃபர்- ரூ.20 ஆயிரம் மதிப்பு!
Airtel Offer: ஏர்டெல் யூசரா நீங்க? 1 ஆண்டு இதை இலவசமா பயன்படுத்தலாம்- அள்ளித்தந்த ஆஃபர்- ரூ.20 ஆயிரம் மதிப்பு!
Amarnath Ramakrishna: கீழடி; எழுத்துப் பிழைய வேணா திருத்தறேன், உண்மைய திருத்த முடியாது“ - அதிரடி காட்டிய அமர்நாத் ஐஏஎஸ்
கீழடி; எழுத்துப் பிழைய வேணா திருத்தறேன், உண்மைய திருத்த முடியாது“ - அதிரடி காட்டிய அமர்நாத் ஐஏஎஸ்
Embed widget