Coimbatore Power Shutdown: கோவையில் நாளை(19.06.25) மின் தடை: பராமரிப்பு பணிகள் காரணமாக முக்கிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்!
Coimabatore Power Shutdown: கோவை மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (19.06.25) மின்சார பராமரிப்பு பணி நடைப்பெற உள்ளதால் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.

கோவை மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில் மின் இணைப்புகளில் திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடையானது நாளை (19.06.25) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு பழுது மற்றும் மின் இணைப்புகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டுதல் உள்ளிட்ட மாதாந்திர பராமரிப்புக்காக மின்வெட்டு அவசியம் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) அறிவித்துள்ளது.
எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?
பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 மணி அல்லது 10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
மின் தடைப்பகுதிகள்:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.
எஸ்.என்.பாளையம்
எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணா நகர், லட்சுமி நகர்
கிணத்துக்கடவு
சூலக்கல், தாமரைக்குளம், ஓகேமண்டபம் பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி
சிட்கோ
சிட்கோ, சுந்தராபுரம் பகுதி, போத்தனூர் பகுதி, எல்ஐசி காலனி, காமராஜ் நகர்
பொதுமக்கள் கவனத்திற்கு:
நாளை(19.06.25) மின் தடை செய்யப்படவுள்ளதால் பொதுமக்கள் வீட்டு தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புதல் மற்றும் அத்தியாவசிய தேவை சார்ந்த அனைத்து வேலைகளையும் முன்பே செய்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.






















