மேலும் அறிய

Crime: கோவையில் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட நபர்கள் ; வீடுகளில் போலீஸ் சோதனை

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்கள் பதிவிடுவது உள்ளிட்ட பல்வேறு சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டதால் சோதனை நடைபெற்றது.

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி அதிகாலை கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் காரை ஓட்டி வந்த அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (25) உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக உயிரிழந்த முபினின் நெருங்கிய உறவினர்கள் அப்சர்கான், முகமது அசாருதீன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். உக்கடம் காவல் துறையினர் இந்த வழக்கை விசாரித்த நிலையில், வழக்கு தேசிய புலனாய்பு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது. உயிரிழந்த முபின் மற்றும் கைது செய்யப்பட்ட 6 பேரின் பின்புலம் மற்றும் இந்த வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்புள்ளதா என்ற கோணத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.

இதில் உயிரிழந்த ஜமேஷா முபின் ஐ.எஸ்..எஸ் தீவிரவாத அமைப்பின் அனுதாபி என்பதும், அதன் மூலமாக இந்த கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியதும் தெரியவந்தது. மேலும் முபின் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து, நினைவுச் சின்னங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கோவையில் பல்வேறு சிறப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் சந்தேகத்துக்கிடமானவர்களை கண்காணித்து வருகின்றனர். அவர்களில் கோவையில் சந்தேகத்திற்கு இடமான நபர்களை கண்காணிப்பதற்காக சிறப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.


Crime: கோவையில் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட நபர்கள் ; வீடுகளில் போலீஸ் சோதனை

இந்நிலையில் கரும்பு கடை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்பாடுகள் இருப்பதாக கூறி, ஒசாமா என்கிற சுலைமான் மற்றும் அப்துல் காதர் ஆகிய இருவரது வீடுகளில்  சிறப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் மற்றும் கோவை மாநகர காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் இருவரது செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவர்களது வீடுகளில் இருந்து சில ஆவணங்களை கைப்பற்றிய காவல் துறையினர் இருவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதேபோல மேலும் சிலரை விசாரணை வளையத்துக்கு கொண்டு வரவும் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்கள் பதிவிடுவது உள்ளிட்ட பல்வேறு சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுவதால், தற்பொழுது இவர்களை விசாரணை வளையத்துக்கு கொண்டு வந்திருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இருவரிடம் விசாரணையானது நடைபெற்று வருகிறது. காவல் துறையினர் சோதனை நடத்தியதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget