மேலும் அறிய

’வெற்றிக்கொடி கட்டு’ பாணியில் ஏமாந்த இளைஞர்கள்..சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக மோசடி...!

சிங்கப்பூர் கட்டுமான நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை என்றும், சிவில் இன்ஜினியர், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர், சூப்பர்வைசர், ஓட்டுநர், மேலாளர் போன்ற பணியிடங்கள் உள்ளதாகவும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

சிங்கப்பூரில் இயங்கி வரும் பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை என்றும், அதில் சிவில் இன்ஜினியர், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர், சூப்பர்வைசர், ஓட்டுநர், மேலாளர் போன்ற பணியிடங்கள் உள்ளதாகவும் தமிழ்நாடு முழுவதும் பதாகைகள் மூலமும் சுவரொட்டிகள் மூலமும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அதேபோல செய்தித்தாள் மற்றும் இணைய தளங்களிலும் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. 

இந்த விளம்பரத்தை பார்த்த இளைஞர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை வடவள்ளியில் உள்ள எல்.எஸ் கன்ஸ்டிரக்சன் என்ற பெயரிலும் அஃப்போட் டூர்ஸ் & டிராவல்ஸ் என்ற பெயரிலும் செயல்படும் நிறுவனத்தை தொடர்பு கொண்டனர். இப்படி தொடர்பு கொண்ட 150க்கும் மேற்பட்டவர்களிடம் அந்த நிறுவன ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் வேலை வாங்கி தருவதாக கூறி, ஒவ்வொருவரிடமிருந்தும் பதிவு செய்யும் வேலைக்கேற்ப ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை பணத்தைப் பெற்றுள்ளனர். பின்னர் உறுதியளித்தபடி வெளிநாட்டிற்கு அனுப்பாமல் இழுத்தடித்து வந்துள்ளனர். பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்ட நிலையில், பணத்தை திருப்பித் தராமல் இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், ஒரு சிலருக்கு விமான பயண சீட்டுகளையும் வழங்கி கடந்த 8ம் தேதியன்று சென்னை சென்று கொரோனா பரிசோதனைகள் எல்லாம் செய்து விட்ட பின், சிங்கப்பூர் அழைத்துச் செல்வதாக தெரிவித்த அந்த நிறுவனத்தார் திடீரென தகவல் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்து விட்டனர். பணத்தை கொடுத்தவர்கள் போன் செய்தும் நிர்வாகிகள் எடுக்காமல் சிறிது நேரத்தில் சுவிட்ச் ஆப் செய்தனர். இதில் சந்தேகம் அடைந்தவர்கள் நேரில் வந்து பார்த்த போது, அந்நிறுவனம் பூட்டப்பட்டிருந்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்கள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், குற்ற பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் மோசடி செய்து தலைமறைவாக இருந்த மோசடி ஏஜென்சி நிறுவனத்தின் உரிமையாளர் ராமமூர்த்தி, மேலாளர் மோகன கிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் சரண்யா, ஜோதி ஆகியோர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாகியிருந்த நிறுவனத்தின் மேலாளர் கோவில்பாளையத்தைச் சேர்ந்த மோகன கிருஷ்ணன் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 21 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சொகுசு கார் ஆகிவற்றையும் பறிமுதல் காவல் துறையினர் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து தலைமுறைவாகியுள்ள மூன்று பேரையும் காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Embed widget