மேலும் அறிய

கோவை : வெள்ளலூரில் திமுக - அதிமுகவினர் மோதல் - தள்ளுமுள்ளு, தடியடியால் பரபரப்பு..

திமுக, அதிமுகவினர் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் தடியடி நடத்தி அப்பகுதியில் நின்றிருந்தவர்களை விரட்டினர்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில் 31 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது. வெள்ளலூர் பேரூராட்சியில் மட்டும் அதிமுக பெரும்பான்மை பெற்றது. இந்நிலையில் கடந்த 4 ம் தேதியன்று பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. அப்போது வெள்ளலூர், அன்னூர், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி பதவிகளுக்கான தேர்தல்கள் மோதல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

அன்னூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுகவினர் இரண்டு தரப்பினராக பிரிந்து மோதிக் கொண்டதால், தேர்தல் ஒத்திவைக்கபட்டது. இன்று தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. அப்போது திமுக வேட்பாளர் பரமேஸ்வரன் போட்டியின்றி பேரூராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி பதவிகளுக்கான தேர்தல் உயர் நீதிமன்ற தடை காரணமாக நடைபெறவில்லை. 


கோவை : வெள்ளலூரில் திமுக - அதிமுகவினர் மோதல் - தள்ளுமுள்ளு, தடியடியால் பரபரப்பு..

வெள்ளலூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், அதிமுக 8 வார்டுகளிலும், திமுக 6 வார்டுகளிலும், சுயேட்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர். சுயேட்சை வேட்பாளர் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்ததால், திமுகவின் பலம் 7 ஆக உயர்ந்தது. இந்நிலையில் அதிமுக சார்பில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் மருதாசலம் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். துணைத் தலைவர் பதவிக்கு கணேசன் போட்டியிட்டார். கடந்த முறை நடைபெற்ற மறைமுக தேர்தலின் போது, திமுக - அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டு வாக்குப்பெட்டிகள் அலுவலகத்திற்கு வெளியே தூக்கி வீசப்பட்டது. இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மறைமுகத் தேர்தல் மீண்டும் நடைபெற்ற நிலையில் மீண்டும் திமுக, அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.


கோவை : வெள்ளலூரில் திமுக - அதிமுகவினர் மோதல் - தள்ளுமுள்ளு, தடியடியால் பரபரப்பு..

தேர்தல் நடைபெறும் இடத்திற்கு திமுக, அதிமுக தொண்டர்கள் திரண்டனர். காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது காவல் துறையினர் தடுப்புகளை மீறி திமுகவினர் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் திமுக, அதிமுகவினர் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் தடியடி நடத்தி அப்பகுதியில் நின்றிருந்தவர்களை விரட்டினர். இதில் 4 வது வார்டு திமுக கவுன்சிலர் குணசுந்தரியின் கணவர் செந்தில்குமார் மண்டை உடைந்தது. இதேபோல மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது.


கோவை : வெள்ளலூரில் திமுக - அதிமுகவினர் மோதல் - தள்ளுமுள்ளு, தடியடியால் பரபரப்பு..

இதையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அப்பகுதியில் இருந்த ஒரு கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. இந்த மோதல் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதனிடையே பலத்த பாதுகாப்புடன் மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
coimbatore power cut: கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
Coimbatore power cut: கோவையில் (ஜூலை 27) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் (ஜூலை 27) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Embed widget