மேலும் அறிய

Butterfly Park: கோவை வெள்ளலூர் குளக்கரையில் பட்டாம்பூச்சி பூங்கா திறப்பு ; அனுமதி இலவசமாம் மக்களே

குளக்கரையில் பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட போது, 103 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் வெள்ளலூர் குளக்கரையில் இருப்பது கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு என்ற அமைப்பினர் பேரூர் பெரியகுளம், செங்குளம், வெள்ளலூர் குளம் தூர்வாருதல் உட்பட 12 குட்டைகளை தூர்வாரி நீர் கொண்டு வந்து சேர்க்கும் பணிகளை செய்துள்ளனர். மேலும் குளக்கரை, நகரின் ரிசர்வ் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் மியாவாக்கி குறுங்காடுகளை உருவாக்குதல், நீர் நிலைகளில் பனை விதைகளை ஊன்றுதல், வாய்க்காலை தூர்வாரி கண்காணித்தல், குளக்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுதல், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வெள்ளலூர் குளக்கரையில் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கும் பணிகளை அந்த அமைப்பு செய்துள்ளது.


Butterfly Park: கோவை வெள்ளலூர் குளக்கரையில் பட்டாம்பூச்சி பூங்கா திறப்பு ; அனுமதி இலவசமாம் மக்களே

வெள்ளலூர் பட்டாம்பூச்சி பூங்கா

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் வெள்ளலூர் குளத்தின் நீர்வழிப் பாதையை தூர்வாரி, குளத்திற்கு நீர் கொண்டு வந்த பின் வெள்ளலூர் குளத்தை முன்மாதிரி குளமாக மாற்றும் முயற்சியில் பல்வேறு பணிகள் துவங்கப்பட்டன. முதற்கட்டமாக குளத்தின் கரையில் மியாவாக்கி அடர்வன முறையில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட 275 வகையான நாட்டு மரங்களை நட்டு அடர்வனம் உருவாக்கப்பட்டது. அதனை ஒட்டி மூங்கில் வனம், மருத்துவ குணங்களைக் கொண்ட செடி கொடிகள், பூ வகை மரங்கள் என 200 க்கும் மேற்பட்ட தாவரங்கள நடப்பட்டு பல்லுயிர் சூழல் பெருகுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக குளத்தின் கரைகளில் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டது.


Butterfly Park: கோவை வெள்ளலூர் குளக்கரையில் பட்டாம்பூச்சி பூங்கா திறப்பு ; அனுமதி இலவசமாம் மக்களே

இதையடுத்து The Nature and Butterfly Society குழுவினரின் உதவியுடன் தொடர்ந்து ஒரு வருடம் குளக்கரையில் பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதில் 103 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் வெள்ளலூர் குளக்கரையில் இருப்பது கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. இதன் அடுத்த கட்டமாக வெள்ளலூர் குளக்கரையில் பல்லுயிர் சூழலை மேம்படுத்தவும், பட்டாம்பூச்சி இனங்களை பாதுகாக்கவும், மாணவர்கள் பொது மக்களுக்கு பல்லுயிர் சூழல் பற்றிய விழிப்புணர்வை கொண்டு செல்லவும் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்க கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு முடிவு செய்தது. நீர்வளத்துறை அனுமதியோடும், தனியார் நிறுவனங்களின் நிதியுதவியோடும் 66 இலட்ச ரூபாய் செலவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டாம்பூச்சி பூங்கா இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

பட்டாம்பூச்சி பூங்கா சிறப்பம்சங்கள்

18 அடி தமிழ்நாடு பட்டாம்பூச்சி நுழைவாயில், நீர்மேலாண்மை, சுற்றுச்சூழல், பல்லுயிர்கள் பாதுகாக்க முன்னோர்களின் நடவடிக்கை குறித்த புடைப்பு ஓவியங்கள், மூங்கில் பாலம், பட்டாம்பூச்சி வாழ்க்கை சுழற்சி, கோவை, மேற்குத்தொடர்ச்சி மலை, நொய்யல் ஆறு, குளங்கள்,   பட்டாம்பூச்சிகள் உள்ளடக்கிய தகவல் மையம், பட்டாம்பூச்சி செல்பி முனை, பறவைகள், விலங்குகள், ஊர்வன கல் சிற்பங்கள், பட்டாம்பூச்சி குடும்பங்கள் தகவல் பலகை உள்ளிட்டவை பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளலூர் குள பட்டாம்பூச்சி பூங்காவை பார்வையிட அனைவருக்கும் அனுமதி இலவசம் எனவும், பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும், பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை முன்பதிவு செய்து கண்டு களிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளலூர் பட்டாம்பூச்சி பூங்கா பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பொழுதுபோக்கு இடமாக மட்டுமின்றி, பட்டாம்பூச்சிகள் பற்றி பலவகையான தகவல்களை அறிந்து கொள்ளும் இடமாகவும் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Savukku Shankar : சவுக்கு சங்கர் குண்டாஸ் ரத்து! உடனே விடுதலை பண்ணுங்க.. ஆனாThanjavur Mayor Angry : ”வேலை நேரத்துல PHONE-ஆ”டென்ஷனாகி பிடுங்கிய மேயர் பதறிய பெண் அதிகாரிKenisha Reveals Jayam Ravi Relationship : ”DIVORCE நோட்டீஸ் அனுப்பிட்டு! ஜெயம் ரவி என்னிடம் வந்தார்”Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
இலங்கை அதிபருக்கு நெகிழ்ச்சியுடன் தமிழில் வாழ்த்து சொன்ன பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
இலங்கை அதிபருக்கு நெகிழ்ச்சியுடன் தமிழில் வாழ்த்து சொன்ன பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
Special Bus: காலாண்டு விடுமுறை! ஊருக்குப் போக இத்தனை சிறப்பு பேருந்துகளா? முழு விவரம்
Special Bus: காலாண்டு விடுமுறை! ஊருக்குப் போக இத்தனை சிறப்பு பேருந்துகளா? முழு விவரம்
"50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget