மேலும் அறிய

Chess Olympiad Torch: கோவை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி-பிரதமர் பெயர் இல்லாததால் நிகழ்ச்சியை புறக்கணித்த பாஜக

செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்க உள்ள நிலையில், செஸ் ஒலிம்பியாட் ஒலிம்பிக் ஜோதி இன்று கோவை கொண்டுவரப்பட்டது.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்க உள்ள நிலையில், செஸ் ஒலிம்பியாட் ஒலிம்பிக் ஜோதி இன்று கோவை கொண்டுவரப்பட்டது. இதையடுத்து கோவை பந்தய சாலையில் இருந்து மக்கள் பார்வையுடன் கொடிசியாவிற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கோவை கொடிசியா வளாகத்தில் மேளதாளங்கள் முழங்க செஸ் ஒலிம்பியாட் ஜோதி வரவேற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டு துறைகளில் சாதனைகள் புரிந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ராமசந்திரன், முத்துசாமி, மு.பெ. சாமிநாதன் ஆகியோர் கௌரவித்தனர்.


Chess Olympiad Torch: கோவை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி-பிரதமர் பெயர் இல்லாததால் நிகழ்ச்சியை புறக்கணித்த பாஜக

இதற்கு முன்னர் இந்த நிகழ்ச்சியில் தலைமை உரை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என முதலமைச்சர் 24 மணி நேரம் உழைத்து வருகிறார். இந்த சர்வதேச செஸ் விளையாட்டு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 187 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர்எனத் தெரிவித்தார்.

இதையடுத்து வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன் பேசும் போது, “குறுகிய காலத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக முதலமைச்சர் செய்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் செஸ் விளையாட்டுப் போட்டியை பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இன்று செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடக்க விழா நடைபெற்று வருகிறது என்றார்.


Chess Olympiad Torch: கோவை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி-பிரதமர் பெயர் இல்லாததால் நிகழ்ச்சியை புறக்கணித்த பாஜக

இதனை அடுத்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேசும் போது,  “வரும் 28 ம் தேதி நடைபெறும் செஸ் போட்டிக்கான ஜோதி மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் வகையிலும் செஸ் போட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது.  2000க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த செஸ் போட்டியில் கலந்து கொள்கின்றனர். நமது தேசியமும் நமது மாநிலமும் செஸ் போட்டியில் சளைத்தவர்கள் இல்லை என்பதை இது காட்டுகிறது. தமிழக முதல்வர் ஒவ்வொரு நிமிடமும் இந்த போட்டியை கவனித்து வருகிறார். ஒட்டுமொத்த தமிழக அரசு நிர்வாகமும் இதில் கவனம் வைத்துள்ளது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி கிராமத்தின் பட்டி தொட்டி எங்கும் தெரிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.


Chess Olympiad Torch: கோவை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி-பிரதமர் பெயர் இல்லாததால் நிகழ்ச்சியை புறக்கணித்த பாஜக

தொடர்ந்து வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துச்சாமி பேசும் போது, “மாமல்லபுரத்தில் செஸ் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. செஸ் விளையாட்டு போட்டியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வும் ஆர்வமும் வரவேண்டும் என்ற நோக்கில் இந்த போட்டியை நடத்த முதல்வர் முன்னெடுத்து வருகிறார். 187 நாடுகளில் உள்ள 2000 வீரர்கள் இந்த செஸ் போட்டியில் கலந்து உள்ளனர். உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் இந்த விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. அனைத்து விளையாட்டு துறைகளிலும் நம் மாநிலம் நம் நாடு முன் வரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது எனத் தெரிவித்தார்.


Chess Olympiad Torch: கோவை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி-பிரதமர் பெயர் இல்லாததால் நிகழ்ச்சியை புறக்கணித்த பாஜக

தொடர்ந்து இந்த நிகழ்வில் பரதம், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், தற்காப்பு கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்பட்டன. மேலும் அதிவிரைவு சதுரங்க போட்டியும் நடத்தப்பட்டது. பின்னர் செஸ் கேக் வெட்டப்பட்டது. அதனை தொடர்ந்து 16 மாவட்ட பிரதிநிதிகளிடம் மாதிரி ஜோதிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவாக கோவைக்கு கொண்டு வரப்பட்ட ஒலிம்பியாட் ஜோதி கிராண்ட் மாஸ்டர் சிறப்பு விருந்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Chess Olympiad Torch: கோவை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி-பிரதமர் பெயர் இல்லாததால் நிகழ்ச்சியை புறக்கணித்த பாஜக

இதனிடையே செஸ் ஒலிம்பியாட் ஜோதி நிகழ்ச்சியில் பாஜகவினர் கலந்து கொண்ட நிலையில் பிரதமர் பெயரை பயன்படுத்தாததால் நிகழ்ச்சியிலிருந்து திடீரென வெளியேறினர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் குறித்தும், இந்தப் போட்டி நடைபெற முதல்வரின் முயற்சிகள் குறித்தும் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் பேசினர். ஆனால் பிரதமர் குறித்து பேசவில்லை எனவும் பிரதமரின் பெயரை நிகழ்ச்சியில் பயன்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டி, பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் முன்வரிசையில் 10க்கும் மேற்பட்டோர் வெளிநடப்பு செய்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரம்.. உள்நோக்கத்துடன் வழக்கு என நீதிபதி கருத்து.. தமிழக அரசு மனு தள்ளுபடி!
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Top Searched Movies: 2025 கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்...காந்தாரா கூலியை பின்னுக்கு தள்ளிய சையாரா
Magalir urimai thogai: மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
TN Voters List: தமிழகத்தில் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா.? அலறும் திமுக.!! தேர்தல் ஆணையம் கூறுவது என்ன.?
தமிழகத்தில் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா.? அலறும் திமுக.!! தேர்தல் ஆணையம் கூறுவது என்ன.?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Embed widget