மேலும் அறிய

கோவையில் பிரபல வங்கியில் 3.28 கோடி ரூபாய் மோசடி - சிசிடிவியில் சிக்கிய அதிகாரிகள்

மொத்தமாக 3 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 400 ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பதும், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது வங்கியில் பணியாற்றும் அதிகாரிகளே மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

கோவை பேங்க் ஆப் பரோடா வங்கியில் கிழிந்த மற்றும் பழைய நோட்டுகள் சுமார் மூன்று கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 400 ரூபாய் மோசடி தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவையில் டாக்டர் நஞ்சப்பா சாலையில் பேங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இருந்து கடந்த ஜனவரி 3 ம் தேதி 70 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான கிழிந்த மற்றும் அழுக்கான 2000, 500, 200, 100 ரூபாய் பணத் தாள்களை ஆர்.பி.ஐ.க்கு அனுப்பி உள்ளனர். அப்போது ஆர்பிஐ 2 கோடியே 83 லட்சத்து  49 ஆயிரத்து 800 ரூபாய் குறைவாக உள்ளது என பேங்க ஆப் பரோடா வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.


கோவையில் பிரபல வங்கியில் 3.28 கோடி ரூபாய் மோசடி - சிசிடிவியில் சிக்கிய அதிகாரிகள்

இந்த சம்பவம் குறித்து  கடந்த ஜனவரி 8 ஆம் தேதி கோவை மண்டல அலுவலகத்தில் இருந்து நஞ்சப்பா சாலையில் உள்ள வங்கியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கூடுதலாக 45 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் குறைவாக உள்ளதை கண்டறிந்தனர். மொத்தமாக 3 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 400 ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது வங்கியில் பணியாற்றும் அதிகாரிகளே மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி பேங்க் ஆப் பரோடா மண்டல அதிகாரி காகடை சிபிஐக்கு மோசடி தொடர்பாக  புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரில் வங்கி ஊழியரக்ளான செல்வராஜன், ராஜன், ஜெய்சங்கர், கனகராஜ், ஸ்ரீகாந்த் மற்றும் விஜயலட்சுமி ஆகிய 6 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


கோவையில் பிரபல வங்கியில் 3.28 கோடி ரூபாய் மோசடி - சிசிடிவியில் சிக்கிய அதிகாரிகள்

சிபிஐ அதிகாரிகள் நஞ்சப்பாசாலையில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதில் காவலாளியான கனகராஜ் மோசடிக்கு உடந்தையாக இருந்தத்தும் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி அதிகாரிகளே கிழிந்த நோட்டு விவகாரத்தில் மொத்தம் 3 கோடியே 28 லட்சத்து 69  ஆயிரத்து 400 ரூபாய் மோசடி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget