மேலும் அறிய

முதுமலை யானைகள் முகாமில் மசினி என்ற வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் உயிரிழப்பு

ஏற்கனவே சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கஜேந்திரன் என்ற யானை பாகன், கடந்த 2018 ஆம் ஆண்டு மசினி யானை தாக்கியதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் கிராமப்பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டவும், பிடிக்கவும் பயிற்சி பெற்ற கும்கி யானைகள், வளர்ப்பு யானைகள், தாயைப் பிரிந்து பரிதவிக்கும் நிலையில் மீட்கப்படும் குட்டி யானைகள் உள்ளிட்டவை முதுமலை யானைகள் முகாமில் பாரமரிக்கப்பட்டு வருகின்றன. முதுமலை யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 16 வயதான மசினி என்ற யானையை, பாலன் (54) என்ற பாகன் பராமரித்து வந்தார். இந்நிலையில் இன்று அபயாரண்யம் யானையின் முகாமில் மசினி யானைக்கு உணவளிக்க சென்ற போது, பாகன் பாலனை திடீரென மசினி யானை கடுமையாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த பாகன் பாலம் சம்வப இடத்திலேயே உயிரிழந்தார். 

இதனைத்தொடர்ந்து பாகன் பாலனின் உடலை மீட்ட வனத்துறையினர், உடற்கூராய்விற்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யானைகள் முகாமில் நடந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வளர்ப்பு யானை தாக்கியதில் யானை பாகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கஜேந்திரன் என்ற யானை பாகன், கடந்த 2018 ஆம் ஆண்டு மசினி யானை தாக்கியதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

பாலன்
பாலன்

மசினி யானை

கடந்த 2007 ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கார்குடி வனப்பகுதியில் தாயைப் பிரிந்த குட்டி யானை ஒன்று தவித்து வருவதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. வனத்துறையினர் சென்று பார்த்தபோது கார்குடி மசினியம்மன் கோயில் அருகே, குட்டியானை ஒன்று மயக்க நிலையில் கிடந்தது. அதை வனத்துறையினர் மீட்டு தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்குக் கொண்டு வந்து சிகிச்சையளித்தனர். முதுமலை பழங்குடி மக்களின் குலதெய்வமான மசினியம்மன் கோயில் அருகே குட்டி யானை மீட்கப்பட்டதால், அந்த யானைக் குட்டிக்கு மசினி எனப் பெயர் சூட்டப்பட்டது.

பின்னர் முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமில், மசினிக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதையடுத்து மசினி யானையை சமயபுரம் கோயிலுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு, கடந்த 2016 ம் ஆண்டு திருச்சி சமயபுரம் கோயிலுக்கு மசினி லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது. திருச்சி சமயபுரம் கோயிலுக்குச் சென்ற மசினி யானையின் நடவடிக்கைகள் மாற ஆரம்பித்தன. முதுமலையில் மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்து கொண்டிருந்த மசினி, சமயபுரம் கோயிலில் மிக இறுக்கமாகவே காணப்பட்டு வந்தது. இதனிடையே கோயில் வளாகத்துக்குள் பாகன் கஜேந்திரனைத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மேலும் அந்த யானை பக்தர்களையும் விரட்டத் தொடங்கியது. 

இதையடுத்து கோயிலின் கதவுகள் பூட்டப்பட்டு பிற கோயில் யானைப் பாகன்கள் வரவழைக்கப்பட்டு, அந்த யானையின் கால்களில் இரும்புச் சங்கிலியுடன் பிணைத்தனர். பின்னர் மசினி யானை ஓரத்தநாடு கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. மசினி உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு நடக்க முடியாமலும், படுத்து எழமுடியாமலும் தவித்து வந்தது. இந்த யானையை முதுமலை முகாமுக்கு மீண்டும் அழைத்துச் செல்லக்கோரி சென்னையைச் சேர்ந்த ஆண்டனி கிளின்டன் ரூபின் என்பவர், உயர்நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இவ்வழக்கில் உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்ட மசினி யானையை முதுமலைக்கே கொண்டு செல்ல உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மிக மோசமான நிலையில் முதுமலைக்குக் கொண்டுவரப்பட்ட வனத்துறையினரின் தொடர் கவனிப்பால் இயல்புக்கு திரும்பியது. இந்த நிலையில் மசினி யானை தாக்கியதில் பாகன் பாலன் உயிரிழந்து இருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நூற்றுக்கணக்கான தேனீக்கள் தாக்குதல்… ஆனாலும் தேனை விடாது ருசித்த கில்லாடி கரடி...
நூற்றுக்கணக்கான தேனீக்கள் தாக்குதல்… ஆனாலும் தேனை விடாது ருசித்த கில்லாடி கரடி...
“விஜய் வந்தது மகிழ்ச்சி” – அரசியல் மாற்றம் குறித்து நடிகர் சிவக்குமார் அதிரடி கருத்து...
“விஜய் வந்தது மகிழ்ச்சி” – அரசியல் மாற்றம் குறித்து நடிகர் சிவக்குமார் அதிரடி கருத்து...
coimbatore power cut: கோவையில் நாளை (29-05-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் வெளியானது
கோவையில் நாளை (29-05-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் வெளியானது
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
Embed widget