மேலும் அறிய

கோவை: மயானப் பாதை பிரச்சனை - உடலை அடக்கம் செய்ய ஆற்றில் இறங்கி தூக்கிச் செல்லும் அவலம்

பொள்ளாச்சி அருகே மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால், இறந்தவரின் உடலை சேறும் சகதியுமான ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோவிந்தனூர் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் மதுரை வீரன் கோவில் நகர் பகுதியில் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் நான்கு தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இந்த பகுதியில் வசிப்பவர்களில் யாரேஎனும் உயிரிழந்தால், அருகில் உள்ள தனியார் தோட்டம் வழியாக சென்று இறந்தவரின் உடலை தூக்கி கொண்டு ஆற்றின் வழியாக கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. மழை காலங்களில் இறந்தவர்களின் உடலை கயிறு மூலமாக கட்டி உடலை மறுகரைக்கு கொண்டு சென்று சுடுகாட்டில் புதைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால், சேறும் சகதியுமாக உள்ள ஆற்று நீரில் இறங்கி ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் இறந்தவர்களின் உடலை இப்படி ஆபத்தான முறையில் எடுத்துச் சென்று மயானத்தில் அடக்கம் செய்வதாகவும், பல வருடங்களாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆற்றை கடக்க பாலம் அமைத்து தர மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவும் வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள்,  பாலம் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.


கோவை: மயானப் பாதை பிரச்சனை - உடலை அடக்கம் செய்ய ஆற்றில் இறங்கி தூக்கிச் செல்லும் அவலம்

இதேபோல கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் இஸ்லாமியர்களுக்கு இரண்டு ஏக்கர் 36 சென்ட் நிலம் உடல்களை அடக்கம் செய்வதற்காக அரசு இடம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலத்துக்கு அருகே தனியார் தோட்டத்து உரிமையாளர் சில மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக, அப்பகுதி இஸ்லாமியர்கள் வட்டாச்சியரிடம் புகார் மனு அளித்தனர். இதன் பேரில் வட்டாட்சியர் அந்த இடத்தை நில அளவை செய்து இஸ்லாமியர்களுக்கு உண்டான இடத்தை ஒதுக்கீடு செய்து தந்தார். இந்த நிலையில் நேற்று இஸ்லாமிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்துக்கு செல்லும் போது, பக்கத்து தோட்டத்தில் இருந்து தண்ணீர் அதிகமாக விட்டதன் காரணமாக மாயனத்திற்குள் எங்கு பார்த்தாலும் தண்ணீர் இருந்துள்ளது. இதனால் இஸ்லாமியர்கள் உடலை அடக்கம் செய்ய முடியாமல் சிரமப்பட்டு அடக்கம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று மதியம் சின்ன பள்ளிவாசல் அருகே மயானத்திற்குள் தோட்டத்திலிருந்து தண்ணீர் அடக்கம் செய்யும் இடத்துக்கு விடக்கூடாது, மயானத்தைச் சுற்றிலும் வேலிகள் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி இஸ்லாமியர்கள் திடீரென 300க்கு மேற்பட்டோர் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் இஸ்லாமியருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக பொள்ளாச்சி - டாப்ஸ்லிப் சாலையில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget