மேலும் அறிய

சென்னை ; தியேட்டரில் அதிர்ச்சி !! இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை !! என்ன நடந்தது தெரியுமா ?

திருவல்லிக்கேணி பகுதியில் சினிமா தியேட்டரில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது

சென்னை ; தியேட்டரில் அதிர்ச்சி !! இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை !! கைது செய்யப்பட்ட நபர்.

சென்னை கீழ்பாக்கம் காவல் மாவட்டத்தில் வசித்து வரும் 22 வயது பெண் ஒருவர், சென்னையில் உள்ள கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 08.01.2026 அன்று இரவு, அவரது மாமாவுடன் அண்ணா சாலையில் உள்ள தியேட்டருக்கு படம் பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்த போது, அங்கு அடையாளம் தெரியாத ஒரு நபர், அப்பெண்ணை உரசி சென்றுள்ளார்.

மேலும் அதே நபர் பின் தொடர்ந்து வந்து, தியேட்டருக்குள் படம் பார்த்துக் கொண்டிருந்த போது, தங்களுக்கு பின் வரிசை இருக்கையில் அமர்ந்திருந்தபடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், இது குறித்து அப்பெண்ணின் மாமா தட்டி கேட்ட போது, அந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசி, மிரட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து, குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அண்ணா சாலை பார்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் ( வயது 25 ) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேஷ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

வீட்டை குத்தகைக்கு விடுவதாக கூறி ரூ.6 இலட்சம் பணம் பெற்று குத்தகைக்கு வீட்டை கொடுக்காமல் மோசடி செய்த வீட்டு உரிமையாளர் கைது.

சென்னை ஓட்டேரி கே.எச். ரோடு பகுதியைச் சேர்ந்த கமல் ( வயது 32 )  என்பவர் 2024 ம் ஆண்டு குத்தகைக்கு வீடு தேடி கொண்டிருந்த போது, இடைத்தரகர் மூலம் அறிமுகமான காயத்ரி மற்றும் அவரது கணவர் காட்வின் ஆகியோர், தங்களுக்கு சொந்தமாக, அயனாவரம், பாளையக்கார தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை குத்தகைக்கு (Lease) விடுவதாகவும், ரூ.8 இலட்சம் பணம் கொடுத்தால் அவ்வீட்டில் உள்ளவர்களுக்கு பணத்தை கொடுத்து காலி செய்ய சொல்லி தங்களுக்கு குத்தகைக்கு விடுவதாக கூறியுள்ளனர்.

கமல் கடந்த 2024ம் ஆண்டு ரூ.6 இலட்சம் பணத்தை காட்வின் மற்றும் அவரது மனைவியிடம் கொடுத்து விட்டு, வீட்டை ஒப்படைத்த பின் மீதம் ரூ.2 இலட்சம் தருவதாக கூறி ஒப்பந்தம் போட்டு சென்றதாகவும், பின்னர் காட்வின் மேற்படி வீட்டை கமலுக்கு கொடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில், தான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்ட போது, காட்வின் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.2.5 இலட்சம் மட்டும் பணம் கொடுத்துவிட்டு மீதி ரூ.3.5 இலட்சம் பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றி தலைமறைவாகி விட்டதாகவும், கமல் என்பவர் அயனாவரம் காவல் நிலைய குற்றப் பிரிவில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் மோசடி பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அயனாவரம் காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மோசடியில் ஈடுபட்ட காட்வின், ( வயது 46 ) வீரபாண்டியன் தெரு, வியாசர்பாடி  என்பவரை கைது செய்தனர். 

விசாரணையில் காட்வின் துணிக்கடை நடத்தி நஷ்டம் ஏற்பட்டதால், மனைவியுடன் சேர்ந்து அவர்களுக்கு சொந்தமான வீட்டை குத்தகைக்கு விடுவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட காட்வின் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு எதிரியை காவல் குழுவினர் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
Patta ; இனிமேல் பட்டா பிரச்சனைகளுக்கு 30 நாட்களில் முற்றுப்புள்ளி !!
Patta ; இனிமேல் பட்டா பிரச்சனைகளுக்கு 30 நாட்களில் முற்றுப்புள்ளி !!
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget