மேலும் அறிய

கிரிக்கெட் வீரர் பெயரில் மோசடி ! 5 லட்சம் ஏமாந்த பெண் , அதிர்ச்சியில் காவல் துறை

சென்னையில் நடந்த குற்ற செய்திகளை காணலாம்

கிரிக்கெட் வீரர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு - பெண்ணிடம் 5 லட்சம் ரூபாய் மோசடி

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் கீதா ( வயது 38 ) இவர் அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரில் , கடந்த ஜூன் மாதம் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் , தமிழக கிரிக்கெட் வீரர் பாபா இந்திரஜித் பெயரில் நட்பு கோரிக்கை வந்தது. பின் , மொபைல் போன் எண்களை பகிர்ந்து கொண்டோம்.

அவர் தனக்கு அரசு வேலை வாங்கி தரும் செல் வாக்கு இருப்பதாக கூறினார். இதை நம்பி பல தவணைகளில் 5.08 ரூபாய் பணப்பரிமாற்ற செயலியா 'ஜிபே ' மூலம் அனுப்பினேன். ஆனால் வேலை வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. அவர் மீது நடவடிக்கை வேண்டும் என இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். 

போலீசாரின் விசாணையில் , கிரிக்கெட் அணி வீரர் பெயரில் மோசடியில் ஈடுபட்டது ஒட்டியம்பாக்கம் காரணை பிரதான பகுதியை சாலையை சேர்ந்த ராகுல் ( 29 ) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

விசாரணையில் நிறுவனத்தில் பணிபுரிந்த ராகுல், கடந்த ஜனவரி மாதம் பணியில் இருந்து நீக்கப்பட்டார். பின், குடும்பம் மற்றும் தனக்கு நிச்சயிக்கப்பட்ட திருமண தேவைக்காக , பிரபலங்கள் பெயரில் போலி கணக்கை துவங்கி , பலரிடம் மோசடி செய்திருப்பது தெரிந்தது. விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டார்.

போலி நகையை கொடுத்து 3 லட்சம் ரூபாய் ஏமாற்றிய பெண்

சென்னை பெரம்பூர் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் தேவிகா ( வயது 56 )  இவரது கணவர் குப்புசாமி. தனியார் நிறுவன ஊழியர். தேவிகா தன் வீட்டருகே நின்றிருந்த போது அங்கு வந்த மர்ம பெண் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். தன்னிடம் 7.5 சவரன் தங்க நகை உள்ளதாகவும், மருத்துவ செலவுக்காக , அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும் கூறி , 5 லட்சம் ரூபாய் தரும்படி தேவிகாவிடம் கேட்டுள்ளார்.

இதை நம்பிய தேவிகா , தன்னிடம் இருந்த நகைகளை , 3 லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்து , பணத்தை பெண்ணிடம் கொடுத்துள்ளார். பின், அப்பெண் அவரிடம் இருந்த நகைகளை தேவிகாவிடம் கொடுத்துள்ளார். பின் நகைக் கடைக்கு சென்ற தேவிகா, அப்பெண் கொடுத்த நகைகளை பரிசோதித்த போது , அவை போலியானவை என தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தேவிகா கொடுத்த புகாரின்படி , எம்.கே.பி நகர் போலீசார் வழக்கு பதிந்து , அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.88  லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. இதில் வந்த பயணியரை, சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது, தமிழக பயணியர் இருவர் சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் சென்று திரும்பினர். அவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்ளிடம் விசாரித்ததில் கடத்தல் குருவிகள் என தெரிய வந்தது.

அவர்களது உடைமைகளை பிரித்து பார்த்த போது அதில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து இருவரையும் தனி அறைக்கு அழைத்து சென்று விசாரித்ததில் , உள்ளாடைக்குள் தங்க பசை மறைத்து கடத்தியது தெரிய வந்தது. அதன் எடை 781 கிராம். மதிப்பு 88 லட்சம் ரூபாய். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் , இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
MK STALIN: யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
Pan Card Link: பான் கார்டு & ஆதார் இணைக்கவில்லையா? 2026-ல் பெரிய சிக்கல்! உடனே தெரிஞ்சிக்கோங்க
Pan Card Link: பான் கார்டு & ஆதார் இணைக்கவில்லையா? 2026-ல் பெரிய சிக்கல்! உடனே தெரிஞ்சிக்கோங்க
TN Heavy Rain Alert: 12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சறுக்கிய விஜய் கிராஃப்? தள்ளாடும் தளபதி கச்சேரி! VIEWS குறைந்தது ஏன்?
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்!அசத்திய அப்போலோ
SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap
Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
MK STALIN: யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
Pan Card Link: பான் கார்டு & ஆதார் இணைக்கவில்லையா? 2026-ல் பெரிய சிக்கல்! உடனே தெரிஞ்சிக்கோங்க
Pan Card Link: பான் கார்டு & ஆதார் இணைக்கவில்லையா? 2026-ல் பெரிய சிக்கல்! உடனே தெரிஞ்சிக்கோங்க
TN Heavy Rain Alert: 12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Annamalai: ஸ்விம்மிங், சைக்கிளிங், ரன்னிங்கில் கலக்கும் அண்ணாமலை.! அரசியல் மட்டுமல்ல விளையாட்டிலும் அண்ணன் கெத்து தான்
ஸ்விம்மிங், சைக்கிளிங், ரன்னிங்கில் கலக்கும் அண்ணாமலை.! அரசியல் மட்டுமல்ல விளையாட்டிலும் அண்ணன் கெத்து தான்
Akash Choudry: அடுத்தடுத்து 8 சிக்ஸர்கள்..! அடி.. அடி.. அன்பீலிவபிள் அடி - உலக சாதனை படைத்த இந்தியர்!
Akash Choudry: அடுத்தடுத்து 8 சிக்ஸர்கள்..! அடி.. அடி.. அன்பீலிவபிள் அடி - உலக சாதனை படைத்த இந்தியர்!
10 பவுன் நகை பறித்து சென்ற வழக்கில் 2 பேருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை
10 பவுன் நகை பறித்து சென்ற வழக்கில் 2 பேருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை
Embed widget