மேலும் அறிய

விழுப்புரம் அருகே வகுப்பறையில் அமர்ந்திருந்த +2 மாணவன் திடீரென உயிரிழப்பு

’’தினேஷிற்கு திடீரென அதிகளவு வியர்வை வெளியேறியது. அடுத்த சில நொடிகளில் அவரது வாயில் இருந்து நுரை வெளியேறியபடி மயங்கி விழுந்தார்’’

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள மூங்கில்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (42). விவசாயி. இவரது மகன் தினேஷ் (17). இவர், வா.பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல் தினேஷ் நேற்று காலையில் பூந்தோட்டத்தில் பூப்பறித்து விட்டு பள்ளிக்கு சென்றார். வகுப்பறையில் அமர்ந்திருந்த போது காலை 9.45 மணியளவில் தினேஷிற்கு திடீரென அதிகளவு வியர்வை வெளியேறியது. அடுத்த சில நொடிகளில் அவரது வாயில் இருந்து நுரை வெளியேறியபடி மயங்கி விழுந்தார்.

Neet | நீட் தேர்வு முடிவு பற்றிய பதற்றத்தில் அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை..!


விழுப்புரம் அருகே வகுப்பறையில் அமர்ந்திருந்த +2 மாணவன் திடீரென உயிரிழப்பு

 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த, சக மாணவர்கள், இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியை சாந்தியிடம் கூறினர். உடனே தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் ஓடிவந்து, மாணவர் தினேஷை மீட்டு சிகிச்சைக்காக ராதாபுரம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மாலை மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே தினேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள பிணவறையில் வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்து, அதன் அறிக்கை வந்தால் தான் மாணவர் தினேஷ் இறந்ததற்கான காரணம் தெரியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.  இது குறித்து விநாயகமூர்த்தி விக்கிரவாண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் தினேஷ் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

REACT Tamila : தலைவி படம் எப்படி இருக்கு? | ABP Cinema | | Thalaivi Movie | Public Review| Cinema News


விழுப்புரம் அருகே வகுப்பறையில் அமர்ந்திருந்த +2 மாணவன் திடீரென உயிரிழப்பு

 


இதேபோல், கள்ளக்குறிச்சி அருகே பெருமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த தனவேல் மகன் சதாசிவம் (15). தண்டலை அரசு உயர்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த இவர் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் கரும்பு வயலில் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை அறிந்து வந்த அவரது தாய் கற்பகவள்ளி கிராமமக்கள் உதவியுடன் அவரை சிகிச்சைக்காக கள்ளகுறிச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சதாசிவம் பரிதாபமாக இறந்தார். அவர் எவ்வாறு இறந்தார்? அதற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இது குறித்து கற்பகவள்ளி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் மர்ம சாவு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Vadivelu Birthday Special : எனக்கு எண்டே இல்ல.. ஆல் ஏரியா கில்லி.. வடிவேலு 2.0

தலைப்பு செய்திகள்

திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
Chennai Power Cut: சென்னைல ஜூலை 25-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னைல ஜூலை 25-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
" நான் ஒருத்தர கொலை பண்ணிட்டேன் " நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்
மக்களே ரெடியா இருங்க! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் இன்று மாலை செம்ம ட்விஸ்ட்... வானிலை மையம் திடீர் எச்சரிக்கை!
மக்களே ரெடியா இருங்க! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் இன்று மாலை செம்ம ட்விஸ்ட்... வானிலை மையம் திடீர் எச்சரிக்கை!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Embed widget