மேலும் அறிய

விழுப்புரம் அருகே வகுப்பறையில் அமர்ந்திருந்த +2 மாணவன் திடீரென உயிரிழப்பு

’’தினேஷிற்கு திடீரென அதிகளவு வியர்வை வெளியேறியது. அடுத்த சில நொடிகளில் அவரது வாயில் இருந்து நுரை வெளியேறியபடி மயங்கி விழுந்தார்’’

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள மூங்கில்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (42). விவசாயி. இவரது மகன் தினேஷ் (17). இவர், வா.பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல் தினேஷ் நேற்று காலையில் பூந்தோட்டத்தில் பூப்பறித்து விட்டு பள்ளிக்கு சென்றார். வகுப்பறையில் அமர்ந்திருந்த போது காலை 9.45 மணியளவில் தினேஷிற்கு திடீரென அதிகளவு வியர்வை வெளியேறியது. அடுத்த சில நொடிகளில் அவரது வாயில் இருந்து நுரை வெளியேறியபடி மயங்கி விழுந்தார்.

Neet | நீட் தேர்வு முடிவு பற்றிய பதற்றத்தில் அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை..!


விழுப்புரம் அருகே வகுப்பறையில் அமர்ந்திருந்த +2 மாணவன் திடீரென உயிரிழப்பு

 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த, சக மாணவர்கள், இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியை சாந்தியிடம் கூறினர். உடனே தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் ஓடிவந்து, மாணவர் தினேஷை மீட்டு சிகிச்சைக்காக ராதாபுரம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மாலை மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே தினேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள பிணவறையில் வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்து, அதன் அறிக்கை வந்தால் தான் மாணவர் தினேஷ் இறந்ததற்கான காரணம் தெரியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.  இது குறித்து விநாயகமூர்த்தி விக்கிரவாண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் தினேஷ் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

REACT Tamila : தலைவி படம் எப்படி இருக்கு? | ABP Cinema | | Thalaivi Movie | Public Review| Cinema News


விழுப்புரம் அருகே வகுப்பறையில் அமர்ந்திருந்த +2 மாணவன் திடீரென உயிரிழப்பு

 


இதேபோல், கள்ளக்குறிச்சி அருகே பெருமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த தனவேல் மகன் சதாசிவம் (15). தண்டலை அரசு உயர்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த இவர் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் கரும்பு வயலில் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை அறிந்து வந்த அவரது தாய் கற்பகவள்ளி கிராமமக்கள் உதவியுடன் அவரை சிகிச்சைக்காக கள்ளகுறிச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சதாசிவம் பரிதாபமாக இறந்தார். அவர் எவ்வாறு இறந்தார்? அதற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இது குறித்து கற்பகவள்ளி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் மர்ம சாவு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Vadivelu Birthday Special : எனக்கு எண்டே இல்ல.. ஆல் ஏரியா கில்லி.. வடிவேலு 2.0

தலைப்பு செய்திகள்

மாற்றுத் திறனாளி பெண்ணை காரில் கடத்தி வன்கொடுமை செய்த கொடூரர்கள் !! குண்டாஸில் அதிரடி கைது
மாற்றுத் திறனாளி பெண்ணை காரில் கடத்தி வன்கொடுமை செய்த கொடூரர்கள் !! குண்டாஸில் அதிரடி கைது
சென்னை - காஞ்சிபுரம் மக்களே அலர்ட்! - இத மட்டும் செய்ய தவறினால் தண்ணீருக்கு தவிக்க நேரிடும்!
சென்னை - காஞ்சிபுரம் மக்களே அலர்ட்! - இத மட்டும் செய்ய தவறினால் தண்ணீருக்கு தவிக்க நேரிடும்!
TN Weather Update: இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட், சென்னை உட்பட 23 மாவட்டங்களில் கனமழை - வானிலை வார்னிங்
இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட், சென்னை உட்பட 23 மாவட்டங்களில் கனமழை - வானிலை வார்னிங்
கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு
கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Embed widget