மேலும் அறிய

போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லையா? அரசு போக்குவரத்துக்கழகம் கொடுத்த புள்ளி விவரம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 04.06.2025 முதல் 06.06.2025 வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டது

முகூர்த்தம், பக்ரீத், மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த நிலையில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுப்பட்ட நிலையில் பேருந்து இயக்கம் குறித்த அறிக்கையை அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 04.06.2025 முதல் 06.06.2025 வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டது என அரசு போக்குவரத்துக்கழகம் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறப்பு பேருந்துகள் இயக்கம்:

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து, திருவண்ணாமலை,திருச்சி,கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு முன்பதிவு அடிப்படையில் சிறப்புப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 04.06.2025 (புதன்கிழமை) அன்று தினசரி இயக்கக்கூடிய 1,136 பேருந்துகளுடன் கூடுதலாக 200 பேருந்துகள் இயக்கப்பட்டு 73,480 பயணிகளும், 05.06.2025 (வியாழக்கிழமை) அன்று தினசரி இயக்கக்கூடிய 1,136 பேருந்துகளுடன் கூடுதலாக 622 பேருந்துகள் இயக்கப்பட்டு 96,690 பயணிகளும் மற்றும் 06.08.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தினசரி இயக்கக்கூடிய 1,136 பேருந்துகளுடன் கூடுதலாக 788 பேருந்துகள் இயக்கப்பட்டு 1.08,205 பயணிகளும் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த மூன்று தினங்களில் பயணிகளின் தேவைக்கேற்பவும். முன்பதிவு அடிப்படையிலும் போதுமான பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.

2,76,735 பயணிகள் பயணம்

இந்நிலையில், புதன்கிழமை அன்று 7,031 பயணிகளும் வியாழக்கிழமை அன்று 8,496 பயணிகளும் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று 9.364 பயணிகளும் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆக மொத்தம் மூன்று தினங்களில் 24,831 முன்பதிவு செய்த பயணிகள் உட்பட 276,735 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

சென்னையிலிருந்து 94,926 முன்பதிவு இருக்கைகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள வசதி அளித்துள்ள நிலையில் 26% இருக்கைகள் மட்டுமே கடந்த மூன்று தினங்களிலும் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். அரசு பேருந்துகளில் முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள பேருந்து இருக்கையில் அதிகபட்சமாக 9% மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது.

ஒரே நேரத்தில் குவியும் பயணிகள்

பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்கையில் பேருந்து நிலையங்களில் தேவையற்ற விவாதங்கள், முந்தியடித்து ஏறுதல் மற்றும் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படுவதை அறவே தவிர்க்கப்படும். மேலும் நள்ளிரவு நேரங்களில் ஒரே நேரத்தில் மிக அதிகளவில் பயணிகள் பேருந்து நிலையத்திற்கு பயணம் மேற்கொள்ள வருகை புரிவதால் பயணிகளுக்கு தவிர்க்க முடியாத சிரமம் ஏற்படுகிறது.

முன்பதிவு செய்யவேண்டும்:

எனவே, தொலைதூர பயணம் மேற்கொள்ளளும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயணிகள் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்யும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகளை இயக்கிட வழிவகை செய்யப்படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறோம். எனவே பயணிகள் தங்களது பயணத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து எந்தவித சிரமமின்றி பயணம் செய்திட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Embed widget