மேலும் அறிய

ராஜகோபாலன் வழக்கு விசாரணை: ‛தெரியாது... தெரியாது...’ ஒற்றை பதிலளித்த பள்ளி நிர்வாகம்!

ஆசிரியர் ராஜகோபாலன் தொடர்பான பாலியல் வழக்கில், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளின் பெரும்பாலான கேள்விகளுக்கு பள்ளி நிர்வாகம் தெரியாது என்றே பதிலளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் வழக்கு தொடர்பாக தனியார் பள்ளி முதல்வரிடம் நடத்திய விசாரணையில், புகார் கொடுத்த மாணவிகளை தெரியாது என்று கூறியுள்ளார்.

சென்னை கே.கே.நகரில் உள்ள தனியர் பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் புகார் கூறியது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மாணவிகள் கொடுத்த பாலியல் குறித்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில், சமூக வலைதளத்தில் புகார் வருவதற்கு முன்பு மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு குறித்து தங்களுக்கு தெரியாது என பள்ளி நிர்வாகம் தரப்பில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் பதில் அளிக்கப்பட்டது. பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜன் தாளாளர் ஷீலா ராஜேந்திரன் இருவரிடமும் நேற்று 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். சமூகவலைதளத்தில் பாலியல் புகார் அளித்த மாணவிகள் யார் என்றே தெரியாது என்று கூறினர். அதிகாரிகளின்  பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என்றே அவர்கள் பதிலளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


ராஜகோபாலன் வழக்கு விசாரணை: ‛தெரியாது... தெரியாது...’ ஒற்றை பதிலளித்த பள்ளி நிர்வாகம்!

முன்னதாக, மாணவிகளின் தொடர் புகாரால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ஆசிரியர் ராஜகோபாலனை நீதிமன்ற அனுமதியுடன் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். இதில், கடந்த 10 ஆண்டுகளாக பள்ளியில் 11,12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு அதிக மதிப்பெண் எடுக்க உதவி செய்வதாக கூறியும், சிறப்பு வகுப்பு என மாணவிகளை பள்ளிக்கு வரவழைத்து விடுமுறை நாட்களில் பள்ளி அறையிலேயே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும், அதில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆசிரியர் ராஜகோபாலன் மீது பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்திருந்ததும் தெரியவந்தது. ஆனால், மாணவிகளின் புகார்கள் மீது பள்ளி நிர்வாகம் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல், பள்ளியில் நடைபெறும் பாலியல் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழுவில் ஆசிரியர் ராஜகோபாலனையும் நியமித்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதனால் தனது மீது மாணவிகள் அளித்த பாலியல் புகார்களை ஆசிரியர் சக ஆசிரியர்களுடன் இணைந்து வெளியே தெரியாமல் மறைத்து புகார் அளித்த மாணவிகளுக்கு எதிராகவே மாற்றியதும் தெரியவந்தது.

பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் ஒருவரின் மகனுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் வகுப்பு ஆசிரியராக இருந்துள்ளார். இதனால் ராஜகோபாலன் தனது வகுப்பு மாணவன் என்ற முறையில் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் மகனுடன் தற்போதும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திகொண்டு அசைக்க முடியாக நபராக பள்ளியில் இருந்து வந்துள்ளார்.

ஆஃபர் கொடுத்து அழைத்த சீனா.. இந்தியாவே முக்கியம் என மறுத்த சுல்தான் கதை

இதனால் மாணவிகளிடம் அவர் தவறான  எண்ணத்தில் மற்றும் பள்ளியின் முதல்வருக்கும் தெரிந்தும் ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. ராஜகோபாலன் தனது வகுப்பு மாணவனான பள்ளி  நிர்வாக குழு உறுப்பினர் மகன் இருக்கும் தைரியத்தில் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், இந்த விசாரணையின்போது மாணவிகளின் பாலியல் விவகாரத்தில் உடந்தையாக இருந்தவர்கள் யார் யார்? என்பது குறித்து 100 பக்கம் வாக்குமூலம் ராஜகோபாலன் அளித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த வாக்குமூலத்தின்படி 10 ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட 300 மாணவிகளின் விவரங்களை போலீசார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர். 300க்கும் மேற்பட்ட  மாணவிகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஆசிரியர் மீது இதுவரை 40க்கும் மேற்பட்ட முன்னாள் மற்றும் தற்போதைய மாணவிகள் மட்டும் புகார் அளித்துள்ளனர். மீதமுள்ள மாணவிகள் பாலியல் தொடர்பாக போலீசாருக்கு எந்தவித புகார்களும் வரவில்லை.  ஆசிரியர் ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தின் படி பள்ளி முதல்வரிடம் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகள் புகாரளித்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் பள்ளி முதல்வர் மர்ரும் தாளாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இவர்களிடம் இரண்டு முறை விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
ABP Premium

வீடியோ

”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Maruti eVitara: மாருதி சுசூகியின் முதல் மின்சார வாகனத்தில் என்ன இருக்கிறது.? இ விதாராவின் அம்சங்கள் விரிவாக..
மாருதி சுசூகியின் முதல் மின்சார வாகனத்தில் என்ன இருக்கிறது.? இ விதாராவின் அம்சங்கள் விரிவாக..
Indian Cars Export Record: வெளிநாடுகளில் பட்டையை கிளப்பும் இந்திய கார்கள்; சாதனையை நோக்கி நடைபோடும் ஏற்றுமதி
வெளிநாடுகளில் பட்டையை கிளப்பும் இந்திய கார்கள்; சாதனையை நோக்கி நடைபோடும் ஏற்றுமதி
உஷார்... ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்.! 22ஆம் தேதி முதல் செக் - வெளியான முக்கிய அறிவிப்பு
உஷார்... ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்.! 22ஆம் தேதி முதல் செக் - சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு
TVK Vijay Speech: தூய சக்தி தவெகவிற்கும் .. தீய சக்தி திமுகவிற்கும் இடையே தான் போட்டி- விஜய் அதிரடி
களத்தில் இல்லாதவர்களை தவெக எதிர்க்காது... களத்தில் இருப்பவர்களோடு தான் போட்டியே- விஜய் அதிரடி
Embed widget