மேலும் அறிய

டாஸ்மாக் ; காலி மது பாட்டில்கள் திட்டம் தாமதம் ஏன் ? உயர்நீதிமன்றம் கேள்வி

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதில் என்ன சிரமம் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது

காலி பாட்டில்களுக்கு 10 ரூபாய்

மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள் ஆங்காங்கே பிளாஸ்டிக் பாட்டில்களையும், மது பாட்டில்களையும் துாக்கி வீசுகின்றனர். இதனால், வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.

இதை தடுக்கும் விதமாக, மலைப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மது பாட்டில்களை கூடுதலாக, 10 ரூபாய்க்கு விற்பனை செய்து, காலி பாட்டில்களை திரும்ப தரும் பட்சத்தில், 10 ரூபாயை திருப்பி தரும் திட்டத்தை அமல்படுத்தும் படி, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு சிறப்பு அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், வழக்கறிஞர் சதீஷ்குமார் ஆஜராகி வாதாடினார் ;

காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் இதுவரை 28 மாவட்டங்களில் முழுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. மூன்று மாவட்டங்களில், பகுதி அளவுக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள ஏழு மாவட்டங்களில், டாஸ்மாக் ஊழியர்களின் எதிர்ப்பால், சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. திட்டத்தை எதிர்க்கும் மாவட்டத்தில், டாஸ்மாக் ஊழியர் சங்கங்களுடன் பேச்சு நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் வாதாடினர்.

நீதிபதிகள் கூறியதாவது ; 

நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்து விட்டு, காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம், மது பாட்டில்களில், 'கியூஆர் கோடு ஸ்டிக்கர்' ஒட்டுதல் போன்ற பணிகளை முழுமையாக அமல்படுத்த, தொடர்ந்து கால அவகாசம் கோருவது சரியல்ல. உறுதி அளித்தபடி, இந்நேரம் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம், மாநிலம் முழுதும் அமல்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

டாஸ்மாக் நிர்வாகத்துக்கு என்ன சிரமம் ?

ஓராண்டுக்கு மேல் ஆகியும், மது பாட்டில்களில், கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டும் திட்டம் அமல்படுத்தப்படவில்லை. இதற்கான டெண்டர் பணிகளும், இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பண்டிகை காலங்களில், மது பாட்டில்கள் விற்பனை வாயிலாக, பல ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டி உள்ளதாக, செய்தித் தாள்களில் தகவல் வெளியாகிறது. அவ்வாறு இருக்கும் போது இந்த திட்டங்களை உடனே அமல்படுத்துவதில், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு என்ன சிரமம் ? இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் அளித்த பதிலில் ; 

டாஸ்மாக் கடைகள் முழுதும் கணினிமயமாக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால், பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, காலி மது பாட்டில்களைச் சேகரிக்கும் திட்டத்தை, மூன்றாம் தரப்பு முகமைகள் வாயிலாக செயல்படுத்த, டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்தவுடன் அமல்படுத்தப்படும். நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி, அனைத்து உத்தரவாதமும் முழுமையாக நிறைவேற்றப்படும். அடுத்த விசாரணையில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, கடைசியாக அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளி வைத்து வைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
மறைக்கப்படுகிறதா தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு? - அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைகளால் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!
மறைக்கப்படுகிறதா தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு? - அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைகளால் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
TN Government Employees : இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
SC on Menstrual Leave: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
SC on Menstrual Leave: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
CM Stalin: ”கண்ண திறக்கனும் சாமி” சாதனை பட்டியலில் இதை மறந்துட்டீங்க - சிஎம் போஸ்டில் நெட்டிசன்கள் ஆவேசம்
CM Stalin: ”கண்ண திறக்கனும் சாமி” சாதனை பட்டியலில் இதை மறந்துட்டீங்க - சிஎம் போஸ்டில் நெட்டிசன்கள் ஆவேசம்
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
கேங்ஸ்டர் மாப்பிள்ளையை தூக்கிய போலீசார்.. ”கல்யாணம் முடிக்கணும்” போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மணமகள்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
Embed widget