மேலும் அறிய

டாஸ்மாக் ; காலி மது பாட்டில்கள் திட்டம் தாமதம் ஏன் ? உயர்நீதிமன்றம் கேள்வி

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதில் என்ன சிரமம் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது

காலி பாட்டில்களுக்கு 10 ரூபாய்

மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள் ஆங்காங்கே பிளாஸ்டிக் பாட்டில்களையும், மது பாட்டில்களையும் துாக்கி வீசுகின்றனர். இதனால், வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.

இதை தடுக்கும் விதமாக, மலைப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மது பாட்டில்களை கூடுதலாக, 10 ரூபாய்க்கு விற்பனை செய்து, காலி பாட்டில்களை திரும்ப தரும் பட்சத்தில், 10 ரூபாயை திருப்பி தரும் திட்டத்தை அமல்படுத்தும் படி, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு சிறப்பு அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், வழக்கறிஞர் சதீஷ்குமார் ஆஜராகி வாதாடினார் ;

காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் இதுவரை 28 மாவட்டங்களில் முழுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. மூன்று மாவட்டங்களில், பகுதி அளவுக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள ஏழு மாவட்டங்களில், டாஸ்மாக் ஊழியர்களின் எதிர்ப்பால், சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. திட்டத்தை எதிர்க்கும் மாவட்டத்தில், டாஸ்மாக் ஊழியர் சங்கங்களுடன் பேச்சு நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் வாதாடினர்.

நீதிபதிகள் கூறியதாவது ; 

நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்து விட்டு, காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம், மது பாட்டில்களில், 'கியூஆர் கோடு ஸ்டிக்கர்' ஒட்டுதல் போன்ற பணிகளை முழுமையாக அமல்படுத்த, தொடர்ந்து கால அவகாசம் கோருவது சரியல்ல. உறுதி அளித்தபடி, இந்நேரம் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம், மாநிலம் முழுதும் அமல்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

டாஸ்மாக் நிர்வாகத்துக்கு என்ன சிரமம் ?

ஓராண்டுக்கு மேல் ஆகியும், மது பாட்டில்களில், கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டும் திட்டம் அமல்படுத்தப்படவில்லை. இதற்கான டெண்டர் பணிகளும், இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பண்டிகை காலங்களில், மது பாட்டில்கள் விற்பனை வாயிலாக, பல ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டி உள்ளதாக, செய்தித் தாள்களில் தகவல் வெளியாகிறது. அவ்வாறு இருக்கும் போது இந்த திட்டங்களை உடனே அமல்படுத்துவதில், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு என்ன சிரமம் ? இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் அளித்த பதிலில் ; 

டாஸ்மாக் கடைகள் முழுதும் கணினிமயமாக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால், பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, காலி மது பாட்டில்களைச் சேகரிக்கும் திட்டத்தை, மூன்றாம் தரப்பு முகமைகள் வாயிலாக செயல்படுத்த, டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்தவுடன் அமல்படுத்தப்படும். நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி, அனைத்து உத்தரவாதமும் முழுமையாக நிறைவேற்றப்படும். அடுத்த விசாரணையில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, கடைசியாக அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளி வைத்து வைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய் தான் நிரந்தர முதல்வர் ; இபிஎஸ்-க்கு வயிற்று வலி - தவெக செங்கோட்டையன் அதிரடி பேட்டி
விஜய் தான் நிரந்தர முதல்வர் ; இபிஎஸ்-க்கு வயிற்று வலி - தவெக செங்கோட்டையன் அதிரடி பேட்டி
Chennai Power Cut: சென்னைல நாளை(27.05.2026) எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா.?
சென்னைல நாளை(27.05.2026) எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா.?
தவெக கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா? - 15 ஆண்டு தற்காலிக ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்ய ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!
தவெக கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா? - 15 ஆண்டு தற்காலிக ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்ய ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!
சென்னையில் இருந்து மலேசியா சென்ற விமானத்தில் கலாட்டா: இருவர் கைது!
சென்னையில் இருந்து மலேசியா சென்ற விமானத்தில் கலாட்டா: இருவர் கைது!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி
அருண் IPS-க்கு புது பதவி! CM விஜய் MASTERPLAN! கடுப்பாகும் தவெகவினர்
’சூலூர் வழக்கில் சிரித்த பெண் IG’ யார் இந்த ரம்யா பாரதி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: அதிமுக-வை உள்ளே இழுக்கும் தவெக! அப்செட்டில் கூட்டணி கட்சிகள்! சமாதானப்படுத்துவாரா விஜய்?
TVK Vijay: அதிமுக-வை உள்ளே இழுக்கும் தவெக! அப்செட்டில் கூட்டணி கட்சிகள்! சமாதானப்படுத்துவாரா விஜய்?
TN By Election: இடைத்தேர்தலுக்கு ரெடியாகும் தமிழ்நாடு! 5 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு தருவார் விஜய்?
TN By Election: இடைத்தேர்தலுக்கு ரெடியாகும் தமிழ்நாடு! 5 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு தருவார் விஜய்?
பதவி ஆசைக்காகப் பாயும் அதிமுகவினர்! தவெகவின் அராஜக அரசியலைத் தோலுரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
பதவி ஆசைக்காகப் பாயும் அதிமுகவினர்! தவெகவின் அராஜக அரசியலைத் தோலுரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கத்தில் திரைமறைவு சதி! சிறுபான்மையினரை ஒதுக்கும் முதல்வர் ரங்கசாமி...!
புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கத்தில் திரைமறைவு சதி! சிறுபான்மையினரை ஒதுக்கும் முதல்வர் ரங்கசாமி...!
CPM Slams TVK:
CPM Slams TVK: "ஆரோக்கியமான அரசியலுக்கு இது அழகல்ல.." - தவெக-வில் இணைந்த 4 அதிமுக MLA-க்கள்; சிபிஎம் கண்டனம்!
TVK Vijay:
TVK Vijay: "முட்டு கொடுக்க முடியாது முதல்வரே!" பயிர்க்கடன் அறிவிப்பு.. தவெக மீது சொந்தக் கட்சி வேட்பாளரே அதிருப்தி!
CM Vijay Letter to Modi: “கர்நாடகாவுக்கு அட்வைஸ் பண்ணுங்க மோடி சார்“; மேகதாது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“கர்நாடகாவுக்கு அட்வைஸ் பண்ணுங்க மோடி சார்“; மேகதாது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
CBSE: சிபிஎஸ்இ-ன் மும்மொழி கட்டாயம்: குழந்தைகள் பரிசோதனை எலிகளா? கொந்தளிக்கும் பெற்றோர்கள்!
CBSE: சிபிஎஸ்இ-ன் மும்மொழி கட்டாயம்: குழந்தைகள் பரிசோதனை எலிகளா? கொந்தளிக்கும் பெற்றோர்கள்!
Embed widget