சிறு, குறு தொழில் கடன் !! 40 லட்சம் ரூபாய் வரை சொத்து பிணையில்லா கடன் !!
தயாரிப்பு நிறுவனங்களுக்கு 40 லட்சம் ரூபாய் வரை சொத்து பிணையில்லா கடன் வழங்கப்படும்

சிறு, குறு தொழில் கடன் !! 40 லட்சம் ரூபாய் வரை சொத்து பிணையில்லா கடன் !!
சிறு, குறுந் தொழில்களுக்கு அதிக கடன் கிடைக்க துவக்கப்பட்ட தமிழக கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் கடந்த மூன்றரை ஆண்டுகளில், 43,100 தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்ட கடனுக்கு, தமிழக அரசு அளித்துள்ள கடன் உத்தரவாதம், 752 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன. அவை தொழில் விரிவாக்கம், இயந்திரங்கள், மூலப் பொருட்கள் கொள்முதல் போன்றவற்றுக்கு தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வாங்குகின்றன.
பல வங்கிகள், நிறுவனங்கள் கடன் கேட்கும் மொத்த தொகையில், 60 - 70 சதவீதம் தான் வழங்குகின்றன. இதனால், தனியார், நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, சிறு, குறுந் தொழில் நிறுவனங்களுக்கு அதிகளவில் விரைவாக கடன் கிடைக்க, தமிழக கடன் உத்தரவாத திட்டத்தை, 2022 ஆகஸ்டில் தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறை துவக்கியது. இத்திட்டம், மத்திய அரசின் சிறு, குறுந்தொழில்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை உடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.
இதனால், சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிதில், அதிக தொகை கடன் கிடைக்கிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் இதுவரை, 43,100 பேருக்கு கடன் உத்தரவாத தொகை, 752 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது.
இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் ;
அரசு உத்தரவாதத்தில் கடன் பெற விரும்பும் நிறுவனங்கள் சென்னை கிண்டியில் உள்ள பேம் டி.என்., நிறுவனத்தின் அதிகாரிகளை தொடர்பு கொண்டால் தேவையான ஆலோசனைகளை வழங்குவர் என்றார்.
வரும் 30 ம் தேதி !! ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க அரசு உதவி
தமிழகம் உட்பட நாடு முழுதும் இளைஞர்கள் தனியாகவோ அல்லது நண்பர்களுடன் இணைந்தோ, 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புது தொழில் நிறுவனங்களை துவக்குகின்றனர்.
அவற்றுக்கு, மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி, தொழிலை மேம்படுத்த ஆலோசனை போன்றவற்றை வழங்குகின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கான அங்கீகாரம் என்பது, மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தும் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சிலர் தொழில் துவக்கினாலும், இந்த துறையில் பதிவு செய்வதில்லை. எனவே, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்கியவர்கள், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தும் துறையில் பதிவு செய்ய, 'ஆன்லைனில்' விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது. வரும், 30ம் தேதி மதியம், தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் இதற்கான ஏற்பாடு செய்துள்ளது.























