மேலும் அறிய

"மக்களுக்கு பிரச்சனைன்னா ஓடோடி வரணும் " ஆட்சியருக்கு JCD பிரபாகர் அதிரடி உத்தரவு

சென்னை நடுநிலைப் பள்ளி வளாகத்தில் , மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு ஒருங்கிணைந்த சேவை மையத்தை ஜே.சி.டி. பிரபாகர் திறந்து வைத்தார்.

" மாற்று திறனாளி மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் " 

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் வளாகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தை ஜே.சி.டி பிரபாகர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சேவை மையத்தை திறந்து வைத்த பின் உரையாற்றிய சட்டப்பேரவைத் தலைவர் ;

மிகக் குறுகிய காலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தை ஆயிரம் விளக்கு தொகுதியில் ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

விரைவாக மக்களை சந்திக்க வேண்டும் என்பதிலும் குறைகளை தீர்க்க வேண்டும் என்பதையும் நம்முடைய முதலமைச்சர் விரும்புகிறார். அவர் எதை செய்தாலும் அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும் என நினைப்பார். எதில் ஈடுபட்டாலும் அந்த ஈடுபாடு அவரது கண்களில் தெரியும்.

" மக்களுக்கு பிரச்சனை என்றால் ஓடோடி வந்து சேவை செய்யனும் " 

மனித நேயம் என்பது ஒரு முதலமைச்சருக்கு அடிப்படை அதன் அடிப்படையில் தமிழ்நாடு மனித நேயமிக்க அவரைப் பெற்றிருக்கிறது. மக்களுடைய எதிர்பார்ப்பு நிறைய இருக்கிறது அதனால் பல சவால்களை சந்தித்து வருகிறோம். மக்கள் அனுதினமும் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

மாண்புமிகு முதலமைச்சர் கொஞ்சம் அவகாசம் கேட்டிருக்கிறார். அவருக்கு அனைத்து துறைகளிலும் என்னென்ன நடந்திருக்கிறது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என நன்றாக தெரிந்திருக்கிறது.

தற்பொழுது மாற்றுத் திறனாளிகள் துறை தமிழ்நாட்டில் வேகம் எடுத்து இருக்கிறது. அதனுடைய ஒரு அடையாளம் தான் இந்த நிகழ்ச்சி. மாவட்ட ஆட்சித் தலைவர் மக்களை தேடி செல்ல வேண்டும். மக்களுக்கு பிரச்சனை என்றால் ஓடோடி வந்து சேவை செய்ய வேண்டும்.

காலதாமதம் செய்வதும் கிடப்பில் போடுவதும் என்கிற நிலைமை மாற வேண்டும். அதனால் தான் முதலமைச்சர் சவுக்கில் அடிப்பது போல சொல்லிவிட்டார். வெளிப்படைத்தன்மையான லஞ்சமற்ற அரசு நம் அரசாக இருக்கும் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார் என்று தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

"மக்களுக்கு பிரச்சனைன்னா ஓடோடி வரணும் " ஆட்சியருக்கு JCD பிரபாகர் அதிரடி உத்தரவு
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget