மேலும் அறிய

சென்னையில் அதிர்ச்சி !! ஆன்லைன் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை !!

வெளிமாநில லாட்டரி சீட்டுகளை சட்ட விரோதமாக விற்பனை செய்த நபர் கைது. 26 லாட்டரி சீட்டுகள், ரூ.70,000 பறிமுதல்

சென்னை எழும்பூரில் ஆன்லைன் மூலம் வெளிமாநில லாட்டரிகள் விற்பனை

சென்னை எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் , எழும்பூர் மெட்ரோ இரயில் நிலையம் அருகே கண்காணித்த போது, அங்கிருந்த ஒரு நபர் காவல் குழுவினரை கண்டதும் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து தப்பிக்க முயன்றுள்ளார்.

அந்த நபரை காவல் குழுவினர் மடக்கி பிடித்து விசாரணை செய்த போது, அந்த நபர் லேப்டாப் மற்றம் செல்போன் மூலம் இணையதளம் வாயிலாக தமிழகத்தில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிகளை பதிவிறக்கம் செய்து சட்ட விரோத விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.

அதன் பேரில் எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சட்ட விரோத லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பெரியமேடு பகுதியை சேர்ந்த பழநிநாதன், ( வயது 62 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 26 வெளி மாநில லாட்டரி சீட்டுகள் லாட்டரி சீட்டு விற்ற பணம் ரூ.70,000 மற்றும் ஐபோன் உட்பட 2 செல்போன்கள் 1 லேப்டாப்  மற்றும் 1 எலக்டிரிக் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பழநிநாதன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற  உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்

பூட்டிய வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் திருடிய 3 நபர்கள் கைது. 22.5 கிராம் தங்க நகைகள் மீட்பு. 1 இருசக்கர வாகனம் பறிமுதல்

சென்னை கொடுங்கையூர் சீதாராமன் நகர் 4 - வது தெருவில் வசித்து வரும் சூசைராஜ் ( வயது 35 ) என்பவர் பாடியில் உள்ள அவரது சித்தப்பா இறந்து விட்டதால், காலையில் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பாடிக்கு சென்று இறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பக்கவாட்டு கதவு உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில் வைத்திருந்த சுமார் 23 கிராம் எடை கொண்ட கம்மல், நெக்லஸ், மூக்குத்தி, மோதிரங்கள் ஆகிய தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து சூசைராஜ் கொடுங்கையூர் காவல் நிலைய குற்றப் பிரிவில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொடுங்கையூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து , திருட்டில் ஈடுபட்ட மணலி சின்ன சேக்காடு பகுதியை சேர்ந்த சஞ்சய் ( வயது 19 ) மற்றும் கொடுங்கையூர் ஜம்புலி தெரு பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா ( வயது 20 ) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுனில், ( வயது 20 ) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து , சுமார் 22.5 கிராம் எடை கொண்ட கம்மல், நெக்லஸ், மோதிரங்கள், மூக்குத்தி ஆகிய தங்க நகைகள் மீட்கப்பட்டு, குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்று நோட்டமிட்டு பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து தங்க நகைகள் திருடிக் கொண்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் சஞ்சய் மீது 2 குற்ற வழக்குகளும், ஜெயசூர்யா மீது ஒரு திருட்டு வழக்கும் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 3 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
Embed widget