மேலும் அறிய

Crime ; மகனை கொல்ல வந்த கும்பல் ! தந்தையை சரமாரியாக வெட்டிய அதிர்ச்சி சம்பவத்தால் பரபரப்பு

மகன் இல்லாததால் தந்தையை சரமாரியாக வெட்டிய வழக்கில் திருநங்கை உட்பட 5 பேர் கைது. தப்பித்து ஓடும் போது இரண்டு பேருக்கு கை உடைந்தது

தந்தையை வெட்டிய கும்பல்

சென்னை ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டை பராக்கா இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 50 ) இவர் தனது வீட்டின் அருகே இருந்த போது சுமார் ஐந்து பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து சீனிவாசனின் மகன் கார்த்திக் என்பவரை வெட்ட வந்துள்ளனர். கார்த்திக் வீட்டிற்குள் சென்று பூட்டு போட்டுக் கொண்டதால் வெளியே நின்று கொண்டிருந்த அவரது தந்தை சீனிவாசனை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது.

இதில் சீனிவாசனுக்கு கை மற்றும் கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக் காயம் விழுந்து சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சீனிவாசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் சீனிவாசனின் மகன் கார்த்திக் என்பவர் சரித்திர பதிவேடு ரவுடியாக உள்ளார் என்பது தெரிய வந்தது.

திருநங்கைக்கு பாலியல் சீண்டல்

ஓட்டேரி எஸ்.வி.எம் நகர் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் ( எ ) குள்ள கருப்பா ( வயது 21 ) என்ற நபரும் நட்பாக பழகி வந்துள்ளனர். பிரசாந்த் , அறிவழகன் ( எ ) கீதா என்ற திருநங்கையை காதலித்து திருமணம் முடித்துக் கொண்டார். பிரசாந்த் அடிக்கடி குற்ற வழக்கில் சிக்கி சிறைக்கு செல்லும் போது திருநங்கை கீதாவிடம் கார்த்திக் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். 

இது குறித்து கீதா அளித்த புகாரின் பேரில் கார்த்திக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கார்த்திக் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன்
பிரசாந்த் தன்னை ஏதாவது செய்து விடுவான் என்று எண்ணி வெளியூருக்கு சென்று விட்டார்.

நண்பர்களுடன் சேர்ந்து கொலை

குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் இருந்த பிரசாந்த் மீண்டும் ஜாமினில் வெளியே வந்து கார்த்திக் மீண்டும் வீட்டில் இருப்பதை அறிந்து இரவு தனது நண்பர்களுடன் வந்து அவரை கொலை செய்ய முயற்சி செய்த போது அதில் அவர் தப்பித்து அவரது தந்தை சிக்கிக் கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. 

இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய ஓட்டேரி எஸ்.வி.எம் நகர் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்கின்ற குள்ள கருப்பா ( வயது 25 ) புவன் ( வயது 19 ) திருநங்கையான அறிவு என்கின்ற அறிவழகன் ( வயது 26 ) மற்றும் 15 வயது சிறுவர்கள் இரண்டு பேர் என 5 பேரை போலீசார் கைது செய்தனர்.  

இதில் பிரசாந்த் மற்றும் புவன் ஆகியோரை போலீசார் பிடிக்க முயற்சி செய்த போது அவர்கள் தப்பித்து ஓடும் போது கீழே விழுந்ததில் அவர்களது கை உடைந்தது போலீசார் அவர்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாவுக்கட்டு போட்டனர். அதன் பிறகு திருநங்கை ட அறிவழகன், குள்ள பிரசாந்த், புவன் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் இருவரையும் சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

தலைப்பு செய்திகள்

லஞ்சம் கேட்கும் போலீசாருக்கு இனி ஆப்பு! புகார் அளிக்க இதோ மாவட்ட வாரியான வாட்ஸ்அப் எண்கள்!
Bribe complaint WhatsApp number: லஞ்சம் கேட்கும் போலீசாருக்கு இனி ஆப்பு! புகார் அளிக்க இதோ மாவட்ட வாரியான வாட்ஸ்அப் எண்கள்!
திருவான்மியூர் முதல் உத்தண்டி.. கைவிடப்படுகிறதா ரூ.2,100 கோடி ECR மேம்பாலத் திட்டம்? பின்னணி என்ன?
திருவான்மியூர் முதல் உத்தண்டி! கைவிடப்படுகிறதா ரூ2100 கோடி ECR மேம்பாலத் திட்டம்? பின்னணி என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Embed widget