மேலும் அறிய

Crime : பதறவைக்கும் டார்ச்சர்.. கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. போதை.. கணவனை இழந்த பெண்களுக்கு குறி.. பல் மருத்துவர் சிக்கியது எப்படி?

பல் மருத்துவர் ஒருவர், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பல் மருத்துவர் ஒருவர் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனைக்கு அருகே ஒரு பல் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையை மருத்துவர் நிஷாந்த் ரவிச்சந்திரன் என்பவர் நடத்தி வந்துள்ளார். இவர் மீது சமீபத்தில் இளம் பெண் ஒருவர் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அதன்படி மருத்துவர் நிஷாந்த் ரவிச்சந்திரன் ஷெரின் என்ற மருத்துவர் மூலம் அப்பெண்ணிற்கு அறிமுகமாகியுள்ளார். இந்தப் பெண் திருமணமாகி கணவரை இழந்தவர். அதேபோல் நிஷாந்த் ரவிச்சந்திரன் திருமணமாகி மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளதாக கூறியுள்ளார். மேலும் மருத்துவர் நிஷாந்த் இந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளதாக தெரிகிறது. 

இதன்காரணமாக இருவரும் பல முறை தனிமையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவர் நிஷாந்த் போதை பொருளுக்கு அடிமையாகி அவருடைய நண்பர்களுடன் இந்த இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. அதை தாங்க முடியாமல் அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரை ஏற்று காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஒரு வருடமாக மருத்துவர் நிஷாந்த் நான்குக்கும் மேற்பட்ட விதவை பெண்களை இதுபோன்று ஆசை காட்டி ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அவர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு, இவர் போதைப்பொருள் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. அத்துடன் அந்தப் பெண்கள் இது தொடர்பாக புகார் அளித்தால் அவர்களுடம் எடுத்த ஆபாசப் படங்களை வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் மருத்துவர் நிஷாந்த், தோழி ஷெரின் மற்றும் ஒரு கூட்டாளி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மருத்துவர் நிஷாந்த் மேலும் சில பெண்கள் யாராவது இதுபோன்று ஏமாற்றியுள்ளாரா என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல் மருத்துவர் ஒருவர் இப்படி பல பெண்களை ஏமாற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருத்துவர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் அவருக்கு போதைப் பொருள் எப்படி கிடைக்கிறது என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எமர்ஜென்சி பற்றி இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வது முக்கியம்" - பிரதமர் மோடி!
Vikravandi:  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!
Vikravandi: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!
Breaking News LIVE:  விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:  29 வேட்பாளர்கள் களத்தில்!
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 29 வேட்பாளர்கள் களத்தில்!
"பஸ் ஏற வந்தாலே  தண்ணீரில் வழுக்கி விழுந்திடுவோம்" - மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் அவல நிலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!Jagan Mohan Reddy joins Congress : DK சிவகுமாருடன் ரகசிய ஆலோசனை?காங்கிரஸில் இணையும் ஜெகன்!Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எமர்ஜென்சி பற்றி இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வது முக்கியம்" - பிரதமர் மோடி!
Vikravandi:  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!
Vikravandi: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!
Breaking News LIVE:  விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:  29 வேட்பாளர்கள் களத்தில்!
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 29 வேட்பாளர்கள் களத்தில்!
"பஸ் ஏற வந்தாலே  தண்ணீரில் வழுக்கி விழுந்திடுவோம்" - மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் அவல நிலை
செங்கல்பட்டு: மதுவுக்கு எதிராக மாணவர்களுடன் மாஸ் காட்டிய மாவட்ட ஆட்சியர் - குவியும் பாராட்டு
செங்கல்பட்டு: மதுவுக்கு எதிராக மாணவர்களுடன் மாஸ் காட்டிய மாவட்ட ஆட்சியர் - குவியும் பாராட்டு
Thirumavalavan: மக்களவையில் திருமாவளவன் கேட்ட கேள்வி.. பேசும்போதே மைக் ஆஃப் செய்த சபாநாயகர் - குவியும் கண்டனம்
Thirumavalavan: மக்களவையில் திருமாவளவன் கேட்ட கேள்வி.. பேசும்போதே மைக் ஆஃப் செய்த சபாநாயகர் - குவியும் கண்டனம்
NEET PG 2024 Exam: ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுகலைத் தேர்வு எப்போது?- வெளியான தகவல்
NEET PG 2024 Exam: ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுகலைத் தேர்வு எப்போது?- வெளியான தகவல்
Silambarasan - Vengal Rao: மருத்துவ உதவி கேட்ட வெங்கல் ராவ்.. யோசிக்காமல் சிம்பு செய்த நிதியுதவி!
Silambarasan - Vengal Rao: மருத்துவ உதவி கேட்ட வெங்கல் ராவ்.. யோசிக்காமல் சிம்பு செய்த நிதியுதவி!
Embed widget