மேலும் அறிய

"பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை" தொழிலாளர்களை எச்சரித்த சென்னை போக்குவரத்து கழகம்

சென்னை மாநகர போக்குவரத்து 9ம் தேதிக்கு பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை:

இந்த நிலையில், பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது மக்களுக்கும், தமிழக அரசுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் 9ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருப்பதால் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை போக்குவரத்த கழகம் சென்னை மாநகர போக்குவரத்துக்குட்பட்ட தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாநகர போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு வராவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 9ம் தேதியன்றும், 9ம் தேதிக்கு பின்னரும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

போராட்ட அறிவிப்பால் பதற்றம்:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக தமிழ்நாடு முழுவதும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும். தொடர் விடுமுறை என்பதாலும், தமிழர்கள் பண்டிகை என்பதாலும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் சொந்த ஊருக்கு குடும்பங்களுடன் செல்வது வழக்கம். குறிப்பாக, சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் குடும்பங்களுடன் செல்வார்கள்.

இந்த சூழலில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை அறிவித்திருப்பதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். முன்னதாக, சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கங்கள் உள்பட 23 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கடந்த 3ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்காத காரணத்தால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

பயணிகள் குழப்பம்:

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் அறிவித்த தேதிக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதாலும், போராட்டத்திற்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கப்படாத காரணத்தாலும் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்ல தயாராக இருக்கும் மக்கள் மிகுந்த குழப்பத்திலே உள்ளனர்.  

மேலும் படிக்க: Pongal Parisu Thogai 2024: நாளை முதல் டோக்கன்.. 10-ஆம் முதல் தொடங்கும், பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்.. முழு ரிப்போர்ட்

மேலும் படிக்க: Pongal Parisu Thogai 2024: பொங்கலுக்கு ரூ.1000 இருக்கு.. ஆனா யாருக்கு கிடைக்கும்? யாருக்கு இல்லை? முழு விவரம்..

தலைப்பு செய்திகள்

சென்னையில் போதை மாத்திரை , கஞ்சா விற்றபனை ! திருவல்லிக்கேணி ,வண்ணாரப்பேட்டையில் போலீசார் அதிரடி
சென்னையில் போதை மாத்திரை , கஞ்சா விற்றபனை ! திருவல்லிக்கேணி ,வண்ணாரப்பேட்டையில் போலீசார் அதிரடி
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
முகநூல் காதலால் விபரீதம் ; துபாய் வாலிபர் தற்கொலை ; குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி
முகநூல் காதலால் விபரீதம் ; துபாய் வாலிபர் தற்கொலை ; குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூன் 9-ம் தேதி(09.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? பாருங்க
சென்னை மக்களே.! ஜூன் 9-ம் தேதி(09.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? பாருங்க

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget