மேலும் அறிய

"தமிழ்மண்ணில் விண்வெளி ஆராய்ச்சி அதிகம் நடக்கவில்லை" - மயில்சாமி அண்ணாதுரை வேதனை

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தமிழர்கள் பங்கு அதிகமாக இருந்தாலும் கூட தமிழக மண்ணில் விண்வெளி ஆராய்ச்சி குறித்தான பணிகள் அதிகமாக நடைபெறவில்லை என்று மயில்சாமி அண்ணாதுரை வேதனை கூறியுள்ளார்.

சென்னை மாநகர காவல் துறை சார்பில் மேற்கு தாம்பரம் பகுதியில் , உள்ள தனியார் கல்லூரியில் சிற்பி திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேசப்பற்று ஊக்குவிக்கும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சென்னையில் உள்ள 100 அரசு பள்ளிகளை சேர்ந்த 5000 மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ஐஎஸ்ஆர்ஓ) முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டிஆர்டிஓ) இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஸ்ரீ சாய்ராம் கல்வி குழும தலைமை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து, சென்னை மாநகர காவல் துறை தலைமை இடம் இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்,

 
அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
 
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி, 100 அரசு பள்ளியிலிருந்து ஒவ்வொரு பள்ளியிலும் சுமார் 50 மாணவர்கள் என 5000 மாணவர்களை தேர்ந்தெடுத்து  மாணவ செல்வங்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமை பயிற்சி மையங்கள் நடத்தப்படுகின்றன. அதில் எவ்வாறு ஒழுக்கமாக வாழ வேண்டும், எவ்வாறு உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும, யோகா செய்வது குறித்து பலவித கருத்துக்களை அவர்களுக்கு சொல்லி தருவதோடு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.

இதை நல்ல விதமாக வடிவமைத்துள்ள சென்னை காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் அறிவித்ததன் படி 4.25 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் தாக்கத்தை பொறுத்து வரும் காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களை அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கும் பயிற்சிகள் கொடுக்கப்படும். சிற்பி திட்டம் மூலமாக  பயிற்சி எடுக்கும் மாணவர்கள் எப்படி ஒழுக்கமாக இருக்க வேண்டும், தேச தேசப்பற்றை உருவாக்க வேண்டும், போதைப் பொருட்களை எப்படி ஒழிக்க வேண்டும் போன்ற கருத்துக்களை உள்வாங்கி அவர்கள் செல்லும் பள்ளிகளில் சென்று மாணவர்களிடையே உரையாடல் செய்து எடுத்துச் சொல்லும் நல்ல விஷயமாக அமைந்துள்ளது.
 
மேலும் மாணவர்களை சுற்றாதளங்களுக்கு அழைத்துச் சென்று அங்கு இருக்கும் வரலாற்றுகள் குறித்தும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்படும்.நல்ல சமூகத்தை முன்னெடுத்து செல்லக்கூடிய நல்ல ஒரு திட்டமாக இது உள்ளது. வருங்காலங்களில் இத்திட்டத்தினை சென்னை மட்டுமில்லாமல் மற்ற மாவட்ட அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் இவ்வாறு தெரிவித்தார்.

 
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை அளித்த பேட்டியில்,
 
இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மிக முக்கியமான நாடாக இந்தியாவை உருவாக்கி உள்ளோம் இதற்கு முக்கிய காரணம் நம் நாட்டிலேயே செய்த பல பரிசோதனைகள்  மற்றும் சாதனைகள் தான். இது போன்ற சாதனைகள் எல்லா துறையிலும் பண்ண முடியும். இதனால் நாமும்,நாடும் முன்னேற முடியும். இதன் மூலம் தேசப்பற்றை புதிய பரிமாணத்தில் கொண்டு செல்ல முடியும் இதனை மாணவ செல்வங்கள் தன்னுடைய படிப்புடன் சேர்ந்து தேசப்பற்றை முன்னெடுத்துச் செல்பவர்களாக விளங்குவதை  இந்த சிற்பி திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்டுள்ளது,

இந்தியாவில் உள்ள முன்னணி துறைகளில் விண்வெளி ஆராய்ச்சி துறையும் ஒன்று நம் நாட்டில் இருந்து விண்வெளிக்கு இன்னும் மனிதன் மட்டும் தான் அனுப்பப்படவில்லை மற்ற அனைத்து முயற்சிகளிலும் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தமிழர்கள் பங்கு அதிகமாக இருந்தாலும் கூட தமிழக மண்ணில் விண்வெளி ஆராய்ச்சி குறித்தான பணிகள் அதிகமாக நடைபெறவில்லை. இந்த நிலையில் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்த உடன் அதில் பல்வேறு பணிகளை தமிழக மாணவர்கள் செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் சிக்கனமாக செயற்கை கோலை செய்து முடிக்க முடியும் இதன் மூலம் தமிழகத்தில் குலசேகரபட்டினத்தில் அமையும் ராக்கிட் ஏவுதளத்தின் இந்தியாவிற்க்கு திருப்புமுனையாக அமையும் இவ்வாறு தெறிவித்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
மறைக்கப்படுகிறதா தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு? - அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைகளால் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!
மறைக்கப்படுகிறதா தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு? - அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைகளால் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Embed widget