மேலும் அறிய

" வண்டியில் ஏறு , எங்க போனும் நான் இறக்கி விடுகிறேன் " பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்

இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் , மும்பை விமான நிலையத்தில் கைது

" வண்டியில் ஏறு , எங்க போனும் நான் இறக்கி விடுகிறேன் " பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்

பாண்டிச்சேரியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் , சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் தங்கி பெசன்ட் நகரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், 30.01.2025 அன்று காலை, வேலைக்கு செல்வதற்காக, பெசன்ட்நகர், தாமோதரபுரம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் பெண்ணை பின் தொடர்ந்து வந்து பின்னர் இருசக்கர வாகனத்தை அப்பெண்ணின் முன்பு நிறுத்தி ‘‘வண்டியில் ஏறு, எங்கு செல்ல வேண்டுமோ இறக்கி விடுகிறேன்‘‘ என கூறி உள்ளார்.

உடனே, அப்பெண் ‘‘யார் நீ ? எதற்காக வரவேண்டும் , முடியாது‘‘ எனக் கூறி அங்கிருந்து செல்ல முயன்ற போது , அந்த நபர் மேற்படி பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு , அவரது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாகவும், பாதிக்கப்பட்ட பெண் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

குற்றச் செயலில் ஈடுபட்ட நபர் கோபால் ( வயது 41 ) என்பதும் குற்ற சம்பவத்திற்கு பின்பு வெளிநாட்டில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்ததின் பேரில், நபரின் விவரங்கள் குறித்து Lookout Circular தயார் செய்து விமான நிலையத்திற்கு அனுப்பி நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து , தேடி வந்த நிலையில் கோபால் 21.12.2025 அன்று சீனாவிலிருந்து, விமானம் மூலம் மும்பைக்கு வந்த போது பிடித்து வைத்துள்ளதாக மும்பை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சாஸ்திரி நகர் காவல் நிலைய காவல் குழுவினர் உரிய சட்ட நடவடிக்கைகளுடன் மும்பை விமான நிலையம் சென்று, இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவான கோபால் ( வயது 41 ) என்பவரை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட கோபால் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

சட்ட விரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 5 நபர்கள் கைது. 160 உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்.

சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் ஐ.ஒ.சி. யார்டு அருகே கண்காணித்து, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 5 நபர்களை விசாரணை செய்து, அவர்களை சோதனை செய்த போது, அவர்கள் உடல் வலி நிவாரண மாத்திரைகள் மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.

அதன் பேரில் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த கணேஷ் (எ) பிளாக்கேட் ( வயது 29 ) , சந்தோஷ் (எ) கொக்கு ( வயது 25 ) , கார்த்திக் (எ) மொட்டை கார்த்திக் ( வயது 23 ) , ஆனந்தகுமார் (எ) E.B.ஆனந்த் ( வயது 23 ) , நதீம் ( வயது 22 ) ஆகிய 5 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 160 எண்ணிக்கைகள் கொண்ட NITRAZEPAM உடல்வலி நிவாரண மாத்திரைகள், மாத்திரைகள் விற்பனைக்கு பயன்படுத்திய 1 Dio இருசக்கர வாகனம் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் சந்தோஷ் (எ) கோக் என்பவர் ஆர்.கே. நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது கொலை, போதை பொருள் வழக்கு உட்பட 8 குற்ற வழக்குகளும், கார்த்திக் (எ) மொட்டை கார்த்திக்  மீது 6 குற்ற வழக்குகளும், ஆனந்தகுமார் (எ) E.B.ஆனந்த் மீது  ஒரு குற்ற வழக்கும், நதீம் மீது 2 குற்ற வழக்குகளும்  உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 5 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளில் அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளில் அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளில் அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளில் அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
200 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்... செல்போன் ஆக்கிரமிப்பு காலத்திலும் அசத்தும் கிராம மக்களின் சரித்திர நாடகம்
200 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்... செல்போன் ஆக்கிரமிப்பு காலத்திலும் அசத்தும் கிராம மக்களின் சரித்திர நாடகம்
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
Embed widget