மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம் : கொலை முயற்சியால், படுகாயம் அடைந்து குணமடைந்த கவுன்சிலர்.. பால்குடம் எடுத்த பகுதி மக்கள்
கவுன்சிலர் குணமடைந்து வீடு திரும்பிய தொடர்ந்து பால்குடம் எடுத்த அப்பகுதி மக்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருகே வி.ஆர்.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் வீரா என்கிற வீரபத்திரன் (34), இவர் அப்பகுதியில் மிக செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்தார். வீரபத்திரன் மீது ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், குன்றத்தூர், சோமங்கலம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீ பெரும்புதூர் பேரூராட்சி 11-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தலைமை அறிவித்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக நகர செயலாளர் சதீஷ்குமாரின் மனைவி சாந்திக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்தார்.
இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வீரா ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே நின்று கொண்டிருந்தபொழுது. மூன்று பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பைக்கில் இருந்து இறங்கி வீராவை சரமாரியாக தலை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த வீரா ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்று வந்த வீரா பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் 11-வது வார்டு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த கங்கை அம்மனிடம் மன உருக்கத்துடன் வீரா நல்ல முறையில் குணமடைந்து வீடு திரும்பினால் நாங்கள் பால்குடம் எடுக்கிறோம் என்று வேண்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது 11-வது வார்டு கவுன்சிலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் வெகு திரளான பெண்கள் சுட்டெரிக்கும் வெயிலில் வி.ஆர்.பி சத்திரம் விநாயகர் கோவிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் நடந்து வந்து கங்கை அம்மனுக்கு பால்குடம் எடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
பல குற்ற வழக்குகளில், சம்பந்தப்பட்ட வீரபத்திரன் குணமடைந்த தொடர்ந்து அப்பகுதி மக்கள் அவருக்காக பால்குடம் எடுத்த சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
திரை விமர்சனம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
for smartphones
and tablets
and tablets
வினய் லால்Columnist
Opinion