![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
காஞ்சிபுரம் அருகே முக்கியசாலை துண்டிப்பு; தரைப்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை
தொடர் கனமழை காரணமாக செய்யாற்றில் 3500 கன அடி நீர் செல்வதால் வெங்கச்சேரி- மாகரல் தற்காலிக தரைப்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை
![காஞ்சிபுரம் அருகே முக்கியசாலை துண்டிப்பு; தரைப்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை kanchipuram heavy rain 3500 cubic feet of water flowed into the river, blocking the passage of heavy vehicles on the Venkacherry- Magarel temporary footbridge காஞ்சிபுரம் அருகே முக்கியசாலை துண்டிப்பு; தரைப்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/14/033d02b542a65ecfe09e6fe036524ec31668429429309109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
![காஞ்சிபுரம் அருகே முக்கியசாலை துண்டிப்பு; தரைப்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/14/9b6bc29c3b59344d53b49e6807b88d1d1668429388144109_original.jpg)
![காஞ்சிபுரம் அருகே முக்கியசாலை துண்டிப்பு; தரைப்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/14/fa9543c415cd822d2741ba89faaf6ca11668429409874109_original.jpg)
தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்குள் 8 மாவட்டங்களில் ஆங்காங்கே இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, சிவகங்ககை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 14.11.2022 மழையின் காரணமாக குன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் (மாங்காடு உட்பட) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக மயிலாடுதுறையில் இன்று பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
காற்றழுத்த தாழ்வு பகுதி
நேற்று வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக - கேரள பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிகளில் செல்லக்கூடும்.
இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)