மேலும் அறிய

குழந்தைகள் கொலை வழக்கில் சிறைசென்ற பிரியாணி அபிராமியின் சகோதரர் தற்கொலை : காரணம் இதுதான்..!

சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறைசென்ற அபிராமியின் சகோதரர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்

குன்றத்தூர் பிரியாணி அபிராமிக்கு அவ்வளவாக அறிமுகம் தேவை இருக்காது. தகாத நட்புக்காக பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தைகளை கொன்றதாக குற்ற வழக்கில் சிறை சென்றவர். சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை அங்கனீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜய் (30). இவரது மனைவி அபிராமி (25). தம்பதிக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர்.
பிரியாணி அபிராமி நினைவிருக்கிறதா ..! விரைவில் தீர்ப்பு வழங்குகிறது செங்கல்பட்டு நீதிமன்றம்..
அபிராமிக்கும், பிரபல பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரம் (25) என்பவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இது இருவீட்டாருக்கும் தெரிந்த காரணத்தால் இருவரையும் கண்டித்துள்ளனர். இருப்பினும் கள்ளக்காதல் கண்ணை மறைத்த காரணத்தால், இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தப்பியோடிய தாய் அபிராமி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம்  செப்டம்பர் மாதம் 2018-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரியாணி அபிராமி நினைவிருக்கிறதா ..! விரைவில் தீர்ப்பு வழங்குகிறது செங்கல்பட்டு நீதிமன்றம்..
 
தற்போது சென்னை புழல் சிறையில் இருக்கும் அபிராமி வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை இவ்வழக்கில் அபிராமியின் உறவினர்கள் உட்பட 22 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 21-பேரின் சாட்சியங்கள் நீதிமன்றத்தில் நிறைவேறியுள்ளது. மேலும் ஒரு சாட்சியின் மீது விசாரணையும், வழக்கின் மீதான வாதமும் நடைபெற உள்ளதால், இந்த வழக்கு நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. இதனால் பிரியாணி அபிராமியின் வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.பிரியாணி அபிராமி நினைவிருக்கிறதா ..! விரைவில் தீர்ப்பு வழங்குகிறது செங்கல்பட்டு நீதிமன்றம்..
 
 
இந்நிலையில் அபிராமியின் சகோதரர் 27 வயதான பிரசன்ன மணிகண்டன் மாங்காட்டை அடுத்த பெரிய பணிச்சேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் பெரம்பூரில் வசித்து வந்த வேலூரை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர் நீண்ட நேரமாக யாருடனோ செல்போனில் சண்டை போட்டு வந்ததாக தெரிகின்றது.
பிரியாணி அபிராமி நினைவிருக்கிறதா ..! விரைவில் தீர்ப்பு வழங்குகிறது செங்கல்பட்டு நீதிமன்றம்..
 
இந்நிலையில் இரவு நேரத்தில் தனது அறைக்கு சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாங்காடு போலீசார் சடலத்தை கைப்பற்றி  விசாரணை மேற்கொண்டனர். பெற்றோர் மற்றும் உறவினரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ,மணிகண்டன் சில ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், இதுபற்றி அறிந்த இரு தரப்பு பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது
பிரியாணி அபிராமி நினைவிருக்கிறதா ..! விரைவில் தீர்ப்பு வழங்குகிறது செங்கல்பட்டு நீதிமன்றம்..
கடந்த சில தினங்களுக்கு முன் இவர்களுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில் அபிராமி விவகாரம் இளம்பெண் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. இதனால் திருமண ஏற்பாடுகளை நிறுத்தியுள்ளனர். அந்த இளம் பெண்ணும் பிரசன்னாவின் தொடர்பைத் துண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரசன்னா நேற்று முன்தினம் அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாங்காடு போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் என்ன பிரச்சனைகளை சந்தித்தாலும் தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் ஏற்பட்டாலோ உளவியல் நிபுணர்களை நாடுங்கள். தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

தலைப்பு செய்திகள்

" யாரிடமாவது சொன்னால் கொலை செய்திடுவேன் " சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரியாணி கடை ஓனர்
" 1098 உதவியால் தப்பிய சிறுமி " சிறுமியை கொடுமைப்படுத்திய பெண்
முடிக்காத பணிகளுக்கு கல்வெட்டு போட்டவர்கள் பேசுவதா ? - செங்கோட்டையன் ஆவேசம்
முடிக்காத பணிகளுக்கு கல்வெட்டு போட்டவர்கள் பேசுவதா ? - செங்கோட்டையன் ஆவேசம்
ஊழல் குற்றச் சாட்டுகளுடன் தவெக-வில் இணைபவர்கள் 'தூய சக்தி' அல்ல - மாணிக்கம் தாகூர்
ஊழல் குற்றச் சாட்டுகளுடன் தவெக-வில் இணைபவர்கள் 'தூய சக்தி' அல்ல - மாணிக்கம் தாகூர்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget